வெள்ளை மாளிகைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்!
அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் உள்ள பத்திகையாளர்களின் அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த நிருபர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நேற்று காலை பத்திரிகையாளர்கள் அறையில், அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளரான ஜோஷ் எர்னஸ்ட் நிருபர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்நாட்டு சட்ட அமலாக்க பிரிவுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பத்திரிகையாளர்களின் அறையில் குண்டுவெடிப்பு நிகழப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த ரகசிய பிரிவு போலீசார் நிருபர்கள் அனைவரையும் அருகில் உள்ள ஈசன்ஹவர் கட்டிடத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச்சென்றனர்….
