அமைச்சுப் பதவியை துறந்து முஸ்லிம் சமுகத்திற்கு போராடத் தயார் – றிஷாத் பதியுதீன்
ஏ.எச்.சித்தீக் காரியப்பர் வில்பத்து விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அறிக்கை ஒன்றினைக் கையளித்துள்ளது. இந்த அறிக்கை நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது என அமைச்சிர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். நேற்று (06) கொழும்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம் காசிம் எழுதிய “வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றச் சவால்கள்“ மற்றும் வில்பத்து தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் கலந்துரையாடல்கள் ஆகியவற்றில் கலந்து…
