Headlines

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

கிழக்கு மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்றது. ‘ஜேர்னோஸ் மீட்டப் – 2015’ எனும் தலைப்பில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள கலந்துகொண்ட இந்த செயலமர்வு விடியல் இணையத்தளத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. விடியல் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் றிப்தி அலி தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார்…

Read More

சுவிட்சர்லாந்து தேர்தல், சொல்லும் செய்திகள்..!

சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்திற்கான பொது தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வெளியாகி உள்ள நிலையில், அந்நாட்டின் முக்கிய கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியை பெற்றுள்ளது. சுவிஸில் நேற்று தொடங்கிய பொது தேர்தலுக்கான வாக்குபதிவின் முடிவுகள் நள்ளிரவு முதல் வெளியாகி வந்துள்ளது. 200 பாராளுமன்ற கீழ் சபை உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட சுவிஸின் 3 முக்கிய கட்சிகளான சுவிஸ் மக்கள் கட்சி(SVP) 65 தொகுதிகளிலும், சமூக ஜனநாயக கட்சி(SP) 43 தொகுதிகளிலும் மற்றும் லிபரல் கட்சி(FDP)…

Read More

வதைப்படும் அகதிகள்..!

ஐரோப்பிய எல்லைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் ஆயிரக்கணக்கான அகதிகள் சிக்கித்தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வறுமை மற்றும் போர் காரணமாக மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைய படையெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டும் மட்டும் ஐரோப்பாவுக்குள் 5 லட்சம் அகதிகள் நுழைந்துள்ளதால், தற்போது எல்லைகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஸ்லோவேனியா மற்றும் க்ரோயேஷியாவுக்கு இடையிலான, எந்த நாட்டின் கட்டுப்பாட்டிலும் இல்லாத பகுதியில், மழை மற்றும் கடுங்குளிரில், தங்க இடமில்லாமல்,…

Read More

உஸ்தாத் மன்ஸூர் எழுதிய குர்ஆனிய சிந்தனை நூல் வெளியீட்டு விழா

– டீன் பைரூஸ் – காத்தான்குடி சமாதான ஒன்றியம் ஏற்பாடு செய்த உஸ்தாத் மன்ஸூர் எழுதிய குர்ஆனிய சிந்தனை தப்ஸீர் நூல் வெளியீட்டு விழா றாபிதத்தூன் நளீமிய்யீன் உடைய தலைவர் அஷ்ஷெய்ஹ் எஸ்.ஏ.கே. அப்துர் றாசீக் (நளீமி) தலைமையில் 16.10.2015 வெள்ளியிரவு காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம் பெற்றது. இலங்கையின் வரலாற்றில் முதன் முதலாக எழுதப்பட்ட அல்குர்ஆன் விளக்கவுரை நூலான ‘குர்ஆனிய சிந்தனை’ எனும் நூல் இரண்டாவது வெளியீடாக காத்தான்குடியில் வெளியிடப்பட்டது. இதன் முதலாவது வெளியீடு கொழும்பில் இடம்…

Read More

சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்ட நபர் கொழும்பில் கைது

மாலைதீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீரின் சட்டதரணியை கத்தியால் குத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர், இன்று கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மாலைத்தீவு அரசாங்கத்துக்குச் சொந்தமான சொசுன் விலா எனும் விடுதியொன்றிலேயே ஷஃப்ராஸ் இப்ராஹிம் (வயது 20) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது

அரசியல்வாதிகள் தாம் அதிகாரத்துக்கு வருவதற்காக  மக்களின் வறுமையைத் தவறாகப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. பொலனறுவை இரகாந்தகற்று வெவ வித்தியாலயத்தின் புதிய தொழில்நுட்பக் கூடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களின் வறுமையை அரசியல் வாதிகள் தாம் அதிகாரத்துக்கு வருவதற்குப் பயன்படுத்துகின்றனர். தேர்தல் வரும்போது அதி காரத்தில் உள்ள அரசியல்வாதி கள் எவராக இருந்தாலும் அரச நிதி வளங்களைப் பயன்படுத்து கின்றனர். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு…

Read More

நோயாளரை பார்க்கச் சென்ற இருவர் வைத்தியசாலையில் கைது

மாரவில வைத்தியசாலைக்கு  மதுபோதையில் நோயாளர் ஒருவரை பார்ப்பதற்கு சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வென்னப்புவ பகுதியைச்  சேர்ந்த நபர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்  பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

31 வருடகல்விச் சேவையிலிருந்து விடைபெற்றார் அதிபர் பாறூக்..!

 – காரைதீவு  நிருபர் – சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபர் எச்எம்.பாறுக் தனது 31வருடகால கல்விச்சேவையிலிருந்து   19ஆம் திகதி திங்கட்கிழமை தனது 60வது வயதில் ஓய்வுபெறுவதையொட்டி   பாடசாலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. காலை ஆராதனையில் பாடசாலையில் பயிலும் சுமார் 400மாணவர்களின் மரியாதை நிகழ்வு இடம்பெற்றது. காலைநிகழ்வில் தேசிய மாணவர் படையணியின் வரவேற்புடன் ஆசிரியர்களால் மாலைகள்சூட்டப்பட்டு ஆராதனை மேடைக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு ஆசிரியர்கள் மற்றும் வலயக்கல்விப்பணிமனை சார்பில் கலந்தகொண்ட உதவிக்கல்விபப்ணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் உரையாற்றினர்….

Read More

வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

வடக்கு மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் இரண்டரை மணித்தியால காலக்கெடுவுக்குள், ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவமானது அம்மக்களை தொடர்ச்சியாக 25 வருடங்கள் மிகுந்த துயரத்துடனான அவல வாழ்க்கைக்கு இட்டுச்சென்றுள்ளது. இந்நிலையில் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சகல விதமான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து மீள்குடியமர்த்துவதிலேயே தங்கியிருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு இலங்கையில் கொடூர யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் கடந்தாயிற்று. ஆயினும் இதுவரை முஸ்லிம்…

Read More

வீதி விபத்­துக்­க­ளினால் 9 மாதங்­களில் 2,200 பேர் பலி

இவ்­வ­ரு­டத்தின் முதல் ஒன்­பது மாதங்­களில் வீதி விபத்­துக்­க­ளினால் 2,200 பேர் உயிர் இழந்துள்ளனர். கடந்த வருடம் இதே மாத காலப்பகுதியில் 349 பேரே உயிர் இழந்­துள்­ளனர் என போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமால் சிறி­பால டி சில்வா தெரிவித்துள்ளார். வீதி விபத்­துக்­களின் அதி­க­ரிப்பை கட்­டுப்­ப­டுத்­து­வது குறித்து தேசிய வீதிப் பாது­காப்புச் சபையில் நடை­பெற்ற கூட்­ட­ மொன்றில் அவர் இவ்­வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2014ஆம் ஆண்டு 36,050 வீதி விபத்­துக்கள் இடம்­பெற்­றுள்­ள­துடன் அவற்றில் 2,440 பேர்…

Read More

கொண்டைய்யா தொடர்ந்தும் விளக்கமறியலில்

கொடதெனியாவ சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த கொண்டைய்யா எனப்படும் துனேஷ் பிரியஷாந்த குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இந்த வழக்கு தொடர்பில் கைதாகி தானே குற்றத்தை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ள கொண்டையாவின் சகோதரர் எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அத்துடன், கொண்டைய்யாவின் சகோதரராக சமன் ஜெயலத்தின் மரபணுப் பரிசோதனை அறிக்கை, சிறுமியின் சடலத்தில் இருந்து பெறப்பட்ட மரபணுக்களுடன் ஒத்துப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த வழக்கில் முதலில்…

Read More

அப்துல்கலாம் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்க முடியாது : இந்திய அரசு !

மறைந்த முன்னாள்  இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்ற அவரது குடும்பத்தினரின் கோரிக்கையை  இந்திய அரசு நிராகரித்துள்ளது. அப்துல் கலாம் டெல்லியில் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மத்திய் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு பதிலளித்து உள்ள உள்துறை அமைச்சகம், தலைநகர் டில்லியில் இதுவரை எந்த தலைவருக்கும் நினைவிடங்கள் அமைக்கப்படவில்லை என்றும், அதனால் கலாம் வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக மாற்ற முடியாது என்றும் தெரிவித்துவிட்டது….

Read More