இலங்கை விவகாரத்தில் ஒபாமா அக்கறை
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இலங்கை விவகாரத்தில் அதீத அக்கறை செலுத்துவதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர், இலங்கையில் தற்போதுவரையில் நல்லிணக்கம் முழுமையாக கட்டியெழுப்பப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சமந்தா பவர் மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள நிலையில் அவரது விஜயத்தின் இறுதி தினமான நேற்று இலங்கையின் எதிர்காலத்தின் தூண்களாக காணப்படும் இளைஞ சமுதாயத்தினருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். கொழும்பில் ஒருமணி நேரமாக இடம்பெற்ற…
