Headlines

முஸ்லிம்களின் அபிலாசைகளை உள்வாங்காத எந்தத் தீர்வுகளும் பயன்தராது

– காதர் முனவ்வர் –   முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளும் நலன்களும் கருத்தில் எடுக்கப்படாத எந்தத் தீர்வு முயற்சிகளும் நடைமுறைச் சாத்தியமற்றதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பில் முஸ்லிம் புத்திஜீவிகள்,அரசியல் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது- சுமார் மூன்று தசாப்தகாலமாக இந்த நாட்டை ஆட்டிப்படைத்த யுத்தத்தின் கோரப்பிடிக்குள் தமிழ் மக்கள் மட்டும் சிக்கித் தவிக்கவில்லை, வடக்கு, கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம் சமூகமும் இந்த யுத்தத்தினால் அதேயளவு பாதிப்பையும்,…

Read More

சதாம் ஹுஸைனுக்கு, பிரியாணி என்றால் உயிர்..!

சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றியவர் இவர். தற்போது திருவல்லிக்கேணியில் ஃபாஸ்ட்புட் ஹோட்டல் வைத்திருக்கிறார். காஜா மொய்தீனை புதுப்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். சதாம் அரண்மனயில் தனது சமயல் அனுபவங்களைக் கூறத் தொடங்கினார். ”நான் சதாம் மாளிகையில் சமயல்காரராகச் சேர்ந்த முதல் நாள் சமயலறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே டிப்டாப்பாக உடை அணிந்த ஒருவர் என்னிடம் காலை மதியம் இரவுக்கான மெனுக்களை ஆர்டர் கொடுத்தார். தினமும் இப்படி… நானும் அவற்றைச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தேன். அவரை…

Read More

வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு

தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு நாளை வியாழக்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் காசோலை கையளிக்கும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது. நாளை வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதி வெளிவிவகார அமைச்சர் சுமார் 45 மில்லியன் ரூபா பெறுமதியான இழப்பீட்டுத் தொகையினை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கையளிக்கவுள்ளார்

Read More

அம்பாறையில் தரையிறங்கிய மர்மப்பொருள்? – விசாரணைகள் தீவிரம்

அம்பாறையில் அடையாளம் தெரியாத மர்மப்பொருள் ஒன்று தரையிறங்கியது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அம்பாறை -கோணகல பிரதேசத்தில் உள்ள வயலில், கடந்த 18ஆம் நாள் இரவு அடையாளம் தெரியாத பறக்கும் மர்மப்பொருள் ஒன்று தரையிறங்கியதாக கூறப்படுகிறது. மர்மப்பொருள் தரையிறங்கியதாக கூறப்படும் வயலில், விசித்திரமான அடையாளங்களை கண்டதாக தகவல்கள் வெளியானதையடுத்து, விசாரணைக்குழுவொன்று அங்கு சென்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கோணகல பிரதேசத்தைச் சேர்ந்த எல்.பி.சிறியாவதி என்பவர் தகவல் வெளியிடுகையில், “இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டு காலையில் வயலுக்குச் சென்று…

Read More

சந்திரிக்காவுக்கு, அமைச்சர் றிஷாத் அனுப்பிய கடிதம்

மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறையில் அமைந்துள்ள கடற்படைத்தளத்தினை வேறு இடத்திற்கு இடமாற்றுவதன் மூலம், அப்பிரதேச மக்களும், வர்த்தகர்களும் சுதந்திரமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும், அதேவேளை இப்பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் வந்து குடியமர முடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன், தேசிய ஐக்கியம், மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அமைப்பின் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைச்சர் றிஷாத்…

Read More

மீளக்குடியேறியுள்ள யாழ்.முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலைமை (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் தற்போது மீளக் குடியேறி எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி காணப்படும் முஸ்லிம் மக்களின் நிலைமையை இப்புகைப்படங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 1990 ஆண்டு இப்பகுதியில் வசதியாக வாழ்ந்த அம்மக்கள் விடுதலை புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருந்தனர். ஆனால் இவ்வெளியேற்றத்தை முன்வைத்து சில தரப்பினர் வாதப்பிரதிவாதங்களை சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ற ஏற்படுத்தி வருவதை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம். ஏன் அம்மக்களை மீண்டும் மீளக்குடியேற்றம் செய்ய முடியாது.சில தரப்பினர் இதனை தங்களது இலாப நட்டங்களிற்காக இச்செயலை செய்வதை  பின்னிற்கின்றனர் என்பதே உண்மை. அம்மக்கள்…

Read More

உலக திருகுர்ஆன் மனன போட்டியில் அல்ஜீரிய சிறுமி சாதனை!

அண்மையில் உலகம் தழுவிய முறையில் ஒரு திருகுர்ஆன் மனன போட்டி அல்ஜீரியாவில் நடை பெற்றது அந்த போட்டியில் உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த பல நுற்றுக்கணக்கான திருகுர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் கலந்து கொண்டனர். அந்த போட்டியில் யாரும் எதிர் பாராத விதத்தில் அல்ஜீரியாவை சாந்த சிறுமி வஹீபா முதல் பரிசை வென்று அனைவரையும் ஆச்சிரய பட வைத்தாள். சிறு வயதிலேயே திருகுர்ஆனை மனனம் செய்ததோடு உலக அளவில் நடை பெற்ற ஒரு போட்டியில் முதல்…

Read More

இலஞ்ச ஊழல் ஆணையத்தில் புகார்

புகையிரத திணைக்களம் , மின்சார சபை உட்பட பல நிறுவனங்கள் தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளின் 20 கோப்புக்கள் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு கையளித்ததாக  ஊழல் தடுப்பு முன்னனி தெரிவித்துள்ளது.

Read More

கிழக்கு மாகாண சபை அமர்வில் அமளி துமளி

– எம்.எஸ்.எம்.நூர்தீன்/ எப்.முபாரக் – கிழக்கு மாகாண சபை அமர்வில் ஏற்பட்ட அமளி துமளியினால் சபை அமர்வு அரை மணி நேரம்  ஒத்தி வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் கூடியது. இதன்போது,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அவசர பிரேரணை தொடர்பில் சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் மஞ்சுள பெர்ணான்டோ உரையாற்றிக் கொண்டிருந்தபோது சபையில் அமளி துமளி ஏற்பட்டது. இதன்போது,…

Read More

தம் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்குமாறு பிரபல அமைச்சர்கள் கோரிக்கை

தம் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சில அமைச்சர்கள் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோரே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவன்காட் பிரதானி எனக் கூறப்படும் நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் அல்லது அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய எவரிடம் இருந்தும் தேர்தலுக்கான நிதி அல்லது இலஞ்சம் கோரவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்து…

Read More

அரச நிறுவனங்களில் மின்சார முகாமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும்!

தனியார் துறைகளை போன்று அரச நிறுவனங்களிலும் மின்சக்தி, எரிசக்தி முகாமைத்துவ பிரிவொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய சக்தி ஆற்றலுக்கான விருது வழங்கும் விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மின்சக்தி, எரிசக்தி துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்களுக்கு அரச துறை மாத்திரமன்றி, தனியார் துறையினரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார். அத்துடன்,…

Read More

கடலில் மூழ்கி 18 வயது ஏறாவூர் இளைஞன் பலி

ஏறாவூர் – சவுக்கடி கடலில் மூழ்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக  ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More