Headlines

நீதிமன்றம் தாக்குதல்; 34 பேருக்கு இன்று பிணை

வித்தியாவின்  படுகொலையினை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் நீதிமன்றம் தாக்கப்பட்டமை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 130 பேரில் 34 பேரை கடும் நிபத்தனையில் பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமையினைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் திகதி  பல்வேறு போராட்டங்கள் யாழ்.நகரில் முன்னெடுக்கப்பட்டதுடன்  அன்றைய நாள் முழு கதவடைப்புக்கும்  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நீதிமன்றத்தில் 9 ஆவது சந்தேக நபரான சுவிஸ்…

Read More

சிகிரியா ஓவியங்கள் அழியும் அபாயம்!

உலகப் புகழ்பெற்றதும் யுனெஸ்கோவினால் உலகின் வரலாற்று பாரம்பரியங்களுள் ஒன்றாக அடையாளம் காட்டப்பட்டதுமான இலங்கையின் சிகிரியா ஓவியங்கள் அழியும் அபாய நிலையில் இருக்கின்றன என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தொல்பொருளியல் திணைக்களத்தினால் இந்த ஓவியங்கள் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை. இதனாலேயே இந்த அழிவு அபாயம் ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்படுகின்றது. சிகிரியாவில் பல ஓவியங்கள் அழிவடைந்து விட்ட நிலையில் தற்போது 22 ஓவியங்களே இருக்கின்றன. இவையும் சரியான பராமரிப்பு இல்லாமல் அழிந்து போகும் நிலையில் உள்ளன. இலங்கையின் முக்கியமான சுற்றுலா தளமாக இருக்கும்…

Read More

ஒட்டுச் சுட்டான் ஓட்டுத்தொழிற்சாலைக்கு -அமைச்சர் றிஷாத் விஜயம்

– இர்ஷாத் றஹ்மத்துல்லா – முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஒட்டுச் சுட்டான் ஓட்டுத்தொழிற்சாலைக்கு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இன்று திங்கட்கிழமை விஜயம் செய்தார். நீ்ண்ட காலமாக இயங்காமல் உள்ள இந்த ஒட்டுத் தொழிற்சாலையினை மீள இயங்க வைக்கும் வகையில் தேவையான புனரமைப்பு மற்றும் இயந்திர கொள்வனவுகளுக்காக 20 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்,இரண்டாம் கட்ட நிதியாக 100 மில்லியன் ரூபாய்களை அடுத்த ஆண்டில் ஒதுக்கீடு செய்வதாகவும்,இதன்…

Read More

‘வடக்கு முஸ்லிம்கள்: வாக்களிப்பதற்கு மட்டும்தானா?’ (கட்டுரை)

ரஸீன் ரஸ்மின் எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்துவரும் வாரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. எனவே, நல்லாட்சியை நோக்கி செல்லும் இந்த புதிய அரசு ஆட்சியமைக்கும் காலத்தில் வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்ற ஆதங்கம் வன்னி முஸ்லிம்களின் உள்ளத்தில் இருந்தாலும் அடுத்த புதிய அரசாங்கத்திலாவது தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வன்னி முஸ்லிம்களும் பொதுத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வுன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும்…

Read More

மரிச்சிகட்டி முஸ்லிம்களின் சொந்த பூர்வீகத்தை பெற்றக்கொடுக்க கையெழுத்து வேட்டைக்கு துணைபுரிய வேண்டுகோள்….!

ரஸீன் ரஸ்மின் வுன்னி முஸ்லிம்களின கௌரவமான மீள்குடியேற்றத்திற்கும், மன்னார் மரிச்சிகட்டி முஸ்லிம்களின் சொந்த பூர்வீகத்தை பெற்றக்கொடுப்பதற்கும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து வேட்டை துணையாக இருக்க வேண்டும். எனவே, இலங்கையில் வாழும் வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை விரும்பும் அனைவரும் தமது ஒப்பங்களையும் இட்டு அந்த மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட சமூக அபிவிருத்திக்கான மக்கள் அமைப்பு இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையில் யுத்த…

Read More

சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக, உதவி கோரல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரமதுல்லாஹி வபரகாத்துஹு, இல, 40 பஹல கொறகோய, நாவாலபிட்டியை சேர்ந்த M. C. M. Rinoos வயது 30 என்பவர் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உள்ளார். இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்படி கண்டி பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள் கூறியுள்ளனர். இச் சத்திர சிகிச்சைக்காக சுமார் ரூபா 22 இலட்சம் செலவாகும் படி வைத்திய நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இப் பாரிய தொகையினை சாதாரண குடும்பத்தை சேர்ந்த எங்களால் திரட்ட…

Read More

சவூதி மன்னர் சல்மானின் ஆட்சியைக் கண்டு அஞ்சும் உலக ஏகாதிபத்திய நாடுகள்!

சவூதி அரேபியாவின் மன்னராக சல்மான் ஆட்சிக்கு வந்ததிலிருந்துபல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக ஏமனை ஆக்கிரமித்த தீவிரவாதிகளுக்கு எதிரானபோரில் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை இணைக்காமல்தனியாக அரபுப்படையை உருவாக்கி தீவிரவாத இயக்கத்தைநிர்மூலமாக்கியதிலிருந்தே சவூதி அரேபியாவுக்கு எதிரான பல்வேறுசம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஏமன் போரில் அமெரிக்காவைகழட்டி விட்ட சவூதி அரேபியாவை குளிரவைக்க சவூதி மன்னர் சல்மான்அவர்களை அமெரிக்காவுக்கு அழைத்த ஒபாமாவின் அழைப்பையும்சல்மான் ரத்து செய்த பிறகே இரண்டு குண்டுவெடிப்பு நடைபெற்றது. இறைவனின் அருளால் கடந்த ஐந்து நாட்களுக்கு…

Read More

ரோஹிங்கியா முஸ்லிம்களின் இன்னல்களை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி மலைசிய பிரதமருடன் சவுதி ஆலோசனை !

அண்மையில் கடலில் தத்தளித்த ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாடுகளில் ஒன்று மலைசியா அந்த நாட்டின் பிரதமர் தர்போது அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவிர்கு வருகை தந்துள்ளார் சவுதி அரேபியாவோடு நெருங்கிய தொடர்ப்பிலும் நல்ல உறவிலும் இருக்கும் நாடு மலைசியா சவுதி மன்னரின் பிரத்தியோக அழைப்பின் பெயரில் சவுதி வந்துள்ள மலைசியா பிரதமர் உடன் ரோஹிங்கிய முஸ்லிம் இன்னல்களை முடிவுக்கு கொண்டு வருவது பற்றியும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு பாது காப்பான வாழ்வை அமைத்து கொடுப்பது பற்றியும்…

Read More

சவுதி அரேபியாவில் மத அவமதிப்பு: குற்றம் செய்தவருக்கு 1000 சவுக்கடி தண்டனை!

சவுதி அரேபியாவை சேர்ந்தவர் ரைப் படாவி. இவர் இண்டர்நெட்டில் மதம் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அதை தொடர்ந்து இவர் மீது மத அவதிப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே அவர் கடந்த 2012–ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் படாவிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், 1000 சவுக்கடி தண்டனையும் விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து முதல் கட்டமாக 50 சவுக்கடி தண்டனை ஜெட்டாவில் பொதுமக்கள் முன்னிலையில் கடந்த ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்டது….

Read More

ஹாபில்களை கௌரவிக்கும் நிகழ்வு

07.06.2015 ம் திகதி காலை10.00  மணிக்கு மூதூர் ரவ்ளத்துள் ஜன்னாஹ் அரபிக் கல்லூரியின் புனித அல் குரானை மனனம் செய்த ஹாபில்கள் சுமார்  23 பேருக்கு பாராட்டி கொளரவிக்கபட்டதுடன் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வோடு புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது குறித்த அரபிக் கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அசேக் அப்துல்ஹசன் மதனி கண்ணியத்துக்குரிய உலமாபெருந்த்தகைகள் உட்பட முன்னால் கிழக்கு மாகாண முதல் அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான நஜீப் அப்துல் மஜீத் கிழக்கு…

Read More

மக்களின் நம்பிக்கையை இழந்தவர்கள் எமக்கு எதிராக பிரேரணை கொண்டு வருவது வேடிக்கை – அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க

  மக்­களின் நம்­பிக்­கையை இழந்த கூட்­ட­ணி­யினர் மக்கள் நம்­பிக்­கையை வென்ற எம்­மீது நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வது வேடிக்­கை­யா­னது என்று ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத் தேர்­தலை நடத்தும் பட்­சத்தில் மக்­க­ளுக்கு யார் மீது நம்­பிக்கை உள்­ளது. யார் மீது நம்­பிக்கை இல்லை என்­ப­தனை புரிந்­து­கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்­பிட் டார். பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­ டுள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு…

Read More

விவா­தத்­திற்கு இட­ம­ளி­யோம்

பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீது பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்­து­வ­தற்கு நாம் இட­ம­ளிக்க போவ­தில்லை. அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஒன்று அல்ல, நூறு நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைகள் கொண்டு வந்­தாலும் எமக்கு பிரச்­சி­னை­யில்லை. நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை தொடர்பில் தீர்­மானம் எடுக்கும் அதி­காரம் எம்­மி­டமே உள்­ளது என நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ தெரி­வித்தார். பிர­தமர் மாத்­தி­ர­மின்றி முழு அர­சாங்­கத்­தையும் வீட்­டுக்கு அனுப்­பி­விட்டு புதிய பாரா­ளு­மன்­றத்தை உரு­வாக்­கு­வதே எமது நோக்­க­மாகும். இந்ந சந்­த­ர்ப்பத்தில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை என்­பது அர்த்­த­மற்ற…

Read More