Headlines

இந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள் நிறுவனம்

இந்திய ஆராய்ச்சியாளர்கள் உள்பட 4 பேர் கொண்ட குழுவின் தொழில்நுட்பத்தை அனுமதியின்றி திருடி பயன்படுத்தியதற்காக ஆப்பிள் நிறுவனம் ஆயிரத்து நானூறு கோடி ரூபாயை இழப்பீடு வழங்க வேண்டுமென அமெரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைகழகத்தின் கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் குரிந்தர் சோஹி, இந்தியாவிலுள்ள பர்டே பல்கலைகழகத்தின் மின்னணுதுறை பேராசிரியர் டெரனி விஜயகுமார். இவர்கள் இருவரும் ராஜஸ்தானிலுள்ள பிட்ஸ் பிலானி பல்கலைக்கழகத்தில் மின்னணு தொழில்நுட்பத்தில் பி.டெக்., பட்டம் பெற்றவர்கள். இவர்களை உள்ளடக்கிய 4 பேர் கொண்ட…

Read More

ஈரான் மீதான பொருளாதார தடை நீக்க ஒபாமா உத்தரவு

ஈரானுக்கும், வளர்ச்சியடைந்த, 6 நாடுகளுக்கும் (அமெரிக்கா,பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜெர்மனி) இடையே, நடைபெற்று வந்த அணு ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை, கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி ஏற்பட்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்தது. அமெரிக்கா தலைமையிலான நாடுகளுக்கு இடையிலான ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், ஈரானுக்கும் அமெரிக்காவிற்குமான உறவு மேம்பட்டுள்ளது. இதனை அடுத்து ஈரான் மீதான விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை நீக்க தேவையான…

Read More

தரச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

– அஸ்ரப் .ஏ சமத் – லங்கா எக்ரோ  பொரோசிசிங் தனியார் லிமிட்டெட் நிறுவனத்திற்கு  எஸ்.எல்.ஏ மற்றும் ஜ.எஸ்.ஓ 22000 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந் நிகழ்வு 18ஆம் திகதி கொழும்பு  சினமன் கிராண்ட்  கோட்டலில் நடைபெற்றது. இக் கம்பனி  1970 களில் ஒரு அரிசி, மா அரைக்கும் ஆலையாக ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது வத்தளையில் மாபெரும் ஏற்றுமதி உள்ளுர்  பருப்பு, சோளம், குரக்கன் போன்ற பல வா்த்தக தானியங்களை கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் உள்ளுரிலும் “அங்கா்…

Read More

மின்னல் தாக்குதலுக்குள்ளாகி இரு மீனவர்கள் பலி

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திகிலிவெட்டை ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இரு மீனவர்கள் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் திங்கட்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். இதில் கோ.கிருஸ்ணரூபன் (வயது 26), இ.புலேந்திரன் (வயது 35) ஆகிய இருவருமே ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். தற்போது சடலம் கிராம சேவகரின் அனுமதியுடன் உறவினர்களினால் மீட்கப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலைக்கு பொலிசாரின் உதவியுடன் எடுத்து…

Read More

முஸ்லிம் பாடசாலைக்கு இரண்டி மாடிக்கட்டிடம்: ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார்

பொலன்னறுவை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கான புதிய இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் சொந்த மாவட்டமான பொலன்னறுவை மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பொலன்னறுவை எழுச்சி (பிபிதெமு பொலன்னறுவ) என்றொரு அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வார இறுதிநாட்களில் பொலன்னறுவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இத்திட்டத்தின் கீழான அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது. பொலன்னறுவையில் தங்கியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வைபவங்களின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இத் திட்டத்தின் கீழ்…

Read More

ஐ.நா.பிரேரணையால் நாட்டுக்கு பாதிப்பில்லை

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வை­யில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை யினால் பொது­மக்­க­ளுக்கோ நாட்­டிற்கோ எந்­த­வொரு பாதிப்பும் ஏற்­ப­டாது என்­ப­தனை திட்­ட­வட்­ட­மாக நான்­ கூ­று­கின்றேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். ஐக்­கிய நாடு­க­ளினால் வெளியி­டப்­ப­ட­வி­ருந்த பார­தூ­ர­மான அறிக்­கையை மாற்றியமைப்பதற்கு புதிய அர­சாங்­கத்­தினால் முடிந்­தது. இருந்­த­போ­திலும் முன்­னைய அர­சாங்கம் தொடர்ந்தும் ஆட்­சியில் இருந்­தி­ருந்தால் இந்த அறிக்கை மிகவும் காரம் கூடி­ய­தாக அமைந்­தி­ருக்கும். அதி­லி­ருந்து நாம் நாட்டை பாது­காத்­துள்ளோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். இதே­வேளை,முன்னாள்…

Read More

வெளி­நாட்டு நீதி­ப­திகள் வந்தால் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்

பொது­ந­ல­வாய மற்றும் வெளிநாட்டு நீதி­ப­தி­களின் பங்­கேற்­புடன் உள்­ளக விசா­ரணை நடை­பெ­று­மாயின் அது அர­சி­ய­ல­மைப்பை மீறுவ­தா­கவே அமையும். அவ்­வாறு அரசி­ய ல­மைப்பை மீறும் செயற்­பா­டுகளை மேற்­கொண்டால் அதற்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு நாம் தயங்க மாட்டோம் என ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி என தம்மை அறி­வித்­துக்­கொண்­டுள்ள மஹிந்த அணியின் முக்­கி­யஸ்தர் தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார். அர­சாங்கம் உள்­ளக விசா­ரணை என்ற போர்­வையில் சர்­வ­தேச விசா­ர­ணையே நடத்­து­வ­தற்கு முயற்­சிக்­கி­றது. அதற்கு நாங்கள் ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம். மேலும் அர­சாங்­க­மா­னது உள்­ளகப் பொறி­முறை செயற்­பாட்டை…

Read More

வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க தயங்கவில்லை

விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் தயங்கவில்லை. ஆனால் அது எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தீர்மானம் எடுக்க வேண் டியுள்ளது. அதாவது வெளிநாட்டு நீதிபதிகள் ஆலோ சனை வழங் கவா? அல்லது விசாரணை செய்யவா? அழைக்கப் படவேண்டும் என்பது குறித்து தீர்மானம் எடுக்கவேண்டியுள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உலகநாடுகளின் கடற்படை கலங்கள் வருவதற்கான அளவுகோலொன்றை நாங்கள் வகுத்துள்ளோம். அதனடிப்படையில் நீர்மூழ்கிகள் உட்பட அனைத்து கடற்படை கலங்களும் இலங்கைக்கு வரலாம். எங்களை பொறுத்தவரை…

Read More

424 பேர் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும்

1976 ஆம் ஆண்டு முத­லாக விடு­த­லைப்­பு­லி­களால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அழி­வுகள், குற்­றச்­செ­யல்கள் தொடர்­பாக விசா­ரணை நடத்த வேண்டும். அத்­துடன் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ உதவி புரிந்த 424 பேர் தொடர்­பிலும் விசா­ரணை நடத்த வேண்டும் என பொலிஸ்மா அதி­ப­ரிடம் முறைப்­பாடு ஒன்றை கைய­ளித்த­தாக புத்­தி­ஜீ­வி­களின் குரல் அமைப்பு தெரி­வித்­தது. கொழும்பில் வியா­ழக்­கி­ழமை அவ்­வ­மைப்பு நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே அதன் இணைச்­செ­ய­லாளர் சட்­டத்­த­ரணி தினேஷ் தொடம்­கொட இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், கடந்த 1976ஆம் ஆண்டு முதல்…

Read More

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக களமிறங்குவோம்

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பிள­வு­படும் இதனை தடுக்க முடி­யாது எனத் தெரி­வித்­துள்ள முன்னாள் அமைச்­சரும் எம்.பி.யுமான வாசு­தேவ நாண­யக்­கார,எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் ஒன்­று­பட்ட எதிர்க்­கட்­சி­யாக நாம் கள­மி­றங்­குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,எதிர்­கா­லத்தில் மைத்­திரி, ஐக்­கிய தேசிய கட்சி கூட்­ட­ணிக்கு எதி­ராக எமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்போம். உள்­ளூ­ராட்சி தேர்­தலில் ஒன்­று­பட்ட எதிர்­கட்­சி­யாக இணைந்து நாம் போட்­டி­யி­டுவோம். மைத்­திரி எந்தச் சின்­னத்தில் தேர்­தலில் கள­மி­றங்­கி­னாலும் நாம் அதனை எதிர்ப்போம். ஐக்­கிய தேசிய கட்­சி­யையும்…

Read More

மக்களுக்கு சலுகை வழங்கும் வகையிலான வரவு–செலவு திட்டத்தை முன்வைப்போம்

ஊழல் மோச­டி­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்ட, மக்­களின் தேவை­களை நிறை­வேற்றும் வரவு செலவுத் திட்­ட­மொன்று முன்­வைக்­கப்­படும் எனத் தெரி­வித்த நிதி­ய­மைச்சர் ரவி­ க­ரு­ணா­நா­யக, கல்­விக்கு முதன்மை இடம் வழங்­கப்­படும் எனவே பொய்­யான பிர­சா­ரங்­க­ளுக்கு ஏமார வேண்டாம் என்றும் குறிப்­பிட்டார். நல்­லாட்­சிக்­கான தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் ஆண்­டிற்­கான வரவு செலவுத் திட்டம் தொடர்­பாக கேட்ட போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், கடந்த மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியில் வீண் செல­வு­க­ளுக்கே வரவு செலவுத் திட்­டத்தில்…

Read More

பலஸ்தீன் சொந்தங்களுக்கு ஆதரவாக, உலகெங்கும் போராட்டம் (படங்கள்)

– அபூஷேக் முஹம்மத் – ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மக்கள் எழுச்சி! ஸ்காட்லாந்த் நாட்டில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக மக்கள் எழுச்சி! எகிப்து நாட்டில் பாலஸ்தீன போராட்டத்திற்கு  ஆதரவான மக்கள் எழுச்சி ! அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக மக்கள் எழுச்சி ! ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக் ஹோமில் ஜியோனிச தூதரகம் முன்  பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போராடும் மனிதநேய மக்கள் ! பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கனடாவில் மக்கள் எழுச்சி !

Read More