Headlines

தொடரும் அடை மழையால் 18 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நாசம்

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மாட்டத்தில் தற்போது பெய்துவரும் தொடர் அடை மழை காரணமாக 18 ஆயிரம் ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட பெரும்போக செய்கை சேதமடைந்துள்ளதாக மாவட்ட கமத்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் கே.சிவலிங்கம் தெரிவித்தார். இதனால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். விவசாய வயல் நிலங்கள் மழை வெள்ளத்தின் உடைப்பெடுத்து அள்ளுண்டு போய்யுள்ளன. இந்நிலையில் விவசாயிகளில் சிலர், ஏற்கனவே நெல் விதைத்த வயலில் மீண்டும் நெல்விதைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றதையும் அதானிக்க முடிகின்றது. கிரான், வெல்லாவெளி, கொக்கடிச்சோலை…

Read More

முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள்: சமந்தாவிடம் கையளித்தார் றிஷாத்

– ஏ.எச்.எம்.பூமுதீன் – இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றம் தொடர்பான உள்ளக விசாரணையினை 1985ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவரிடமே றிஷாத் பதியுதீன் நேற்று இந்த வேண்டுகோள் பத்திரத்தை கையளித்தார். உள்ளக விசாரணை என்பது ஐக்கிய நாடுகளின் பரிந்துரைக்கு அமைவானது. ஆனால், ஐக்கிய நாடுகளின் பரிந்துரையின் விசாரணைக்காலமானது 2001 லிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்…

Read More

வெளிநாட்டவர்களுக்கு தாராளமயமும் உள்நாட்டவர்களுக்கு நெருக்கடியும்

ஊழியர் சேம­லாப நிதியம் மற்றும் ஊழியர் நம்­பிக்கை நிதி­யத்தின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­தோடு வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு தாரா­ள­ம­யமும் உள்­நாட்­ட­வர்­க­ளுக்கு நெருக்­க­டி­யையும் அரசின் வரவு செலவுத் திட்டம் தோற்­று­வித்­துள்­ள­தாக கொழும்பு மாவட்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறு ப்­பினர் தினேஷ் குணவர்த்­தன தெரி­வித்­துள்ளார். அரசின் வரவு செல­வுத்­திட்டம் தொடர்­பாக தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது. 2016ஆம் ஆண்டு நாடு மிக மோச­மான விளை­வு­களை சந்­திக்கும் விதத்­தி­லான வரவு செலவுத் திட்­டத்­தினை அரசு முன்­வைத்­துள்­ளது. இதன் மூலம் ஐ.தே.கட்­சியின்…

Read More

கேஸ் விலை குறைப்பு

பட்ஜெட்டில் அறிவித்தபடி சமையல் கேஸ் விலை குறைப்பு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. அதன் முதல்கட்டமாக கொழும்பில், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1346 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது.

Read More

அரபி பேசியதால் விமானத்தை விட்டு தடுக்கப்பட்ட முஸ்லிம்கள்!

இரண்டு ஃபலஸ்தீன வம்சாவழி நபர்கள் விடுமுறைக்காக தங்கள் நாடு திரும்பும் பொழுது அரபியில் பேசிக்கொண்டதால் விமானத்தில் பயணம் செய்வதை விட்டு தடுத்து வைக்கப்பட்டனர். சக பயணிகள் சிலர் இவர்கள் அரபியில் பேசியதை கண்டு அச்சம் கொண்டதாக கூறப்படுகிறது. பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு இஸ்லாமோபோபியாவின் வளர்ச்சியாகத்தான் இதனை பார்க்க முடியும். 29 வயது நிரம்பிய மஹர் கலீல் என்பவரிடம் அவர் வைத்திருந்த வெள்ளை பெட்டியில் என்ன இருக்கிறது என்று அவரது சக பயணிகள் சிலர் சந்தேகத்துடன் கேட்டிருக்கிறனர். அதில்…

Read More

சபையில் ஏற்பட்ட அமைதியின்மையால் பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

சபையில் ஏற்பட்ட அமைதியின்மையால் பாரளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான 2 புத்தகங்களை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக, எதிர்க்கட்சி சுமத்திய குற்றச்சாட்டை அடுத்து சபையில் அமளி துமளி ஏற்பட்டுள்ளது. நிதியமைச்சர் கடந்த வௌ்ளிக்கிழமை (20) வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் போது ஒரு புத்தகம் வெளியிடப்பட்டதுடன், இன்று (23) மீண்டும் மற்றுமொரு புத்தகம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் எது சரியான புத்தகம் என பாரளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார். இரண்டு புத்தகங்களின்…

Read More

இஸ்ரேலின் கொடூரச்செயல் அம்பலம்

பாலஸ்தீன சிறுவர்களை கடத்திச் சென்று மூளைச்சலவை செய்து அவர்களை மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தும் இஸ்ரேல் ராணுவத்தின் கொடூரச் செயல் அம்பலமாகியுள்ளது. பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே சண்டை தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. மிக நவீன இயந்திர துப்பாக்கி மற்றும் விமான தாக்குதல் மூலம் இஸ்ரேல் ராணுவம் அப்பாவி பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதேசமயம், எத்தகைய ஆயுதமுமின்றி கற்களை மட்டுமே சண்டையின் போது பாலஸ்தீனர்கள் பயன்படுத்துகின்றனர். கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 20 வரையிலான…

Read More

காணாமல் போயிருந்த பிக்குகள் கண்டு பிடிப்பு

கடந்த 20 மணித்தியால காலப்பகுதியாக அரலகன்வில கந்தேகம காட்டு பகுதியில் காணாமல் போயிருந்த நான்கு இளம் பிக்குகள் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். நேற்று காலை 11 மணி அளவில் பிக்குகள் காணாமல் போயுள்ளதாகவும் அதற்கு பின்னர் இவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. பின்னர் இவர்கள் தொடர்பில் தகவல் கிடைக்காமையினால் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்….

Read More

இதுவரை காலமும் எந்த அரசும் ஒதுக்காத நிதி கல்விக்கு

இதுவரை காலமும் எந்தவொரு அரசாங்கமும் ஒதுக்காத அளவுக்கு அதி கூடியளவு நிதியை நாம் கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம்  தெரிவித்தார். கடந்த பல தசாப்தங்களாக வருடா வருடம் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் நான்கு மடங்கு நிதியை நாம் இவ்வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு ஒதுக்கியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். மாலபே முன்மாதிரி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு…

Read More

ஒஸ்மானியா கல்லூரியில் எல்லே விளையாடிய சமந்தா பவர்

இலங்கை வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர், நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரியின் புதிய கட்டடத்தை சமந்தா பவர் திறந்து வைத்துள்ளார். இவ்விழாற்கு பிரதம அதிதிகளாக வருகை தந்திருந்த சமந்தா பவர் மற்றும் சீ.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கட்டிடத்தை திறந்து வைத்துள்ளனர். இதன்போது, ஒஸ்மானிய கல்லூரி மாணவிகளுடன் சமந்தா பவர் எல்லே விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.

Read More

அப்பம் சாப்பிட்டுவிட்டு வரலாற்று தீர்மானம் எடுத்தேன்

இந்த நாள் எனக்கு மறக்க முடி­யாத நினைவு நாள். கடந்த ஆண்டு இதே­தி­னத்தில் அரசை விட்டு வெளி­யேறி ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்கும் செய்­தியை வெளி­யிட்டேன். அதற்கு முதல் நாள் முன்னாள் ஜனா­தி­ப­தி­யுடன் ஒன்­றாக இணைந்து அப் பம் சாப்­பிட்டு விட்டு வர­லாற்றுத் தீர்­மா­ன த்தை எடுத்தேன் என நவம்பர் மாதம் 21 ஆம் திக­தியை நினைவு கூர்ந்தார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, எனக்கு சிறப்­பான பின்­புலம் கிடை­யாது. பிர­புத்­துவ குடும்­பத்தை சேர்ந்­தவன் அல்ல. சாதா­ரண விவ­சாய குடும்­பத்தைச் சேர்ந்­த…

Read More

மீண்டும் அரசியலில் ஈடுபட விரும்புகின்றேன் – திஸ்ஸ

மீண்டும் அரசியலில் ஈடுபட எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி அஸ்கிரி விஹாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார். மீண்டும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட விரும்புகின்றேன். பல்வேறு அரசியல் தீர்மானங்கள் காரணமாக அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்குதல்களை எதிர்நோக்க நேரிட்டது. எனினும், அரசியலில் ஈடுபடவே விரும்புகின்றேன் என திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Read More