Headlines

திருமணங்களின் எண்ணிக்கை குறைவு

இலங்கையில் பதிவுத் திருமணங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான கடந்த 4 ஆண்டு காலத்தில் நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு 2 லட்சத்து 314 பதிவு திருமணங்கள் நடந்துள்ளன. 2012 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 710 பதிவு திருமணங்கள் நடந்துள்ளன. 2013 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து…

Read More

புதிய அமைச்சர்கள் / அவர்களுக்கு கிடைத்துள்ள அமைச்சுக்கள் விபரம் இதோ…!

அமைச்சரவை முழு விபரம் வருமாறு, 01.ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் 02.ஜோன் அமரதுங்க – சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் 03.காமினி ஜயவிக்ரம பெரேரா – வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் 04.நிமல் சிறிபாலடி சில்வா – போக்குவரத்து அமைச்சர் 05.எஸ்.பி.திஸாநாயக்க – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் 06.டபிள்யு.டி.ஜே. செனவிரட்ன – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் 07.லக்ஷமன்…

Read More

முந்தைய அரசாங்கம் அட்டுழியங்களை ரசித்துக் கொண்டிருந்தது – றிஷாத்

-இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் – எதிர் கட்சி தலைவராக சம்பந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கு அகில இலஙகை மக்கள் காங்கிரஸ் கட்சியினதும், இலங்கை முஸ்லிம்களினதும் பாராட்டை தெரிவிப்பதாக கட்சியின் தேசிய தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமன றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர்  ரஹீம். கெளரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே, இந்த உயர் சபைக்குப் பிரதிச் சபாநாயகராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டமைக்காக உங்களுக்கு எனது கட்சி சார்பாக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  அதேபோல் பிரதிக் குழுக்களின் தலைவராக எங்களுடைய…

Read More

தொழுகைக்கு முதலிடம்…! அமைச்சரவை பதிவிப்பிரமான நிகழ்வுக்கு முஸ்லிம் அமைச்சர்கள் ”எப்சன்ட்”

புதிய அமைச்சரை நியமனம் வழங்கும் நிகழ்வுக்கு இன்று அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்க இருந்த றிஷாத்  பதியுதீன், ரவுப் ஹக்கீம் ,கபீர் ஹசீம் ,ஹலீம் ஆகியோர் வருகை தரவில்லை . சுப நேரம் குறிக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வுக்கு ஜும்மா தொழுகைக்கு முதலிடம் வழங்கி கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கோத்தாவிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக இரண்டாவது நாளாகவும் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். ரக்ன லங்கா ஆயுதக் களஞ்­சி­ய­சா­லையில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பிலேயே இவரிடம் வாக்கு மூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

சிறுநீரக நோய் பரவும் பிரதேசங்களுக்கு 2 வருடங்களில் சுத்தமான குடிநீர் : ஜனாதிபதி

எதிர்வரும் இரண்டு வருடக் காலப்பகுதியில் சிறுநீரக நோய்க்கு அதிகம் முகம் கொடுத்துவரும் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு அரசாங்கம் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஒரு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மெதிரிகிரிய தலாகொலவெல ஸ்ரீ சுதர்ஷனாராம விஹாரையில் நேற்று நடைபெற்ற சிறுநீரக நோயாளிகளுக்கான நாளொன்றுக்கு 24,000 லீட்டர் நீரை வழங்கும் இயந்திரமொன்றை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சிறுநீரக நோயை கட்டுப்படுத்துதல் தொடர்பில் விரிவான தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகக்…

Read More

சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் சிங்கள மக்களுக்கு என்ன செய்வாரோ அவையனைத்தையும் நான் செய்வேன் – சம்பந்தன்

ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் சிங்கள மக்களுக்கு என்ன செய்வாரோ அவையனைத்தையும் நான் செய்வேன் என்று புதிய நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக நேற்று வியாழக்கிழமை (03) தெரிவு செய்யப்பட்ட இரா. சம்பந்தன், தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவதாக நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை கூடியபோது சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். எதிர்க் கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டதன் பின்னர் நாட்டிலுள்ள சிங்கள மக்கள் குறித்த உங்களது…

Read More

பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சராகிறார் லக்ஸ்மன் கிரியால்ல….!

பாராளுமன்ற அவை தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியல்ல அவர்கள் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை பெருப்பேற்கும் நிகழ்வில் பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். இன்று நண்பகல் பன்னிரண்டு மணிக்கு இடம்பெறவுள்ள  அமைச்சரவை பெருப்பேற்கும் நிகழ்வில்  கண்டி மாவட்டத்தில் இம்முறை அதிகூடிய சாதனை விருப்பு வாக்குகளை பதிவு செய்த லக்ஸ்மன் கிரியல்ல பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

அனைவரிடத்திலும் ஒரு அன்பான வேண்டுகோள்!

படத்தில் காட்டப்பட்டுள்ள அஹமட்லெப்பை ஹாரூன் நௌசாட் என்ற சம்மாந்துறையைச் சேர்ந்த சகோதரரது கடவுச் சீட்டு கொழும்பில் வைத்து (All Countries) தவறவிடப்பட்டு விட்டது அல்லது தொலைந்து விட்டது. Passport No : N3072525 இதனைக் யாராவது கண்டெடுத்தால் கீழே வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி அறியத் தரவும் என்பதை அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம். இர்சாட்  : 0779441312 பசீர்  : 0770774465 நௌசாட் : 0779783559 வீட்டு முகவரி  No : 76/15/06,  Fowse Mawatha,  Sennal Girammam – 01,…

Read More

ரணில் விக்ரமசிங்க அனுப்பிய கடிதங்கள், மலசலகூட குழிக்குள் இருந்து மீட்பு (படங்கள்)

மொரட்டுவ பிரதான தபால் நிலைய மலசலகூட குழிக்குள் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமாக சாதாரண கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தேர்தலின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு கட்சியின் ஊடாக கட்சிகாரர்களுக்கு அனுப்பி வைத்த பல கடிதங்களும் அவற்றில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கடிதங்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, தராதரம் பாராது தண்டிக்குமாறு தபால் நிலைய அதிகாரிகளிடம் கோரியதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Read More

மூக்குடைபட்ட விமலும், கம்மன்பிலவும்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் நாடாளுமன்றில் கட்சித் தலைவர்களுக்கான சிறப்புரிமையை இழந்துள்ளனர். இந்த இரண்டு கட்சிகளையும் நாடாளுமன்றில் தனிக் கட்சியாக கருதுவதில்லை என பிரதான கட்சிகளின் தலைவர்களின் தீர்மானித்துள்ளனர். இருவரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மட்டும் கருதப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்களுக்கான வரப்பிரசாதங்கள் எதிர்காலத்தில் வழங்கப்படாது. இதன்படி> குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றில் முன்வரிசை ஆசனங்களையும் இழப்பார்கள்….

Read More

இந்த நாட்டில் மீண்டுமோர் அழிவைக் காண சிலர் துடிக்கின்றனர்– றிஷாத் பதியுதீன்

இந்த நாட்டில் மீண்டும் ஒரு அழிவைக் காண சிலர் துடிப்பது போல அவர்களின் பேச்சுக்கள் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்று (03) பாராளுமன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இனவாதம் தான் இந்த நாட்டிலே 30 வருடங்களாக இரத்த ஆறு ஓடுவதற்கு வழிவகுத்தது. யாரும் விரும்பி யுத்தத்தை ஆரம்பிக்கஇல்லை. இவ்வாறான யுத்தம் வருவதற்கு காரண கர்த்தாக்களாக, இன்று இனவாதக் கருத்துக்களைப் பேசியவர்களைப் போன்று, அன்று பேரினவாத சக்திகள் ஆட்சியைக் பிடிப்பதற்காக சுயநல கொள்கையோடு இனவாதக்…

Read More