Headlines

கோமா நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர் உயிரிழப்பு!

வவுனியா வைத்தியசாலையின், வைத்தியர்கள் தங்கும் விடுதியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை கோமா நிலையில் மீட்கப்பட்ட வைத்தியர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிந்து விட்டு அவரது விடுதிக்குத் திரும்பிய வைத்தியர் தொடர்பில் பின்னர் எவ்வித தகவலும் கிடைக்கப் பெறவில்லை. இதனால், சந்தேகமடைந்த வைத்தியசாலை நிர்வாகம், வைத்தியரின் விடுதி அறையின் பூட்டை உடைத்து பார்த்த போது குறித்த வைத்தியர் கோமா நிலையில் வைத்தியசாலை ஊழியர்களால் மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த…

Read More

யானை தாக்கி ஆசிரியர் இர்பான் வபாத்

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நைனாகாடுப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கருவாக்கல் பகுதியைச் சேர்ந்த கலந்தர்லெப்பை முஹம்மத்தம்பி முஹம்மத் இர்பான் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கின்றார். நைனாகாடு பள்ளக்காடு பகுதியிலுள்ள தனது வயலுக்குச் சென்றபோதே, இவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

பிரதமருக்கும், ஜப்பான் பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

ஜப்பானிய அரசாங்கத்தின் விசேட பிரதிநிதியாக இலங்கை வந்துள்ள மொட்டோ நொகுச், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். நேற்று மாலை அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜப்பானிய அரசாங்கத்தின் விசேட அலுவலகத்தின் பிரதிநிதியான மொட்டோ, பிரதமருடன் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடல் நடத்தியுள்ளார். இந்த நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் உள்ளூர் பொறிமுறையின் கீழ் விசாரணைகள் செயற்படுத்தவுள்ளமை குறித்து மொட்டோ நொகுச் பாராட்டுக்களை…

Read More

இலங்கையில் ஜனநாயகம் பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது: அமெரிக்கா

இலங்கையில் ஜனநாயகம் பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி இதனை தெரிவித்துள்ளார். வோசிங்டனில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கை உட்பட்ட பல நாடுகளின் மாற்றங்களில் ஈடுபாட்டை கொண்டுள்ளது. எனினும், அமரிக்க தலைமைத்துவத்தினால் மாத்திரம் அதன் பெறுபேறுகள் அமையவில்லை. இந்த பெறுபேறுகள் அமெரிக்க ஆதரவிலேயே கிடைத்தன என்றும் கெரி குறிப்பிட்டுள்ளார்.

Read More

கொண்டயா தொடர்பில் வெளியான செய்திகளுக்கு பொலிஸ் ஊடகப்பேச்சாளரே பொறுப்பு: நீதவான்

துனேஸ் பிரியசாந்த எனப்படும் கொண்டயா தொடர்பில் ஊடகங்களில் வெளயான செய்திகளுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளரே பொறுப்பு என கம்பஹா நீதவான் டிக்கிரி கே. ஜயதிலக்க தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் வீடு ஒன்றில் புகுந்து நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியதாக கொண்டயா மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைகளின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸாரினால் கைது செய்யப்படும் எந்தவொரு நபரும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரையில் சந்தேக நபராகவே கருதப்படுகின்றார். சாட்சி கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு விசாரணை…

Read More

நாடாளுமன்றை கேலிக்கூத்தாக மாற்ற வேண்டாம் சபாநாயகர் எச்சரிக்கை

நாட்டின் நாடாளுமன்றை கேலிக்கூத்தாக மாற்ற வேண்டாம் என சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று நாடாளுமன்ற அமர்வுகளின் போது ஏற்பட்ட அமளிதுமளி நிலைமையைத் தொடர்ந்து இதனைத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுக்க 46 லட்ச ரூபா பொதுமக்கள் பணம் செலவிடப்படுகின்றது. நாடாளுமன்றின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தினேஸ் குணவர்தன இடையூறு விளைவிக்கின்றார். நாடாளுமன்றில் விசர் ஆட்டம் ஆட இடமளிக்க முடியாது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்க அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

Read More

ரவியின் பெயர் விவகாரம் சபையில் கடும் சர்ச்சை

நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­ய­கவின் பெயர் ரவீந்­திர சந்­திரேஸ் கணேசன் என பந்­துல குண­வர்த்­தன எம்.பி.யி.னால் கூறப்­பட்ட விடயம் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சர்ச்­சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பந்­துல குண­வர்த்தன பாரா­ளு­மன்­றத்தில் அறி­வித்­தது போன்று தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்ய வேண்டும் என்றும் பாரா­ளு­மன்­றத்தை விட்டு வெளி­யேற வேண்டும் என்றும் ஆளும் கட்­சி­யினர் நேற்று சபையில் கோஷ­மிட்டு அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­தனர். ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் சபையில் எழுந்து பந்­துல எம்.பி. சபையை விட்டு வெளி­யேற வேண்டும் என்று இடை­வி­டாது கோஷம் எழுப்­பி­யதால் சபை…

Read More

எவன்கார்ட் கப்பல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்­பாக சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னை­க­ளுக்­க­மைய விசா­ர­ணைகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் இது தொடர்­பி­லான மேல­திக விப­ரங்­கள் நாளை (இன்று) வியா­ழக்­கி­ழமை சபையில் தெளி­வு­ப­டுத்­தப்­ப­டு­மென்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று அறி­வித்தார். எவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்­பாக ஜே.வி.பி. எம்.பி.யும் எதிர்­கட்­சியின் பிர­தம கொற­டா­வு­மான அநுர திஸா­நா­யக எழுப்­பிய கேள்­விக்கு நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் பதி­ல­ளிக்கும் போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்கண்டவாறு தெரி­வித்தார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது…

Read More

வெளிவிவகார அமைச்சின் 13 அதிகாரிகள் பதவி நீக்கப்படவுள்ளனர்?

அர­சாங்­கத்தின் இர­க­சி­யங்­களை வெளி­யிட்­டமை உட்­பட சில குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் வெளி­வி­வ­கார அமைச்சில் பணி­பு­ரியும் 13 அதி­கா­ரிகள் அடுத்த வாரம் பத­வி­களில் இருந்து நீக்­கப்­ப­ட­வுள்­ளனர். இவ்­வாறு பதவி நீக்­கப்­பட உள்ள அதி­கா­ரி­களில் 8 பேர் உயர் அதி­கா­ரிகள் எனக் கூறப்­ப­டு­கி­றது. மேலும் இந்த அதி­கா­ரிகள் தன்­னிச்­சை­யாக செயற்­பட்டு கொண்டு வாகனம், எரி­பொருள் உட்­பட அனைத்து வச­தி­க­ளையும் பெற்­றுக்­கொண்டு வெறு­மனே காலத்தைக் கடத்தி வரு­வ­தாக தெரி­ய­வந்­துள்­ளது. ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் ஆகியோரிடையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் பின்னர் இந்த…

Read More

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்போம் : கூட்டமைப்பு

ஜனா­தி­பதி தலை­மையில் இன்று நடை­பெ­ற­வுள்ள சர்வகட்சி மாநாட்­டுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு ஜனா­தி­பதி அழைப்பு விடுத்­தி­ருந்­தாலும் நிகழ்ச்சி நிரலைப் பொறுத்தே எமது செயற்­பா­டுகள் அமையும் என்­று எம்.ஏ.சுமந்­திரன் எம்.பி. தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத் துத் தெரி­விக்­கையில், ஐ.நா.மனித உரிமைப் பேரவைத் தீர்­மானம் அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வி­ருக்கும் செயற்­பா­டுகள் விட­யங்கள் தொடர்பில் அர­சாங்கம் கொண்­டுள்ள நிலைப்­பாடு குறித்து ஆராய்­வ­தற்­கான கூட்­டத்­துக்கு நாம் அழைக்­கப்­பட்­டி­ருக்­கிறோம். இத­னூ­டாக நாட்­டி­லுள்ள அனைத்து கட்சித் தலை­வர்­களின் கருத்­துக்கள் மற் றும் ஆலோ­ச­னை­களைப்…

Read More

ஜனா­தி­பதி தலை­மையில் இன்று சர்­வகட்சி கூட்டம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் சர்­வ­கட்சிக் குழுக்­கூட்டம் இன்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடைபெற­வுள்­ளது. மாலை 5.00 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற­வுள் ள­துடன் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கு ஜனா­தி­பதி செய­ல­கத்­தினால் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை குறித்து ஆராய்­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­கட்சி குழுக்­கூட்­டத்தை நடத்­த­வுள்ளார் . இலங்­கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும்…

Read More

இலங்கை வந்த “அபூபக்கர்”

பங்களாதேஷ் கடற்படைக்குச் சொந்தமான “அபூபக்கர்” என்ற கப்பல் நல்லெண்ண விஜயமாக இலங்கை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினர் இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்ற போது எடுத்த படம்.

Read More