Headlines

இலங்கை விவகாரத்தில் ஒபாமா அக்கறை

அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா இலங்கை விவ­கா­ரத்தில் அதீத அக்­கறை செலுத்­து­வ­தாக தெரி­வித்­துள்ள ஐக்­கிய நாடு­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் நிரந்­த­ர­ வ­தி­வி­டப்­ பி­ர­தி­நிதி சமந்தா பவர், இலங்­கையில் தற்­போ­து­வ­ரையில் நல்­லி­ணக்கம் முழு­மை­யாக கட்­டி­யெ­ழுப்­­ப­ப்பட­வில்­லை­யெ­னவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். ஐக்­கிய நாடு­க­ளுக்­கான நிரந்­த­ர வதி­வி­டப்­பி­ர­திநிதி சமந்தா பவர் மூன்று நாள் உத்­தி­யோக பூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்­கைக்கு வரு­கை­தந்­துள்ள நிலையில் அவ­ரது விஜ­யத்தின் இறுதி தின­மான நேற்று இலங்­கையின் எதிர்­கா­லத்தின் தூண்­க­ளாக காணப்­படும் இளைஞ சமு­தா­யத்­தி­ன­ருடன் கலந்­து­ரை­யாடல் ஒன்றை மேற்­கொண்டார். கொழும்பில் ஒரு­மணி நேர­மாக இடம்­பெற்ற…

Read More

வரவு – செலவுத் திட்டம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்

அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவு திட்டத்தில் பொது மக்களின் அபிலாஷைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனவா? இல்லாவிட்டால் மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்த்துள்ளதா? என அறிந்து கொள்ள சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்து மாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்தை வலியுறுத்தினார். கொழும்பு பொரளை என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் சோஷலிச மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர்…

Read More

ஐ.எஸ் எவ்வாறு உருவானது.. ? விளாடிமிர் புடின் விவரிக்கிறார் (வீடியோ)

‘ஒபாமா அடிக்கடி ஐ.எஸ் பற்றி பேசுகிறார். ஓகே… இந்த உலகில் ஐ.எஸ் அமைப்புக்கு ஆயுத சப்ளை செய்வது யார்? சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியிருப்பவர்கள் யார்? இது போன்ற ஒரு குழப்பமான நிலையை அந்த நாட்டில் உருவாக்கியவர்கள் யார்? போரிடுபவர்களுக்கு ஆயுத சப்ளை செய்பவர்கள் யார்? ஆசாத் அரசுக்கு எதிராக போரிடுபவர்கள் உண்மையில் யார் தெரியுமா? அவர்கள் அனைவரும் கூலிப்படையினர். அவர்கள் அனைவருக்கும் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளம் தருபவர்கள் பக்கம் சார்ந்து போரிடும்…

Read More

எமக்கு வாக்களித்த மக்களை கௌரவப்படுத்தியுள்ளோம் – றிஷாத் பதியுதீன்

– அஸ்ரப் ஏ சமத் – அம்பாறை மாவட்டத்தில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டபோதும் அது சாத்தியப்படவில்லை. அப்படியிருந்தும் நாம் எமக்கு வாக்களித்த மக்களை கௌரவப்படுத்தியுள்ளோமென அக்கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்ருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். கிரைபைட் லங்கா பிறைவட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி மஜீத் தனது கடமைப் பொறுப்புக்களை நேற்று கையேற்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர்…

Read More

எவன்காட் நிறுவனத்தின் நடவடிக்கைகளில், தடங்கள் இல்லை

எவன்காட் நிறுவனத்தின் நடவடிக்கைகளில், கடற்படையினர் தலையிட்டமையினால் அந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளில் எந்தவித தடங்களும் இல்லை என்று கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது. இன்று கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது, அதன் தலைவர் பீ.ஐ. அப்டின் தெரிவித்தார்.

Read More

ஜி.எல் நிதி மோசடி விசாரணை பிரிவில்!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் வாக்கு மூலம் ஒன்றை வழங்க, காவல் துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகினார். அமைச்சு பொறுப்பில் இருந்த போது இடம் பெற்ற முறை கேடு தொடர்பாக, அவர் வாக்கு மூலம் வழங்க வந்ததாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

Read More

கசினோ மட்டுமா சூது. ‘ருஜுனோ’ சூதாட்டம் இல்லையா?

– ஜே.ஜி.ஸ்டீபன், ப.பன்னீர்செல்வம் – கசினோவுக்கு வரியை அதிகரித்துள்ள அரசாங்கம் “ருஜுனோவு”க்கு வரியை நீக்கியுள்ளது. ஏன் கசினோ மட்டுமா சூது. ருஜுனோ சூதாட்டம் இல்லையா என ஜே.வி.பி. எம்.பி நளின்த ஜயதிஸ்ஸ நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். சர்வதேச பிச்சைக் காரர்களாக இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் பிச்சையெடுக்கும் பொருளாதார கொள்கை மாற்றப்பட வேண்டும் எனக் கூறியோர் இன்று வரவு செலவு திட்டம் மூலம் மீண்டும் சர்வதேச பிச்சைக்காரர்களாக மாறியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

Read More

அமைச்சரின் பெயரை வைத்து பணம் வசூலித்த பெண் கைது

விவசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகாரையின் பெயரை வைத்து பணம் வசூலித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சரின் பெயரை கூறி ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி ஒருவரிடம் 4 முதல் 5 இலட்சம் வரையிலான பணத்தை மோசடி செய்துள்ளார். இது போன்று பலரிடம் பணம் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

வித்தியா கொலைச் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு மனு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் எஸ். லெனின்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் இன்றைய தினமும் மரபணு சோதனை அறிக்கை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே மாதம் 14 ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்….

Read More

சிரிய அகதிகளின் படகை கவிழ்க்க முயன்ற கிரீஸ் அதிகாரி (வீடியோ)

கிரீஸ் நாட்டின் கடலோர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர் ஐம்பத்தெட்டு சிரிய அகதிகளுடன் சென்ற காற்றடைத்த படகை கவிழ்க்க முயன்ற வீடியோ துருக்கி அரசால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. கூரிய முனை கொண்ட ஈட்டியால், சிரிய நாட்டு அகதிகளின் படகை வேண்டுமென்றே சேதப்படுத்திவிட்டார். இதன்பின்னர், கவிழத் தொடங்கிய அந்தப் படகிலிருந்த சிரிய அகதிகளை காப்பாற்றிய துருக்கி அரசு இந்த வீடியோவை சமீபத்தில் பகிர்ந்துள்ளது. வழக்கமாக தமது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் வீடியோவாக பதிவு செய்யும் துருக்கி அரசாங்கத்தின் இந்த வீடியோ இணைப்பின்…

Read More

பிரான்ஸ் மக்கள் குடிக்கும் தண்ணீரில் இரசாயனங்களை கலக்கும் ஐ.எஸ்?

பிரான்சில் மக்கள் குடிக்கும் தண்ணீரில்  இரசாயனங்களை கலந்து ஐ.எஸ் கள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பிருப்பதால் அந்நாட்டில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள Necker Paediatric மருத்துவமனையில், தொற்றுநோய் பாதுகாப்பு உறைகள், பாலித்தீன் பூட்ஸ், கையுறைகள் மற்றும் நுண்ணுயிரிகளிலிலுந்து காக்கும் முகமூடிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு உபகரணங்கள் திருடப்பட்டுவிட்டதால், ஐ.எஸ் கள் இதனை பயன்படுத்தி நகருக்கு குடிநீர் வினியோகிக்கும் நீர்நிலைகளில் மக்களை கொல்லும் இரசாயனங்களை கலக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு…

Read More

ஒரே ஒரு மாணவனுக்காக மட்டுமே செயல்படும் பள்ளி!

பிரித்தானியாவின் தீவு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளி அங்குள்ள ஒரே ஒரு மாணவனுக்காக மட்டுமே செயல்பட்டு வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள தீவுகளில் ஒன்றில் அமைந்துள்ள Skerries சமுதாய பள்ளியில் தான் Aron Anderson எனும் 10 வயது சிறுவன் படித்து வருகின்றான். ஆரோன் எனும் இந்த சிறுவனுக்காக மட்டுமே அங்கு இந்த பள்ளி செயல்பட்டு வருகின்றது. பள்ளி நாட்களில் சிறுவன் ஆரோன் விரும்பினாலும் இல்லை என்றாலும் ஆசிரியர்களின் முழு கவனமும் அவன் மீதே…

Read More