Headlines

சவூதி – ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்து

வரலாற்றில் முதல்முறையாக சவூதி அரேபியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே அணுசக்தி துறையில் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்ற வாரம் செயின்ட்.பீட்டர்ஸ்பெர்க்கில் நடந்த சர்வதேச பொருளாதார வாரியத்தின் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி இருநாடுகளும் அணுசக்தி துறையில் பல்வேறு பிரிவுகளில் இணைந்து செயல்பட உள்ளது. குறிப்பாக, அணு உலைகளை உருவாக்குவது, அணுசக்தி எரிபொருளை மறுசுழற்சி செய்வது உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்பட உள்ளது. மேலும், கதிரியக்க ஆபத்துகள் நிறைந்த அணுக்கழிவுகளின் பிரச்சனைகளை சந்திப்பதிலும் இருநாடுகளும்…

Read More

“அலி பாபாவின் திருடர்கள், அரசை கைப்பற்ற முயற்சி”?

அலி பாபாவின் திருடர்கள் அரசாங்கத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஆட்சி செய்தவர்கள் இவ்வாறு ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட திருடர்கள் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மரத்தை வெட்டி விட்ட போதிலும் வேர்கள் இன்னமும் அகற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கப்படுவதாகத்…

Read More

9 பேர் இஸ்லாத்தை தழுவினர் ! (படங்கள் இணைப்பு)

– அப்துல் ஹமீது ஸாலிஹ் – இறைவனின் மாபெரும் கிருபையினால் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் நேற்று  முன்தினம்  (22.06.15) இஃப்தார் நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து அல்மனா பள்ளிவாசலில் மக்ரிப் தொழுகை நடைபெற்றது. அதன்பிறகு, பிலிப்பைன் நாட்டை சேர்ந்த 9 கிறித்தவ சகோதரர்கள் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அனைவரும் கலிமா ஷஹாதாவை முன்மொழிந்து உறுதிமொழி ஏற்றனர். மக்ரிப் தொழுகைக்கு வந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்களுக்கு சலாம்…

Read More

நூடில்ஸில் கலவையொன்று சேர்க்கப்பட்டுள்ளது தொடர்பில் உரிய பரிசோதனை – றிஷாத் பதியுதீன்

இலங்கையில் உள்ள நூடில்ஸ் உணவில் கலவையொன்று சேர்க்கப்பட்டுள்ளது தொடர்பில் வெளியான செய்தியனையடுத்து இத தொடர்பில் உரிய பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்தியாவில் மெகீ நுாடில்ஸ் தடை செய்யப்பட்டுள்ளதாகவும்,அதனை இலங்கைக்குள் கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் தாம் சுங்க பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் கூறினார். நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவிக்கையில் –…

Read More

ஐ. தே. க. ஆட்சியில் புதிய அரசியல் யாப்பு – கபீர் ஹாசிம்

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைகள் வாபஸ் பெறப்பட வேண்டும். அடுத்த பாராளுமன்றத்தில் ஐ.தே.க. ஆட்சியின் கீழ் 20 தாவது திருத்தத்தை நிறைவேற்ற முன்னுரிமை வழங்கி நிறைவேற்றுவதாக ஐ. தே. க செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார். மக்கள் ஆணையுடன் உருவாகும் அடுத்த ஐ. தே. க. ஆட்சியில் பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு புதிய அரசியல் யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்….

Read More

அமைச்சர் றிஷாதின் 20 தொடர்பிலான உரையின் தொகுப்பு

( தொகுப்பு-அபூ அஸ்ஜத் ) பிஸ்மில்லாஹிர் ரஹ்மான் னிர்ரஹீம்,   கௌரவ குழுக்களின் பிரதி தலைவர் அவர்களே !  இன்று அறிமுகம் செய்ய முயற்சிக்கின்ற தேர்தல் முறை விகிதாசார பிரதிநிதித்துவ முறையினுல் தொகுதிவாரித் தேர்தல் முறையாகும்.  வர்த்தமானி பிரகடனத்தின் படி 200 பிரதிநிதிகள் மாவட்ட விகிதசரததினுாடாகவும், 37 பேர் தேசிய பட்டியலினுாடாகவும்  நியமிக்கப்பட பிரேரிக்கப்படடிருகின்றது. அதே நேரம் மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்படுகின்ற 200 பேர்களுள் தொகுதி ரீதியாக தெரிவுசெய்யபடுகின்ற 145 பாராளுமன்ற உறுப்பினரும் அடங்குவர்.  அதாவது ஒரு…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலி – ஜனாதிபதி சந்திப்பு

அஸ்ரப் ஏ சமத் நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவின் வழிகாட்டலில் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் முயற்சியினால் பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை உள்ளடக்கியதாக வெலிகந்தை பிரதேச செயலாளர் பிரிவில் பாரிய சுதந்திர வர்த்தக வலயமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியல் பூங்காவும் அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் வெற்றிகரமாகபூர்த்தியடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் அழைப்பின் பேரில் வருகை தந்த…

Read More

பிரதமரின் நேற்றைய பாராளுமன்ற உரை

20ஆவது திருத்தச்சட்டமூலத்தை தாமதப்படுத்தும் எந்த நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை. சகல தரப்பினரதும் அபிப்பிராயங்களைப் பெற்று தேர்தல் மறுசீரமைப்பொன்றுக்குச் செல்லவே 20ஆவது திருத்தம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துகின்றோம். இந்த விவாதத்தில் ஆராயப்படும் விடயங்களின் அடிப்படையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அடுத்த நகர்வுக்குச் செல்லவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் =நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமிழ்த்…

Read More

கடல் நடுவே விமான நிலையம்!

– என்.மல்லிகார்ஜுனா – சுற்றிலும் கடல், நடுவில் விமான நிலையம். அதுவும், நம் நாட்டில்தான் இருக்கிறது என்றால், ஆச்சர்யமாக இருக்கிறதா? விமானம் தரை இறங்கச் சற்று நிமிடங்களுக்கு முன், விமானத்தில் இருந்து பார்த்தால், கடல்தான் தெரியும். முதன் முதலாகப் பார்ப்பவர்கள் மெர்ஸ்ஸலாயிடுவாங்க. ஆனால், அடிக்கடி சென்று வருபவர்கள் மட்டும் கடலின் அழகை ரசிப்பார்கள். சுற்றிலும் கடல் நீர் சூழ்ந்திருக்கும் இந்த ரன்வே, லட்சத்தீவில் உள்ள அகட்டி (Agatti) விமான நிலையமாகும். அதிசயமான விமான நிலையங்களில் இதுவும் ஒன்று….

Read More

அரசியலில் ஓய்வு பெற தயார் இல்லை – மஹிந்த

அரசியலுக்கு வந்தது தொடக்கம் இதுவரை தான் ஓய்வு எடுத்துக் கொண்டதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னை ஓய்வுபெறச் செய்ய பலர் முயற்சி எடுத்த போது தான் அதற்கு தயார் இல்லை என அவர் கூறியுள்ளார். ஊவா பரணகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Read More

12 ஓ.ஐ.சிகளுக்கு இடமாற்றம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

 நூடில்ஸ்களுக்கு இரசாயன சோதனை

சகல வகையான நூடில்ஸ்களையும் இரசாயன சோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலிருந்து சேகரிக்கப்படும் நூடில்ஸ்களின் மாதிரிகள் கைதுதொழில் தொழிற்நுட்ப நிறுவகத்துக்கு சோதனைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Read More