Headlines

தேர்தல்கள் சட்ட மீறல்கள் தொடர்பில் 197 பேர் கைது

பாரா­ளு­மன்ற தேர்தல் அறி­விக்­கப்­பட்ட கடந்த ஜூன் 26 ஆம் திகதி முதல் நேற்று வரை தேர்­தல்கள் தொடர்­பி­லான முறைப்­பா­டுகள் மற்றும் சுற்­றி­வளைப்­புக்­களில் 197 பேர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் அவர்­க­ளி­ட­மி­ருந்து 57 வாக­னங் களும் கைப்­பற்­றப்­பட்டு வழக்குப் பொருட்­க­ளாக பதி­யப்­பட்­டுள்­ளன. பொலிஸார் மேற்கொண்ட 89 சுற்­றி­வ­ளைப்­புக்கள் ஊடாக நாட­ளா­விய ரீதியில் 170 பேரும் கிடைக்கப் பெற்ற 64 முறைப்­பா­டு­க­ளுக்கு அமை­வாக முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் 27 பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர்…

Read More

ஜனாதிபதி பங்கேற்கவில்லை

‘எதிர்காலத்துக்கு உத்தரவாதம்’ எனும் தொனிப்பொருளில் நேற்று  வெளியிடப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையிலான குழுவினரே இதனை கையளித்துள்ளனர். இந்த வெளியீட்டு வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

தேசியப் பட்டியல் குறித்து கடுமையான விதிகள்!

தேசியப் பட்டியல் குறித்து கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாத மற்றும் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்படாதவர்கள், எதிர்வரும் புதிய நாடாளுமன்றின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட மாட்டார்கள் என திட்ட வட்டமாக அறிவித்துள்ளார். தேர்தல் சட்டங்களுக்கு அமைய இம்முறை தேசியப் பட்டியல் ஆசனங்கள் குறித்து கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த காலங்களில் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்படாத மற்றும் நாடாளுமன்றத் தேர்தலி;ல் போட்டியிடாதவர்கள் தேசியப்…

Read More

வீதி விபத்தில் வயோதிபப் பெண் பலி

– அப்துல்லாஹ் – புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா வீதியில் நடந்த வீதி விபத்தில் படுகாயமடைந்த வயோதிபப் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளருமான அப்துல் நாஸர் ஆசிரியரின் தாயான சின்னத்தம்பி மரியங்கண்டு (வயது 70) என்பவரே விபத்தில் சிக்கி மரணித்தவராகும். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த…

Read More

வாக்காளர் அட்டைகள் இன்று விநியோகம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று புதன்கிழமை (29) தபால் திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. இம்முறை தேர்தலுக்காக, ஒருகோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 491 வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டார். தபால் ஊழியர்கள், ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை வீடுகள் தோறும் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கவுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன கூறினார். வாக்காளர் அட்டை விநியோகிப்பதற்கான விசேட தினங்களாக…

Read More

மன்னார் கல்லாறு, ஏ.ஆர். ஜனூசியா இன்று வபாத்தானார்

– கரீம் ஏ. மிஸ்காத் – சென்றவாரம் மன்னார் கல்லாறு விபத்தில் காயமடைந்த ஏ.ஆர். ஜனூசியா.(27) இன்று காலமானார். இவர் பாயிஸ் ஆசிரியரின் மனைவியும், அப்னான் (வயது- 2 1/2), இன்பாஸ் (9- மாதம்) ஆகியோரின் தாயுமாவார். ஜனாஸா , இன்று மன்னார் வைத்தியசாலையில் இருந்து கொண்டு வரப்பட்டு, இன்று உளுக்காப்பள்ளம், கரம்பை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். இதேவேளை, மர்ஹும் ஜனூசியாவின் தாயும், பாயிஸ் ஆசிரியரும் யாழ்ப்பாணம் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாயிஸ் ஆசிரியரின் சம்ளப்பணத்தின்…

Read More

இலங்கையில் வேல்ட்ரெமிட் பணபரிமாற்ற சேவை

லண்டனை மையமாகக்கொண்ட வேல்ட்ரெமிட் பணபரிமாற்ற சேவை தமது அவசர கையடக்க தொலைபேசி பணபரிமாற்றல் சேவையை இலங்கையில் ஆரம்பித்துள்ளது. இஇசெட் காஷ் என்ற இந்தசேவை தற்போது டயலொக், எடிசலாட் மற்றும் ஹட்ச் பாவனையாளர்களுக்கு கிடைக்கிறது. இந்த சேவையின் ஊடாக 14 மில்லியன் மக்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என்று நிறுவனத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம் குறைந்த கட்டணங்களில் இலங்கையில் உள்ள உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நேரடியாக பணத்தை அனுப்பமுடியும் என்று வேல்ட்ரெமிட் தெரிவித்துள்ளது.

Read More

கொழும்பு முஸ்லிம்களின் பிரச்சினைகள்

-அஸ்ரப் ஏ சமத்- வெள்ளவத்தை மெரைன் ரைவ் கோட்டலில்  கொழும்பு இளைஞா் கூட்டமைப்பு என்ற அமைப்பு  முஜிபு ரஹ்மானுக்கான ஆதரவும், கொழும்பு வாழ் முஸ்லீம்களது கல்வி, வீடமைப்பு, தொழில் வாழ்வாதார பற்றிய கலந்துரையாடல் சட்டத்தரனி யு.எம். மா்சூக்  தலைமையில் நடைபெற்றது. இதில் கொழும்பு வாழ் புத்திஜீவிகள் வா்த்தகா்கள், இளைஜா்களும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனா். இஙகு உரையாற்றிய முஜீபு ரஹ்மான் –  உரையாற்றுகையில் கொழும்பில் க.பொ. த சாதார இம்முறை சித்தியடைந்தவாக்ள 5 விதமே. மேல் மாகாணத்தில்…

Read More

சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை, குறித்து ஹிருணிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது உறுப்புரிமையை இரத்துச் செய்துள்ளதை தொடர்ந்து அடுத்த கட்டஅரசியல் நகர்வை தான் மேற்கொள்ளலாம் என மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தன்னால் ஏதாவது ஒரு கட்சியிலேயே இருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டதாக வெளியான அறிவிப்பு கவலையையும், நிம்மதியையும் அளித்துள்ளது. இடதுசாரி இயக்கத்தின் மூலம் அரசியலில் நுழைந்ததால் எனக்கு இந்த முடிவு கவலையளிக்கின்றது. கடந்த சில வாரங்களாக இரு தோணியில் கால்வைத்த மனோநிலையில் நான்…

Read More

றிஷாத் எனது வெற்றியின் முக்கிய பங்காளியாவார்- ஜனாதிபதி

1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் முதன் முறையாக வடக்கிலிலும்,கிழக்கிலும் உள்ள அதிகளவான மக்கள் வாக்களித்தது எனக்கே என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் றிசாத் பதியுதின் எனது வெற்றியின் முக்கிய பங்காளியாவார் என்றும் கூறினார். கிளிநொச்சியில் மொத்த விற்பனை நிலையத்தை இன்று மாலை திற்நத வைத்து உரைாயற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் ஜனாதபதி மைத்திரிபால சிறிசேன தமதுரையில் கூறியதாவது, அமைச்சர் றிசாத் பதியுதீன் எனது நெருங்கிய நண்பவராவார்.அவருக்கு எந்த…

Read More

சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது

அஸ்ரப் ஏ சமத் இலங்கை பத்திரிகை ஆசிரியா் சங்கமும், இலங்கை பத்திரிகை ஸ்தாபணமும் 16வது முறையாக சிறந்த ஊடகவியலாளா்களுக்கு வருடா வருடம் தெரிபு செய்து விருது வழங்கும் நிகழ்வு நேற்று கல்கிசை பீச் ஹோடடலில் நடைபெற்றது. இலங்கையில் நாளாளாந்த வாரந்த வரும் 30 பத்திரிகைகளில் 3 மொழிகளிலும் 15 பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன இவற்றில் வாழ்நாள் சாதானையாளா்கள் விருது, லத்தீப் பாருக், முன்னாள் தினகரன் ஆசிரியா் எஸ். தில்லைநாதன் வழங்கப்பட்டது. மற்றும் சிறந்த வா்த்தக செய்தி…

Read More

பயணப் பையில் சடலம் மீட்பு!

கொழும்பு- பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பிடத்தில் பயணப் பையொன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் செல்வதற்கான வரிசையில் இருந்தே இது மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவிலேயே இது கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் அவ்விட த்தில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More