Headlines

கொண்டையாவுக்கு பிணை

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மியின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டையா மீது தொடரப்பட்டிருந்த இரண்டு வழக்குகளில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொண்டையாவை இன்று கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பேதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இவர் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

விஜயதாச ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சிலர் சட்டத்துக்கு அப்பால் சென்று சந்தேகநபர்களுக்கு தண்டனை வழங்குவதாக  கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனை செய்யும் போதே உயர்நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க விஜயதாச ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

காட்டு யானை தாக்குதலில் கொல்லப்பட்ட கர்ப்பிணிக்கு இரட்டை சிசுக்கள்

மட்டக்களப்பு தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காட்டு யானைத் தாக்குதலில் கொல்லப்பட்ட கர்ப்பிணித் தாயான தம்பிராசா சுயமலர் (வயது 17) என்பவரின் கர்ப்பத்தில் இரட்டை சிசுக்கள் இருந்தது, பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் அவரது கணவனும் காட்டு யானையால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி விக்ரம ஆராச்சியின் அறிக்கையில் 17 வயதான இந்த இளம் கர்ப்பிணித் தாய்க்கு காட்டு யானைத் தாக்குதலால் தலையில்…

Read More

ஹெரோயினுடன் வெலே சுதாவின் சகோதரி உட்பட மூவர் கைது

ஹெரோயின் போதைப் பொருளுடன் வெலே சுதாவின் சகோதரி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 111.54 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு பொரளை பிரதேசத்தில் மூன்று இடங்களில் நேற்று கைது செய்யப்பட்ட இவர்களிடம் பல்வேறு தரத்திலான ஹெரோயின் இருந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். போதைப் பொருளை வைத்திருந்தமை, அதனை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கிய வெலே சுதா என்பவருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முடியும்: விளாடிமிர் புதின்

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 4 ஆண்டுகளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. சிரியாவில் ஐ.எஸ்.களை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவில் விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் இறங்கி கடும் வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது.  ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்…

Read More

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதியரசர் டி.பி வீரசூரிய நியமனம்!

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதியரசர் டி.பி வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆணைக்குழுவின் மற்றும் சில பதவிகளுக்கு நீதியரசர் ரஞ்சித் சில்வா மற்றும் நெவில் குருகே ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச் சேவை ஆணைக்குழுவின் ஆணையாளராக டி.திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.டபிள்யூ.ஏ.சலாம் , எம்.எஸ். செனவிரத்ன. தாரா விஜேதிலக்க , பிரதாப் இராமானுஜன், விஜயலக்ஷ்மி ஜெகராஜசிங்கம் , எம்.எல்.எம். மெண்டிஸ், ஆர்.ரனுக்கே மற்றும் சரத் ஜயதிலக்க ஆகிரோர் ஆணைக்குழுவின் மற்றைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

மொரட்டுவை பொறியியல் பீட மாணவின் சடலம் மட்டக்களப்புக்கு கொண்டுவரப்படவுள்ளது

விபத்தில் உயிரிழந்த மொரட்டுவைப் பல்கலைக்கழக மாணவனின் சடலம் மட்டக்களப்பிற்கு எடுத்துவரப்படவுள்ளது. இன்று காலை தொடக்கம் பெரியகல்லாறு, முருகன் ஆலய வீதியில் உள்ள குறித்த மாணவனின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 4.30மணியளவில் பெரியகல்லாறு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு மொரட்டுவையில் இடம்பெற்ற விபத்தில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கல்வி பயிலும் ஹற்றனை பிறப்பிடமாகவும் பெரியகல்லாறை வசிப்பிடமாகவும் கொண்ட நீதிராஜா கரோஜனாத் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை…

Read More

இலங்கை வருகிறார் ஐ.நா உதவிச்செயலர்

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் மிரோஸ்லாவ் ஜென்கா, இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்துக்காக அண்மையில் நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரியுடன், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நடத்திய பேச்சுக்களை அடுத்தே, அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா உதவிச் செயலர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார். இலங்கை அதிகாரிகள் மற்றும் பங்காளர்களுடனான தொடர்ச்சியான கலந்துரையாடலுக்கு, ஐ.நா உதவிச் செயலரின் இந்தப் பயணம் வாய்ப்பை வழங்கும் என்றும், இலங்கைக்கு உதவும் வகையிலான, நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான…

Read More

உள்ளூராட்சி தேர்தலிலும் தனது ஆதரவு ஐ.தே.மு.வுக்கு – அமைச்சர் ராஜித

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலிலும் தனது ஆதரவினை ஐக்கிய தேசிய முன்னணிக்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்கள் பலரும் போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு கட்சிகளும் போட்டியிட்டு இறுதியில் ஒரு தரப்பினராக செயற்படுவார்கள் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளூராட்சி நிறுவனங்கள் தேசிய அரசாங்க கருத்திற்கு செல்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை, எனினும் போட்டியிட்டதன் பின்னர் தேசிய அரசாங்க முறைக்கமைய தான் செயற்பட நேரிடும் என சுகாதார அமைச்சர்…

Read More

சவூதியிடமிருந்து 30,000 அல்குர்ஆன் மற்றும்  கிதாபுகள்(படங்கள்)

சவூதி அரேபிய அரசாங்கத்திடமிருந்து அன்பளிப்பாக பெறப்பட்ட சுமார் 30,000 அல்குர்ஆன் மற்றும் பெறுமதி வாய்ந்த கிதாபுகள் இலங்கையில் உள்ள மத்ரஸாக்கள், அநாதை நிலையங்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களுக்கு வினியோகிக்கும் நிகழ்வு 20/10/2015 ஜம்ய்யதுஸ் ஸபாப் நிறுவன கேட்போர் கூடத்தில் மொளலவி எம்.எஸ்.எம் தாஸிம் தலைமையில் இடம் பெற்றது. இதில் சவூதி அரேபிய பிரதி நிதி, சவூதிஅரசாங்கத்திடமிருந்து அல்குர்ஆன் பிரதிகளை பெற உதவிய புனித ஹரம் ஸரீபில் கடமையாற்றும் ஸாதிக் ஹாஜியார், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைவர்,…

Read More

நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டம்: ஜனாதிபதி தலைமை

அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கை தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதே இந்த சந்திப்பில் நோக்கமாகும். தங்கள் கட்சிக்கு இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கும் இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய தலைவர்…

Read More

இந்திய பஸ்கள் கொள்வனவில் பாரிய மோசடி

இந்­தி­யா­வி­லி­ருந்து பஸ்கள் கொள்­வ­னவு செய்­ததில் பாரிய மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. இதில் முன்னாள் ஆட்­சியில் அமைச்ச­ரொ­ரு­வரின் பங்­க­ளிப்பு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தோடு லஞ்சம் பெற்றுக் கொண்­டது தொடர்­பிலும் தற்­போது சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க நேற்று சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற உள்­நாட்டு திறை­சேரி உண்­டியல் கட்­டளைச்சட்­டத்தின் கீழான தீர்­மானம் தொடர்­பான விவா­தத்தை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­றும்­போதே நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க இவ்­வாறு தெரி­வித்தார். சபையில் அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்; வரி தொடர்­பான தேசிய…

Read More