Headlines

பொதுபல சேனா அமைப்பு ஒரு செத்த பாம்பு -அமைச்சர் மனோ கணேசன்

சிங்கள கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா அமைப்பு ஒரு செத்த பாம்புக்கு ஒப்பானது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சிங்கள கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா அமைப்பு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல மாவட்டங்களில் போட்டியிட்டது. ஆனால் சிங்கள சகோதரர்கள் மிகச் சரியான பதிலை அந்த அமைப்புக்கு வழங்கிவிட்டார்கள். எனவே அதனைப் பற்றி கருத்துக் கூற…

Read More

ஹெம்மாதகம பகுதியை தீ வைத்து எறிப்போம்- BBS

– ஊடகப்பிரிவு – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் முன்தினம் (06.09.2015) ஹெம்மாதகம நகரில் நடைபெற்ற இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் பொது பல சேனாவின் உறுப்பினர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாதகம கிளை சார்பில் நேற்றைய தினம் ஹெம்மாதகம க்ரீன் வீச் வரவேற்பு மண்டபத்தில் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் கலந்து…

Read More

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் நிகழ்வில் பொதுபலசேனா அடாவடி (video)

SLTJ சார்பில் நேற்று முன்தினம்(06.09.2015) ஹெம்மாதகம நகரில் நடைபெற்ற இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் பொது பல சேனாவின் உறுப்பினர்கள் அடாவடியில் ஈடுபட்ட போது பிடிக்கப்பட்ட வீடியோ

Read More

யானை தாக்கி ஊடகவியலாளர் பலி

மின்னேரியா – சமகிபுர  பகுதியில் காட்டுயானை தாக்கி ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சமகிபுர பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் புகுந்து  அட்டகாசம் செய்தமையை ஒளிப்பதிவு செய்ய சென்ற ஊடகவியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பிரியந்த ரத்நாயக்க என்ற 34 வயதுடைய  ஊடகவியலாளரே உயிரிழந்துள்ளார்.

Read More

ஐக்­கிய தேசியக் கட்­சியின் 69 ஆவது நிறை­வாண்டு விழா. பிர­தம அதி­தி­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி

ஐக்­கிய தேசியக் கட்­சியின் 69 ஆவது நிறை­வாண்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகமான சிறி­கொத்­தாவில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த நிகழ்­விற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தம அதி­தி­யாக வருகை தர­வுள்ளார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­மசிங்க தலை­மையில் இந்த நிறை­வாண்டு விழா காலை 9 மணிக்கு ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. ஐக்­கிய தேசிய கட்சி இலங்­கையின் முத­லா­வது பிர­தம மந்­திரி டி.எஸ் சேனா­நா­யக்­க­வினால் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதன்­போது எஸ்.டப்­ளியு.ஆர்.டி பண்­டா­ர­நா­யக்­கவும் அதே­கட்­சி­யி­லேயே இருந்தார். எனினும் 1951 ஆம்…

Read More

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சம்பந்தனை கைவிட மாட்டோம்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் ஒன்­றி­ணைந்து நாட்டில் எதிர்க்­கட்­சிக்­கான பணியை சரி­யாக செய்யும். எதிர்க்­கட்­சி­யாக செயற்­படும் போது எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சம்­பந்­தனை கைவி­ட­மாட்டோம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவரும் எதிர்க்­கட்சி பிர­தம கொற­டா­வுமான அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார். அவ­சி­ய­மான எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து செயற்­ப­டுவோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் நேற்று கட்சித் தலைமையகத்தில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர்…

Read More

எனது மனசாட்சி படி கடந்த காலங்களில் சரியாக செய்துள்ளேன்- றிஷாத் பதியுதீன்

– அபூ அஸ்ஜத் – எனது மனசாட்சி படி கடந்த காலங்களில் சரியாக செய்துள்ளேன்- றிஷாத் பதியுதீன் எனது மனசாட்சி படி கடந்த காலங்களில் சரியாக செய்துள்ளதாக தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த பாராளுமனற தேர்தலில் அதிகமான தமிழ் இளைஞர்கள் எனது வெற்றிக்கு பங்களிப்பினை செய்ததாகவும் கூறினார். தேசிய தொலைக்காட்சியான நேத்ரா தொலைக்காட்சியில்.(வெள்ளிக்கிழமை இரவு) 12 மணிவரை இடம் பெற்ற வெளிச்சம் அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு…

Read More

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்

இலங்கையின் பங்காளியாக முன்னின்று இலங்கை முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் நல்ல ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது தமது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக இலங்கை வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சில சிவில் அமைப்புக்களுக்கு பெறுமதிமிக்க பொருட்களை கையக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. 108,000 யூரோ பெறுமதியான மடிக்கணிணிகள் மற்றும் தொலைபேசிகள் உட்பட பல அலுவலக உபகரணங்கள்…

Read More

மத்தல விமான நிலையத்தில் குழப்பம் : 7 பேருக்கு நோட்டீஸ்

மத்தல விமான நிலையத்தில் குழுவாக இணைந்து குழப்பங்களை ஏற்படுத்தியதாக கூறப்படும் ஏழு பேரையும் எதிர்வரும் 4ஆம் திகதியன்று திஸ்ஸமாஹாரம நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, நேற்று நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஏழு பேரில் லுகம்வேர பிரதேச சபையின் முன்னாள் தலைவர், மத்தல விமான நிலையத்தின் நிர்வாக அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரியும் உள்ளடங்குவர். இதேவேளை, விமான நிலையத்தின் சேவையாளர்கள் நால்வரும்பிரதேசவாசிகள் இருவரும் திஸ்ஸமராம நீதிமன்றத்தினால் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Read More

சந்திரிக்கா – சுஷ்மா சந்திப்பு

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று  இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துள்ளார். இந்திய புதுடெல்லியில் நடைபெறுகின்ற சர்வதேச இந்து- பௌத்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சந்திரிக்கா அங்கு சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று ஆரம்பமாகிய இந்த மாநாடு 3 நாட்கள் நடைபெற்று நாளை நிறைவடையவுள்ளது. இதேவேளை சந்திரிக்கா நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஷெய்க் அப்துல்லாஹ் பில் அல் நஹ்யான் இலங்கை வருகை

–எம்.ஐ.அப்துல் நஸார்– ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஷெய்க் அப்துல்லாஹ் பில் அல் நஹ்யான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நேற்று  (03) இலங்கை வந்துள்ளார். இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை புதிய அரசாங்கத்தின் கீழும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அரசாங்கத்தின் உயர்…

Read More

மாயா­துன்ன வெற்றிடத்துக்கு பிமல் நியமனம்

இலங்­கையின் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தில் இரு தினங்கள் மாத்திரமே எம்.பி.யாக­வி­ருந்த ஜே.வி.பி.யின் தேசியப் பட்­டியல் எம்.பி.யான சரத் மாயா­துன்ன நேற்று கன்னி உரை­யொன்றை நிகழ்த்தி விட்டு எம்.பி பத­வியை இரா­ஜி­னாமா செய்துகொண்டதையடுத்து அவருடைய இடத்துக்கு பிமல் ரட்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கம்பஹாவில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிமல் ரட்நாயக்க தேசியப் பட்டியல் உறுப்பினராக  ஜேவிபி நியமித்துள்ளது. நாட்டில் இடம்­பெறும் ஊழல்­க­ளுக்கு எதி­ராக போராடும் கட்சி யாக ஜே.வி.பி. உள்­ளது. அக்­கட்­சி­யினர் இம்­முறை தேர்­தலின் போது கூட நாட்டில் ஊழலை ஒழிக்க மக்­களின்…

Read More