Headlines

புதிய உடைகளை கழுவாமல் அணிபவர்களுக்கு..?

நாம் வாங்கும் உடைகளில் துணிகளைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் தேங்கியிருக்கலாம் என சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோல்ம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. புதிய உடைகளில் 100 இற்கும் மேற்பட்ட இரசாயனங்கள் தங்கியிருப்பதாகவும், இந்த உடைகளின் சலவைக்கு முன்னும், பின்னும் அதிலிருக்கும் இரசாயனங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், முக்கியமாக கினோலோன்ஸ் மற்றும் அரோமேட்டிக் அமைன்ஸ் என்ற இரு இரசாயனங்கள் பொலியஸ்டர் உடைகளில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரசாயனங்கள் டெர்மடிடிஸ் என்கிற அலர்ஜி தொடங்கி இன்னும் மோசமான…

Read More

சிசுவை காப்பாற்றிய நாய்! (மனதை நெகிழவைக்கும் படங்கள்)

வீதியில் வீசப்பட்ட சிசுவொன்றை நாயொன்று வாயால் கௌவ்விச் செல்லும் படமொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமானில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியில் யாரோ ஒருவரால் வீசப்பட்டிருந்த தொப்புள் கொடியுடன் காணப்பட்ட சிசுவொன்றை நாயொன்று தூக்கிச் சென்று அருகில் இருந்த வீட்டு வாசலில் போட்டுள்ளது. மேலும் வாசலில் நின்று குரைத்துமுள்ளது.  வீட்டில் உள்ளோர் வெளியே வந்து பார்த்த தும் சிசுவொன்று வாசலில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவ்வீட்டிலிருந்தோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் குழந்தை உயிரோடு…

Read More

மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அடிபணிந்த அரசாங்கம் – அமைச்சரவை பத்திரம் வருகிறது

உயர் தேசிய கணக்காய்வு டிப்ளோமா பாடநெறியை பட்டப்படிப்பாக உயர்த்துவதற்காக வழங்கப்பட்ட பழைய சுற்றுநிருபத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி. உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு, அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. உயர்கல்வியமைச்சின் செயலாளர் டி.சி.திசாநாயக்க  இந்த தகவலை வெளியிட்டார். எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார். அண்மையில் உயர் தேசிய கணக்காய்வு பாடநெறியை பாதுகாக்கும் ஒன்றியம் உயர் கல்வியமைச்சின் முன்பாக அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. கணக்காய்வு உயர் கற்றை நெறியை, வணிகவியல்…

Read More

உலக நாடுகள் அனைத்தும் எங்களுடன் இணைந்துள்ளது! – ராஜித

உலக நாடுகள் அனைத்தும் இன்று எங்கள் நாட்டிற்கு நிதி உதவி வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர், அன்று எங்கள் நாட்டிற்கு எதிராக செயற்பட்ட மேற்கத்திய நாடுகள் உட்பட இன்று எங்களுடன் இணைந்துள்ளது. இலங்கை தற்போது சர்வதேசத்தினுள் பெயர் ஒன்றினை பெற்றுகொண்டுள்ள நிலையில் ஜனவரி 08ஆம் திகதி ஏற்பட்டட புரட்சியுடன் உலகினை வெற்றி கொள்ள முடிந்துள்ளது….

Read More

அதியுயர் வலுவுடைய மின்சாரக் கம்பம் வாகனத்தின் மீது விழுந்ததில் மூவர் பலி

அதியுயர்  வலுவுடைய மின்சாரக் கம்பமொன்று வாகனத்தின் மீது முறிந்து விழுந்ததில் மின் சாரம் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் காலி ஜின் தொட்யில் இன்று இடம்பெற்றுள்ளது.

Read More

மாணவர்கள் மீதான தாக்குதல் : பாராளுமன்றில் சர்ச்சை

கொழும்பு வோட் பிளேஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் தற்போது பாராளுமன்றில் விவாதம் நடைபெறுவதாகவும் இதனால் சர்ச்சை நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

வவுனியா வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வு

ஐந்து வருடங்களாக புனர்வாழ்வு அமைச்சராக இருந்தீர்கள் எனவும்   முஸ்லிம்களை குடியேற்றவில்லை என்று தன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். ஐந்து வருடங்களில் நாலரை வருடங்கள் இந்த நாட்டிலே சமாதானம் இருக்கவில்லை. ஆறு மாதங்கள் தான் சமாதானம் இருந்தது. முகாமிலே தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று இலட்சம் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யாமல் இருபத்தையாயிரம் முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்திருந்தால் நான் ஒரு மனிதனாக இருக்க முடியாது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கைத்தொழில், வணிக் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வவுனியாவில்…

Read More

யாழ்ப்பாணத்தில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம்  – உடுவில் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகத்திடமாக வீடொன்று பூட்டப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர். சம்பவத்தில் 65 வயதுடைய பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

துமிந்தவுக்கு நீதிமன்றம் அனுமதி

வெளிநாட்டில் சிகிச்சை பெற்று கொள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய விசேட நீதிபதி குழு  அனுமதி வழங்கியுள்ளது. தனது தலையில் சத்திர சிகிச்சையொன்றை சிங்கப்பூரில் மேற்கொள்ள உள்ளதாகவும் இதனால்  நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றத்தின் அனுமதியை கோரி இருந்தாகவும் அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். இம் மாதம் 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பவர் 2 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சிங்கப்பூரில்…

Read More

ஜனக பண்டார தென்னகோனை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜனக பண்டார தென்னகோனை நவம்பர் 11ம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனக பண்டார தென்னக்கோன் 1999ல் நடந்த கொலை சம்பவம், தொடர்பில்,  அக்டோபர் 6ம் தேதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வந்த வந்த ஜனக பண்டார தென்னக்கோன், இன்று நீதிமன்றில் முன்னிலையாகியமை குறிப்பிடத்தக்கது.

Read More

முஸ்லிம்களை வெளியேற்றியது இனச்சுத்திகரிப்புத்தான் – சுமந்திரனின் பதிலடி

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது சட்ட வரைவிலக்கணத்துக்கமைய, இனச் சுத்திகரிப்பே ஆகும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பலவந்தமாக ஓர் இனத்தை ஒரு பிரதேசத்திலிருந்து வெளியேற்றியமையை, இனப் பாதுகாப்பு எனக் கூறுவது, அவர்களை மேலும் அவமானப்படுத்தும் செயலாகும் எனவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையானது இனப்பாதுகாப்பு என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் தெரிவித்த கூற்றுக்களுக்கு…

Read More

பாராளுமன்ற வீதியினை மறிக்கும் மாணவர்களின் போராட்டத்திற்கு தடை!

பாராளுமன்ற வீதிக்குள் பிரவேசித்தல் மற்றும் அதனை தடை செய்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றின் ஊடாகவே இத்தடையுத்தரவு காவல்துறையினரால் பெறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆணைக்குழுவுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து , இன்று முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கே இவ்வாறு காவல்துறையினர் தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர். இதேவேளை இன்று ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்னிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை ஆர்ப்பாட்டப் பேரணி…

Read More