ஹுனுபிட்டிய பள்ளிவாசலில் சமயக் கடமைகளை தொடரலாம் : நீதிமன்றம் அனுமதியளிப்பு
திப்பிட்டிகொட, ஹுனுபிட்டிய மொஹியத்தீன் பள்ளிவாசலில் இடைநிறுத்தப்பட்டிருந்த அனைத்து சமயக் கடமைகளையும் இடையூறுகள் எதுவுமின்றி நடத்துவதற்கு கடவத்தை நீதிவான் நீதிமன்ற நீதவான் நேற்று உத்தரவு வழங்கியதுடன் கிரிபத்கொட பொலிஸினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கினை நிராகரித்தார். இதனால் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த சமய கடமைகளுக்கு சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹுனுபிட்டிய மொஹியதீன் பள்ளிவாசலின் மேல்மாடி சட்ட விரோதமாக நிர்மாணிக்கப்படுவதாகவும் இது ஒரு மத்ரஸாவேயன்றி பள்ளிவாசல் அல்ல. அதனால் சமயக் கடைமைகளைத் தொடர முடியாதெனவும் இது…
