Headlines

நிர்க்கதியான இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர்

நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து படகில் எற்பட்ட இலத்திரனியல் கோளாறு காரணமாக நிர்க்கதியான 3 இந்திய மீனவர்களை மீட்டு இந்திய கடலோர காவற்படையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தின் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு இந்திய கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலத்திரனியல் கோளாறு காரணமாக நிர்க்கதியான குறித்த மீனவர்களை மீட்டதுடன், குறித்த தகவலை இந்திய கடலோர காவற்படையினரிடம் அறிவித்து, குறித்த மீனவர்களையும் அவர்களுடைய படகையும் சர்வதேச கடல் எல்லையில் வைத்து ஒப்படைத்தள்ளனர்.

Read More

கொழும்பு துறைமுகத்தில் ஜப்பான் கடற்படை கப்பல்கள்

ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் இரண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளன. குறித்த கப்பல்கள், இரண்டு  நாடுகளுக்கு இடையிலான நட்பு உறவின்  அடிப்படையில் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜே.எம்.எஸ்.டி.எப்.இனசுமா மற்றும்  சுசுட்சுக்கி போன்ற கப்பல்களே இவ்வாறு இலங்கை வந்துள்ளது. இதேவேளை குறித்த கப்பல்களில் வந்துள்ள ஜப்பான் கடற்படையினர், இலங்கை கடற்படையினருடன் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

Read More

2763 படையினர் சேவை நீக்கம்

பொது மன்னிப்பின் கீழ் 2763 படையினர் சட்டரீதியாக பதவியிலிருந்துநீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் உத்தியோகபூர்வமாக விலகுவதற்குகடந்த திங்கட்கிழமை முதல் பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய கடந்த 3 நாட்களில் 2574 இராணுவ சிப்பாய்கள் சட்டரீதியாக இராணுவத்திலிருந்து விலகுவதற்கு முன்வந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர்பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். அத்துடன் விமானப்படை சிப்பாய்கள் 118 பேரும், கடற்படை சிப்பாய்கள் 71பேரும் குறித்த இந்தக் காலப் பகுதியில் சட்டரீதியாக விலகுவதற்கு முன்வந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்….

Read More

படைகளிலிருந்து தப்பியவர்களுக்கு பொதுமன்னிப்பு

பாதுகாப்பு படைகளில் இருந்து தப்பிச்சென்ற, முறையான விடுமுறை எடுக்காமல் வீடுகளுக்குச் சென்று சேவைக்கு திரும்பாத வீரர்களுக்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதிமுதல் 21ஆம் திகதி வரை இந்த பொதுமன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக முப்படைகளும் அறிவித்துள்ளன. பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து முப்படைகளின் உயரதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

Read More

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு!

நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, “உரக” மற்றும் “தக்சிமயேயமா” எனும் இரு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை நேற்று (11) வந்தடைந்துள்ளன. இதன் போது கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படையினர் அவற்றை வரவேற்றனர். அத்துடன் அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் நல்லெண்ணம் மற்றும் நட்பின் வெளிப்பாடாக நட்புரீதியான தயூளக்கட்டுப் பந்தாட்டப் (பேஸ் போல்) போட்டியில் இலங்கை கடற்படையின் பேஸ்பால் அணியுடன் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் அவர்கள் எதிர்வரும் பதினான்காம் திகதி இலங்கைக்கான விஜயத்தினைப் பூர்த்தி செய்து…

Read More

யோஷித தொடர்பில் கடற்படை விசாரணை

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்குப் பின்னர், யோஷித ராஜபக்ஷ தொடர்பில், கடற்படையினரின் விசாரணை ஆரம்பிக்கப்படும் எனவும் அதுவரையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் படைத்தரப்பு அறிவித்துள்ளது. கடற்படையின் கெடெட் அதிகாரியாக அவர் சேர்வதற்கான தகுதிகள் இருந்தனவா? அவை தொடர்பில் படைத்தரப்பு ஆய்வு செய்துள்ளதா? மற்றும் அவரது கடவுச்சீட்டு ஆகியன தொடர்பிலேயே, கடற்படையினர் விசாரணை நடத்தவுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல், கடற்படையிலிருந்து யோஷித ராஜபக்ஷ, பணிநீக்கம்…

Read More

அமெரிக்கா கடற்படையுடன் இலங்கை கடற்படை கூட்டு பயிற்சி

இலங்கை கடற்படையினரும் அமெரிக்கா கடற்படையினரும் இணைந்து கூட்டு பயிற்சியிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப் கூட்டு பயிற்சியில் இலங்கை கடற்படையில் 20 பேர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதன் போது இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் ஆயுத உபகரணங்களை நீக்குவது தொடர்பாக பயிற்சி வழங்கப்படுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

சுஜாதா, டீர் மற்றும் வருண கொழும்பு துறைமுகத்தில்

இந்திய கடற்படைக்குச் சொந்தமான மூன்று கப்பல்கள் பயிற்சி சுற்றுலாப் பயணமாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த 3 கப்பல்களும் இன்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 கப்பல்களையும் இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றுள்ளனர். இந்திய கடற்படைக்கு சொந்தமான சுஜாதா, டீர் மற்றும் இந்திய கடலோர காவற்படையினருக்கு சொந்தமான வருண ஆகிய 3 கப்பல்களு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இரு நாடுகளுக்குமிடையிலான கூட்டு…

Read More

அமெரிக்காவின் மேலும் பல போர்க்கப்பல்கள் இலங்கை வரும்!

அமெரிக்க கடற்படையின் மேலும் பல கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற்படையணியின் கட்டளை அதிகாரி வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின் தெரிவித்தார். அமெரிக்க -இலங்கை படைகளுக்கிடையில் நடத்தப்பட்ட முதலாவது அதிகாரிகள் மட்டப் பேச்சுக்களின் போதே, அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற்படையணியின் கட்டளை அதிகாரியான வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் கட்டளைக் கப்பல் கடந்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தது.இதன்…

Read More

கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது அவன்ட்கார்ட்! 4 நாட்களில் 8 கோடி ரூபா வருமானம்

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் பணிகள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் நான்கு நாட்களில் எட்டு கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின, அண்மையில் அவன்ட்கார்ட் நிறுவனத்தின் பணிகள் கடற்படையினரிடம் ஒப்படைத்திருந்தார். தேசியப் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாட்டு கப்பல்களுக்கு ஆயுதங்களை வழங்குதல் மற்றும் களஞ்சியப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினர் எட்டு கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ளனர். கடந்த நான்கு நாட்களில் இவ்வாறு வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ்ட் அட்மிரல் ரவிந்திர…

Read More

அவன்கார்ட் ஆயுதங்களை கடற்படையினர் பொறுப்பேற்றனர்

அவன்கார்ட் நிறுவனத்தின் பொறுப்பில் இருந்த ஆயுதங்களை கடற்படையினர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். கடற்படையினரிடம் அவன்கார்ட் நிறுவனத்தின் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில், காலி துறைமுக சூழலில் அவன்கார்ட் மற்றும் மஹாநுவர ஆகிய கப்பல்களில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் தளபாடங்களை கடற்படையினர் இன்று பரீட்சிததனர். கடற்படையின் உயர் அதிகாரி ஒருவரும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் ஆயுதங்களை பொறுப்பேற்றுக்கொண்டன.

Read More

ஜப்பானின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு விஜயம்

நல்லெண்ண அடிப்படையில் இரண்டு ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன. ஜேஎஸ் மகிநமி மற்றும் ஜேஎஸ் சுசுநமி ஆகிய கப்பல்களே கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன. நேற்று வந்த இந்த கப்பல்களை சில நாட்களில் இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையும் ஜப்பானும் கடல்எல்லை தொடர்பில் இணக்கத்துடன் செயற்படும் நோக்கிலேயே இந்த கப்பல் விஜயம் இடம்பெறுகிறது. ஏற்கனவே 2011இல் ஜப்பானின் 8 கப்பல்கள் இலங்கைக்கு வந்தன. 2012இல் 12 கப்பல்கள் வந்தன.-2013இல் 11 கப்பல்களும் 2014 இல் 8…

Read More