Headlines

வாஸ் குணவர்தனவிற்கு மரண தண்டனை! BREAKING NEWS

கொழும்பு, பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹம்மட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு விசேட மேல் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளர்த்து. இதன் படி முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் ஏனைய நால்வரையும் குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்து இருந்த அதேவேளை சற்று முன்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக…

Read More

ரஷிய மக்கள் துருக்கிக்கு சுற்றுலா செல்ல தடை

சிரியாவில் ஐ.எஸ். கள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த ரஷிய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது. ரஷிய விமானம் தங்கள் நாட்டு எல்லைக்குள் ஊடுருவியதால் சுட்டு வீழ்த்தியதாக துருக்கி கூறியது. ஆனால், ரஷியா இதை மறுத்து வருகிறது. இந்த சம்பவத்தால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகி உள்ளது. துருக்கிக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்போவதாக ரஷிய அதிபர் புதின் கூறினார். இதன் முதல் கட்டமாக துருக்கி மீது பொருளாதார தடை விதிக்க ரஷியா முடிவு செய்துள்ளது….

Read More

கல்விக்கான நிதியொதுக்கீடு நடைமுறைச்சாத்தியமற்றது! அனுரகுமார

எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியொதுக்கீடு நடைமுறைச்சாத்தியமற்றது என்று அனுரகுமார திசாநாயக்க விமர்சனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அனுரகுமார திசாநாயக்க, அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் மொத்த தேசிய உற்பத்தியில் 5.41 வீதம் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது நடைமுறைச்சாத்தியமற்றது. எனினும், கல்விக்காக முன்னுரிமை கொடுக்கப்படுவது அத்தியாவசியமானது என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இன்று…

Read More

கொண்டையாவுக்கு ஐந்து கோடி ரூபா நட்டஈடு வேண்டுமாம்!

ஐந்து கோடி ரூபா நட்டஈடு கோரி கொண்டயா எனப்படும் துனேஸ் பிரியசாந்த உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த நஷ் ஈடு பொலிஸ் உத்தியோகத்தர்களிடமே கோரப்பட்டுள்ளது. மினுவன்கொட கொட்டாதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சேயா செவ்தம்னி என்ற ஐந்து வயது சிறுமி கொலையுடன் எவ்வித தொடர்பையும் பேணாத தம்மை சில நாட்கள் தடுத்து வைத்து மனிதாபிமானமற்ற ரீதியில் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் நட்டஈடு வழங்க வேண்டுமென கோரியுள்ளார். பொலிஸ் மா அதிபர், புலனாய்வுப்…

Read More

மாணவர்கள் தாக்குதல் விவகாரம்: பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

 கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்களின் தாக்குதலுடன் தொடர்புடைய  கடைநிலை பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு அறிவித்துள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நேற்று தெரிவித்தது. மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரிக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக, நேற்று வியாழக்கிழமை(26) நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் என்.ஆரியதாஸ தெரிவித்தார். இறுதி முடிவு, நேற்று வியாழக்கிழமை(26) இடம்பெற்ற விஷேட கூட்டத்தில்…

Read More

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து பதவியை காத்துக் கொள்ளுங்கள்: ஜோன் அமரதுங்க

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை பாதுகாத்து கொள்ளுமாறு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக 15 மில்லியன் ரூபாவை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது குறித்து சிந்தித்தாவது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக கை உயர்ந்துங்கள். வரவு செலவுத்…

Read More

கொழும்பில் 18 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

கொழும்பில் சில பகுதிகளில் 18 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்தள்ளது. இதற்கமைய கோட்டை, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, முல்லேரியா , கொலன்னாவை ஆகிய பகுதிகளில் நாளை சனிக்கிழமை (28) காலை 11 மணியிலிருந்து 18 மணித்தியாலங்கள் குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மாணவன் தற்கொலை: வட மாகாண பாடசாலைகள் மூடப்பட்டது!

வட மாகாண பாடசாலைகளுக்கு இன்று (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டமைக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கடிதம் தொடர்பில் இருவேறு கோணங்­களில் விசா­ரணை

யாழ்.கோண்­டாவிலில் புகை­யி­ர­தத்தின் முன் பாய்ந்து பாட­சாலை மாணவன் தற்­கொலை செய்­து­கொண்ட விவ­காரம் தொடர்பில் சிறப்பு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவண் குண­சே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார். 18 வய­தான ராஜேஸ்­வரன் செந்­தூர ன்என்ற மாணவன் தற்­கொலை செய்­து­கொண்­டுள்ள நிலையில் அவ­ரது சட­லத்­துக்கு அருகே காணப்­பட்ட அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்­திய கடிதம் தொடர்பில் விஷேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக அவர் சுட்­டிக்­கட்­டினார். குறித்த அப்­பி­யாசக் கொப்­பியில் இருந்த அந்த கடி­த­மா­னது உண்­மையில் தற்­கொலை…

Read More

குர்ஆனில் கண்களின் அதிசயம்!

வைரங்கள் போல் மின்னிடும் அதிசயங்கள் பலவற்றை வான்மறை நெடுகிலும் காண முடிகிறது. கண்டும் காணாமல். கண்டதை ஆராயாமல் அலட்சியப்படுத்தும் மனிதனின் அவல நிலையை கண்டு, எப்படித்தான் அவனால அலட்சியப்படுத்த முடிகிறது? என அல்லாஹ்வே தன் அருள் மறையில் வியப்போடு குறிப்பிடுகிறான். ‘நமது அத்தாட்சிகளை கண்டும் (காணாமல்) அவர்கள் அலட்சியப்படுத்திச செல்கின்றனர். (அல்-குர்ஆன் 54:2) எனவே, நாம் படிப்பினை பெறவும்,நமது நமடபிக்கையை வலுப்படுத்தவும் நாம் குர்ஆனில் பளிச்சிடும் அதிசயங்களை தொடர்ந்து காண்போம். ஒருவன் தன் கண் எப்படி இருக்கிறது?…

Read More

சவூதி வாகன ஓட்டுநர் கவனத்திற்கு

சவூதியில் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் போக்குவரத்து உயர் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில் ” சவூதியில் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களின் (licence) ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு திரும்பவும் அந்த நபர்கள் அனைவருமே ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு அனுப்பி வைக்கபடுவார்கள். வாகனம் ஓட்ட கத்துகிட்டு திரும்பவும் ஓட்டுநர் உரிமமத்திற்கு விண்ணபிக்க வேண்டும்” – என்று கூறியுள்ளார். கடந்த சில வருடங்களில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் அதிகம் இளையதலைமுறை. எனவே, இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் மேலும்தெரிவித்தார்.

Read More

கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்படவில்லை: மஹிந்த

ஆளும் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் அதிக நிதி கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், அவ்வாறு நிகழவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொடிகாவத்த – கோஹிலவத்த பிரதேசத்தின் விஹாரை ஒன்றில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார். நாங்கள் உண்மையின் இது தொடர்பில் முதலில் மகிழ்ச்சி அடைந்தோம். ஆறு சதவீதமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், எனினும் பின்னர் அது தொடர்பில்…

Read More