Headlines

அநுராதபுரம் நைட் கிளப் உரிமையாளர் கொலை! காட்டுக்குள் விருந்து வைத்துக் கொண்டாடிய கொலையாளிகள்

அநுராதபுரம் நைட் கிளப் உரிமையாளரின் கொலையை அடுத்து, அருகேயிருந்த காட்டுப் பிரதேசத்தில் கொலையாளிகள் விருந்து வைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அநுராதபுரத்தில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் சிராவஸ்திபுர தேக்குமரக் காட்டுப் பகுதியில் இந்த விருந்து வைபவம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கொலையாளிகள் கொலைக்குப் பயன்படுத்திய கோடரி, தடிகள் மற்றும் இரத்தம் தோய்ந்த ஆடைகள் என்பவற்றை தீயிட்டு எரித்துள்ளனர். பின்னர் கோடரியின் இரும்பு பாகம் மண்ணிற்குள் புதைக்கப்பட்டுள்ளது. தற்போது பொலிசார் இந்தக் கோடரியைக் கண்டுபிடித்துக்…

Read More

பொலிசாருக்கு எதிராக குவியும் முறைப்பாடுகள்! ஆணைக்குழுவுக்குத் திண்டாட்டம்

பொலிசாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாடுகள் குவியும் நிலையில் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு பெரும் திண்டாட்டத்தை எதிர்நோக்கியுள்ளது. தேசிய அரசாங்கம் முன்வைத்த 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு உருவாக்கப்பட்டு, தற்போது செயற்படத் தொடங்கியுள்ளது. சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்ட போதிலும், அதன் அலுவல்களை இலகுபடுத்தும் நோக்கில் இலங்கையின் பல்வேறு பாகங்களில் ஒன்பது கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரம் நிறைவு பெறாத நிலையில்…

Read More

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்

நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 39 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் இரண்டு பிக்குமார் மற்றும் மாணவியரும் உள்ளடங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கடுமையான காயங்களுக்குட்பட்டுள்ளனர். அவர்களுக்கு வெறும் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் இன்று கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். எனினும் இச்சம்பவத்தின் போது சாதாரண காயங்களுக்குள்ளான ஆறு பொலிசார் கொழும்பு…

Read More

பாரிய நிதி நெருக்கடிக்குள் அரசாங்கம்!

ஆளும் அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடு காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருவதை தவிர்த்து வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரண, ஜனவரி மாதத்திற்கு பின்னர் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில்…

Read More

முன்னாள் கடற்படைத்தளபதிக்கு கலாநிதிப்பட்டம்

கடற்படையின் முன்னாள் தளபதி ஜயநாத் கொலம்பகேவுக்கு கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இரத்மலானையில் அமைந்துள்ள கொத்தலாவல இராணுவப் பல்கலைக்கழகத்தில் அவர் தனது கலாநிதிப் பட்டத்துக்கான ஆராய்ச்சியை பூர்த்தி செய்திருந்தார். இலங்கை கடற்படையினர் கடற்பிராந்தியத்தில் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்த விடயத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அவர் சமர்ப்பித்த கட்டுரை பல்கலைக்கழகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து, ஜயநாத் கொலம்பகேவுக்கு கலாநிதிப் பட்டம் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஜயநாத் கொலம்பகே கடற்படையின் தளபதியாக இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தது…

Read More

மஹிந்தவைப் போல் மாற மாட்டேன்: மனோ கணேசன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போல் தான் செயற்படப்போவதில்லை என தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். சீதுவைப் பகுதியில் நேற்று  நடைபெற்ற காணாமல் போனோரின் ஒன்றியத்தின் 25 வது ஒன்றுகூடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  ‘1989 ஆம் ஆண்டு தெற்கில் இடம்பெற்ற கலவரத்தின் போது கடத்தப்பட்ட சிங்கள கைதிகளைப் பாதுகாப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றது. இதன்போது ஒரு சிறந்த மனித உரிமை…

Read More

மஹிந்த தரப்பு விளம்பரத்திற்கு பாரிய தொகை செலவு

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயகவுக்கு எதிரான விளம்பரங்களுக்கு மஹிந்த தரப்பு பாரிய தொகையொன்றைச் செலவிட்டுள்ளது. பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது நேற்று இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் மிஸ்டர் பிரபாகரன் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை வைத்து சிங்கள மக்கள் மத்தியில் மைத்திரி- சந்திரிக்கா தரப்புக்கு எதிரான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சந்திரிக்காவின் உரையிலிருந்து மிஸ்டர் பிரபாகரன்…

Read More

கொண்டயா ஒரு குற்றவாளியே – ருவான் குணசேகர

கொண்டயா என்ற துனேஷ் பிரியசாந்த சார்பில் குரல் கொடுத்து வரும் சட்டத்தரணி உந்துல் பிரேமரத்னவின் செயற்பாடுகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவற்துறையின் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் காவற்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். கொட்டதெனியாவ சிறுமி சேயா கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த துனேஷ் பிரியசாந்தவுக்கு எதிராக சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் இல்லை என…

Read More

ஹம்பாந்தோட்டையிலுள்ள சில எதிா்கட்சி அரசியல் வாதிகள் – சஜித் பிரேமதாச

– அஸ்ரப் ஏ சமத் – ஹம்பாந்தோட்டையில் பல்லிமல்ல சந்தியில் கடந்த ஒக்டோபா் 12ஆம் திகதி சுத்தமான குடிநீா் பெற்றுத் தருமாரு ஹம்பாந்தோட்டையில் உள்ள சில எதிா்கட்சி அரசியல் வாதிகள் அரசியல் லாபம் கருதி மக்களை ஆர்பாட்டத்தில் ஈடுபடுத்தினாா்கள் . இம் மக்களின் குடி நீா்த்திட்டத்திற்காக ஏற்கனவே என்னால் சமா்ப்பிக்கப்பட்ட அமைச்ரவைப் பத்திரத்தில் 2149 லச்சம் ருபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சா் சஜித் பிரேமதாச கூறினாா். இன்று (29) வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டிலேயே…

Read More

காரமுனை கிராமத்திற்கு செல்லும் பாதையில் அவதிப்படும் மக்கள்

– ஹைதர் அலி – மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள காரமுனை கிராமத்திற்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள மியான்குள வீதியில் கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று ஆகிய இரு பிரதேச சபைகளினாலும் நாளாந்தம் கொட்டப்படுகின்ற குப்பைகள் காரணமாக வீதி போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்த நிலையில் காணப்படுகின்றது. இவ்வீதியால் விவசாயிகள், மீன் பிடியாளர்கள், பன்ணை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரால் இரவு பகலாக பயன்படுத்தக்கூடிய  வீதியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இப்பிரதேசத்தில் ஒழுங்கற்ற முறையில்…

Read More

மியன்மார் தேர்தலில் முஸ்லிம்களுக்கு இடமில்லை!

அமைதிக்கான நோபல் விருது வென்ற ஆங் சான் சுகியி தலைமையிலான மியன்மாரின் பிரதான எதிர்க்கட்சி வரும் நம்பரில் நடைபெறும் பொதுத் தேர்தலில் திட்டமிட்டு முஸ்லிம் வேட்பாளர்களை புறக்கணித்திருப்பதாக அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். சுகியி தனது ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியில் முஸ்லிம்களை தவிர்க்குமாறு அறிவுருத்தி இருப்ப தாக அந்த சிரேஷ்ட உறுப்பினர், பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையில் ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். மியன்மாரில் கடு ம்போக்கு பௌத்த தேசியவாதிக ளின் முஸ்லிம்…

Read More

கட்டார் நாட்டின் புதிய தொழில் சட்டம்

– நவ்பர் முஹம்மது – கட்டாரில் வசிக்கும் நீங்கள் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கட்டார் நாட்டின் புதிய தொழில் சட்டம் இன்று ( 28/10/2015)) நாட்டின் கௌரவ அமீர் தமீம் பின் ஹமத் அல தானி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சில விபரங்களை இன்றைய “அல் வதன்” பத்திரிகையில் இருந்து அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.1.கபாலத் முறை நீக்கப்பட்டு தொழில் வழங்குனர், தொழில் பெறுனர் என்ற முறைமை கொண்டுவரப்பட்டுள்ளது. 2. குறூஜ் எனும் வெளிநாட்டு தொழில் பெறுனர்கள் நாட்டை…

Read More