Headlines

இந்திய ஏற்றுமதி கண்காட்சி -2015

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்திய ஏற்றுமதி கண்காட்சி -2015 இன்று வைபவரீதியாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்தியாவின் 50 க்கும் மேற்பட்ட முன்னணி கைத்தொழில்,வர்த்தகம்,விசாயம்,மருந்தகம்,கட்டிட நிர்மாணிப்பு,ஆடை தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பம்,சக்தி வளத்துறை சார்ந்த…

Read More

ஒலுவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு தொடர்பில் றிஷாத் துரித நடவடிக்கை

ஒலுவில் துறைமுக அபிவிருத்தியினை தொடர்ந்து அப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கொண்டுவந்துள்ளதுடன், இதனால் பாதிப்புக்குள்ளான மீனவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமரும் கோரிக்கையினை முன்வைத்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஒலுவில் மத்திய குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, தலைவர் றிஷாத் பதியுதீன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதை அடுத்து, உரிய…

Read More

கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை அமைச்சர் றிஷாத் பார்வையிடவுள்ளார்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுவில் பிரதேசம் நீண்டகாலமாக கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு வருகின்றது இதனால் அப்பிரதேச மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஒலுவில் துறைமுக கட்டுமான பணிகளின் பின்னர் கடற்கரையை அன்டிய பிரதேசம் நாளாந்தம் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு வருவதுடன் ஆயிரக்கணக்கான தென்னை மரங்களும், நிலங்களும் காவு கொள்ளப்படுகின்றது இதனால் அப்பிரதேச வாழும் ஆழ்கடல், கரைவலை மற்றும் நன்னீர் மீனவர்களின் தொழில்களும் பாதிக்கப்படுள்ளதுடன் கடற்கரையை அன்டிய துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான கட்டிடங்களும் சேதமடையும் நிலையும் காணப்படுகின்றது. இதுதொடர்பாக…

Read More

ரியாத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் (டிரைவர்) கவனத்திற்கு!

சவூதி தலைநகர் ரியாத் சாலைகளில் புதிதாக ஸ்பீடு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து நிதானமாக வண்டியை ஓட்டவும். வாகனத்தில் வேகமாக சென்றால் கேமரா அடித்துவிடும். கேமரா அடித்தால் 500 ரியால்கள் அபராதம் விதிக்கப்படும்.

Read More

ஜித்தாவை மிரட்டிய மணல் புயல் (காணொளி இணைப்பு)

கடந்த செவ்வாய் மாலை சவூதி அரேபியா ஜித்தாவில் திடீரென ஏற்பட்ட மணல் புயலால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் சூரிய ஒளியால் வெளிச்சமாக காணப்பட்ட ஜித்தா நகரம் சில நொடிகளில் இரவுபோல் காட்சியளித்தது. இந்த மணல் புயல் காரணமாக ஜித்தாவிற்கு வந்த விமானங்கள் தரையிறங்காமல் வேறு ஊர்களுக்கு மாற்றி விடப்பட்டன.

Read More

ஒரு மில்லியன் சிரிய மக்களுக்கு, சவூதி அமைக்கும் பிரமாண்ட முகாம்

சிரியா அகதிகளில் 1 மில்லியன் மக்களுக்கு சவூதி அரேபியா குடியமர்வதற்கான அனுமதியையும் 1 இலட்சம் மாணவர்களுக்கு சவூதி பல்கலைக்கழங்கள் மற்றும் அரச பாடசாலைகளில் கல்வியை தொடர்வதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளது. பெரும்பாலும் யூத கிரிஸ்தவ ஊடங்களில் வராத இந்த செய்தி எமது முஸ்லிம்களுக்கு புதியதாக இருக்கலாம். இன்னும், சிலருக்கு இந்த செய்திகளை கண்டாலும் எதுக்கு எடுத்தாலும் சவூதியை திட்டித் தீர்க்கும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதில் கஷ்டங்கள் இருக்கலாம். ஐரோப்பா சிரிய அகதிகளை இரு கரம் ஏந்தி வரவேற்கின்றது…

Read More

2022 ஆம் அண்டில் பிரான்ஸ் இஸ்லாமிய நாடாக மாறும்

பிரான்ஸ் நாட்டின் தற்போதைய மக்கள் தொகை 66 மில்லியனாகும். .இதில் 6 மில்லியன் முஸ்லிகள் இருப்பதாக ஒரு குறிப்பு உறுதி செய்கிறது. மேலும், பிரான்ஸில் இஸ்லாத்தை புதிதாக ஏற்போர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருவதால் முஸ்லிம்களின் எண்ணிக்கை பிரான்ஸில் அசுர வேகத்தில் உயரும் என்றும் அறியமுடிகிறது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் பிரான்ஸ் இஸ்லாமிய நாடாக உருவாக வாய்ப்பு இருப்பதாக பிரன்ச் நாவல் ஆசிரியர் மைக்கேல் ஓபக் கூறியுள்ளார். 2022 பிரானஸ் இஸ்லாமிய நாடாக…

Read More

மஹிந்தவை புகழ்கின்றார் மைத்திரி

பத்து வருடங்களாக அரச அதிகாரத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே தற்போது எம்.பி. பதவியை ஏற்று சாதாரணமாக இருக்கிறார். அவ்வாறான நிலையில் அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுகளை ஏற்பதில் என்ன பிரச்சினை உள்ளது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பினார். இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான பதவி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்  மேலும் தெரிவிக்கையில், அமைச்சுப்…

Read More

தலைமன்னார் – இராமேஸ்வரம் பாலம் குறித்து மோடி ஆராய்வு

இலங்கையின் தலைமன்னாரையும் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும் தரை வழியாக இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களுடன் நேற்றுமுன்தினம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இந்தியாவின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக, பெரும் தொழில் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், வங்கிகளின் அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள், அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் தரைவழி…

Read More

சஷிந்ர ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகை

ஊவா மாகாண  முன்னாள் முதலமைச்சர் சஷிந்ர ராஜபக்ஷ தற்போது விசாரணைக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச காணியில் நிர்மாணம் மேற்கொள்ளல் மற்றும் காணி விடயத்தில் முறையான விதிமுறைகளை கடைபிடிக்காமை தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்பேன்

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட பல்­லா­யி­ரக் ­க­ணக்­கான சிறு­வர்­களின் வாழ்­வா­தா­ர த்தை மேம்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு எனக்கு புதிய அமைச்சின் மூலம் வழங்­கப்­பட்­டுள்­ளது. எனவே இந்­தப்­ப­ணி­யினை உரிய வகையில் நான் மேற்­கொள்­வ­துடன் தேசிய ரீதி­யிலும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்பேன் என்று சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்தார். இராஜாங்க அமைச்சராக அவர் செய்தியா ளர்களிடம் உரையாற்றுகையிலேயே இவ் வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, யுத்­தத்தில் தாய், தந்­தை­யரை இழந்த ஆயி­ரக்­க­ணக்­கான சிறு­வர்கள் சிறுவர் இல்­லங்­களில் வாழ்ந்து…

Read More

யாழ்.பல்கலையில் பதற்றம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் இரு மாணவக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.பல்கலையின் சிரேஷ்ட மாணவர்களுக்கும் கனிஷ்ட மாணவர்களுக்கும் இடையில் இன்று  காலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து அவ்விடத்திற்கு  கோப்பாய் பொலிஸார் விரைந்து சென்ற போதும், பல்கலைக்கழக வளாகத்திற்குள் செல்ல பொலிஸாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும்இ நிலமை தொடர்பில் பொலிஸார் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More