Headlines

தேசிய அரசாங்கம் + அமைச்சரவை அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து அதன் அமைச்சரவையில் அதிகரிப்பு மேற்கொள்ளவென பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் ஆரோக்கியமான வாத விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனையை சவாலுக்கு உட்படுத்தி மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க கருத்து வெளியிட்டார். 19வது திருத்தச் சட்டத்தின்படி தேசிய அரசாங்கம் என்பது பாராளுமன்றில் அதிக ஆசனத்தை பெறும் கட்சி, பாராளுன்றில் உள்ள ஏனைய சுயாதீன குழுக்களுடன் இணைந்து அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இணைந்து அமைக்கும் அரசாங்கம் என…

Read More

உழல் அற்ற ஒரு நாட்டை காண்பதே, எனது குறிக்கோள் – பதவி விலகிய JVP எம்.பி.

தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணியினால் தனக்கு எந்த அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் எஸ். மாயாதுன்ன தெரிவித்துள்ளார். தன் மீது நம்பிக்கை வைத்து தன்னால், முன்னெடுக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர கட்சிக்குள் வெளியில் இருந்த தனக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியமைக்கு மக்கள் விடுதலை முன்னணிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான…

Read More

மத்தல விமான நிலையம், நெற் களஞ்சியமானமை – பாராளுமன்றத்தில் வெடித்தது சர்ச்சை

மத்தல சர்வதேச விமான நிலைய களஞ்சிய சாலைகளில் நெல் களஞ்சியப்படுத்தப்படுதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மத்தல விமான நிலைய களஞ்சிய சாலைகளில் நெல் களஞ்சியப்படுத்துவதற்கு எடுத்த செயற்பாடு மற்றும் நெல் அறுவடை தொடர்பில் விவாதிப்பதற்கு நேரத்தை ஒதுக்கி தருமாறு எதிர்க்கட்சிகள் கோரிநின்றன. இதன்போது எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மத்தல விமான நிலையத்தின் களஞ்சிய சாலையில் நெல் களஞ்சியப்படுத்துவதற்கு எடுத்த தீர்மானம் மற்றும் மத்தல விமான நிலையம் தொடர்பில் இரண்டு விவாதங்களை நடத்துவதற்கு இடமளிக்க…

Read More

சு.க.வின் மாநாட்டில் பங்கேற்காத முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சே­னவின் தலை­மையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 64ஆவது ஆண்டு பூர்த்தி மாநாடு நேற்று பொலன்­ன­று­வையில் நடை­பெற்றது. முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ உள்­ளிட்ட கட்­சியின் உறுப்­பி­னர்கள் அனை­வரும் இந்த மாநாட்டில் கலந்­து­கொண்­டனர். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 64வது ஆண்டு பூர்த்தி மாநாடு நேற்று பிற்­பகல் பொல­ந­று­வையில் கது­ரு­வெல ரஜ­ரட்ட நவோ­தைய மைதா­னத்தில் நடை­பெற்­றது. கட்­சியின் தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நடை­பெற்ற இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முன்னாள் தலை­வர்­க­ளான சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க…

Read More

5 ஆண்டுகளுக்குள் காசா, ஆட்கள் வசிக்க முடியாத இடமாக மாறிவிடும் – UNO

மத்திய கிழக்கின் காசாவில் தற்போதைய கெடுபிடிகள் நீடித்தால் ஐந்து ஆண்டுகளுக்குள் அவ்விடம் ஆட்கள் வசிக்க முடியாத இடமாக மாறிவிடும் என்று ஐநாவின் புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. இஸ்ரேல் விதித்துள்ள தடைகள் மற்றும் அண்மைய காலத்தில் அங்கு செய்யப்பட்ட மூன்று இராணுவ நடவடிக்கைகள் காரணமாக காசாவின் சமூகப் பொருளாதாரக் குறியீடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி தொடர்பான ஐநா நிறுவனமான UNCTAD எச்சரித்துள்ளது. காசாவை இஸ்ரேல் கைப்பற்றிய கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளில் முன்பில்லாத அளவில் நிலைமை மோசமாக உள்ளதாக…

Read More

விஹாரமகாதேவி பூங்காவில் இன்று முதல் இலவச WiFi

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இன்றுமுதல் இலவசமாக WiFi வசதியை பெற்றுக்கொடுக்க முடியும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணித்தியாலமும் இந்த WiFi வசதியினை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

பொருட்களின் விலைகள் குறையும் சாத்தியம்

சீன சந்தையின் வீழ்ச்சியினாலும் எரிபொருளுக்கான கேள்வியில் ஏற்பட்ட வீழ்ச்சியினாலும் இலங்கையில் பெரும்பாலான பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடையுமென நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் பால்மாவின் விலை பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளபோதும் இலங்கைச் சந்தையில் ஓரளவு விலைக்குறைப்பையே பால்மாவிற்கு மேற்கொள்ள முடியுமென நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள நுகர்வோர் அதிகார சபை அலுவலகத்தில் புதன்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஆர்.எம்.கே. ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.(tkl)

Read More

ஜனாதிபதியின் 64ஆவது பிறந்ததினம் இன்று!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64ஆவது பிறந்த தினம் இன்றாகும். ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பொலன்னறுவையில் நேற்றும் இன்றும் பல்வேறு சமய நிகழ்வுகள் நடந்தவண்ணமுள்ளன. ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி நேற்று இரவு (02) சோமாவதி தூபியின் முன்னால் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றது. கப்றுக் பூஜை மற்றும் கிரி ஆஹார பூஜை என்பன இன்றுகாலை நடைபெறுகின்றன. மேலும் பொலன்னறுவை கல்விஹாரையின் ரன்கொத் விஹாரையின் முன்னால் மற்றுமொரு பிரித் ஓதும் நிகழ்வும் நடைபெறுகிறது. இதேவேளை, பழுகஸ்கமனவில் உள்ள கத்தோலிக்க…

Read More

JVPயின் எஸ்.மாயாதுன்னே தனது பா.உ. பதவியை ராஜினாமா!

மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.மாயாதுன்னே பதவி விலகுவதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். முன்னாள் கணக்காய்வாளரான மாயாதுன்னே, இன்று (03) பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றிய பின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தவதாக  தெரிவித்தார். மாயாதுன்னே பதவி விலகியதும் அவ்விடத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியின் கே.டி.லால்காந்த அல்லது வசந்த சமரசிங்க பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராஜினாமா செய்வதும் செய்யாமல் இருப்பதும் அவரது சொந்த விருப்பம் என…

Read More

சென்ற முறை பாரா­ளு­மன்­றத்தில் 19 முஸ்லிம் உறுப்­பி­னர்கள்.. இம்முறை 15 பேர்தான்

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ள புதிய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை விழிப்­பூட்டும் செயற்­றிட்­டத்­தினை அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா மேற்­கொள்ள வேண்டும் என அம்­பாறை மாவட்ட உலமா சபையின் முன்னாள் செய­லா­ளரும், அர­சினர் ஆசி­ரியர் கலா­சாலை விரி­வு­ரை­யா­ள­ரு­மான அஷ்­ஷெய்க் எப்.எம்.ஏ.அன்ஸார் மௌலானா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்­துள்ளார். எட்டு விட­யங்­களை உள்­ள­டக்கி, அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைவர், செய­லா­ளரை விளித்து எழு­தப்­பட்­டுள்ள அவ­ரது கோரிக்கைக் கடி­தத்தின் பிர­திகள் தேசிய ஷுரா கவுன்சில், கிழக்கு முஸ்லிம் கல்விப்…

Read More

எதிர்கட்சி தலைவராக ஆர். சம்பந்தன் நியமனம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 8ஆவது  பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  ஆர். சம்பந்தன் சபாநாயகர் கரு  ஜயசூர்ய அவர்களால்  நியமிக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

Read More

தாஜுடீன் தொடர்பாக நீதிமன்றில் அறிக்கை!

ரகர் வீரர் வசிம் தாஜுடீன் விபத்துக்குள்ளான வாகனம், தமது நிறுவனம் விற்பனை செய்யவில்லை என கார் இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. குறித்த வாகனத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிறுவனமே இவ்வாறு நீதிமன்றில் நேற்று அறிவித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸிடம் அறிக்கை சமர்ப்பித்ததோடு, இவ் வாகன மாதிரி தங்கள் நிறுவனத்தின் ஊடாக நேரடியாக கொள்வனவு செய்ய முடியொதென குறிப்பிட்டுள்ளனர். உள்ளூர் இறக்குமதியாளர்கள் ஊடாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியில் இவ் வாகன…

Read More