Headlines

புகைப்பிடித்து பாதிக்கப்பட்டோருக்கு 12.4 பில்லியன் டாலர் இழப்பீடு: புகையிலை நிறுவனங்களுக்கு கனடா நீதிமன்றம் உத்தரவு

புகைப்பிடித்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகையிலை நிறுவனங்கள் 12.4 பில்லியன் டாலரை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என கனடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த இழப்பீடு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 79 ஆயிரத்து 155 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இம்பீரியல் டொபேக்கோ, ரோத்மன்ஸ் பென்சன் அண்ட் ஹைட்ஐஸ் மற்றும் ஜே.பி.ஐ. மென்டொனால்ட் ஆகிய சிகரெட் நிறுவனங்கள் மீது இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தில் 1998-ம் ஆண்டு புகைப்பிடிப்பதால் வரும் உடல்நலக் கேடுகளுக்கு பற்றி தனது தயாரிப்புகளில் விளம்பர வாசகம்…

Read More

முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள் அமைச்சர் றிஷாதுடன் இணைவு

அஸ்ரப் ஏ சமத் வரப்பத்தான் சேனை முன்னாள் முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள் சிலா் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் கட்சியின் தலைவா் அமைச்சா் றிஷாத் பதியுதீனைச் சந்தித்து அவரது கட்சியில் இணைந்து கொண்டனா். படத்தில்  அமைச்சர் னை பதியுதீன்,  கட்சியின் பொதுச் செயலாளா் நாயகம் வை.எல்.எஸ். ஹமீத் மற்றும் வரப்பத்தான் சேனை முன்னாள் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள் ஆகியோர் காணப்படுகின்றனா்.

Read More

என் நண்பனை புதைக்க நானே குழி தோண்டினேன் – ரோஹிங்க்யா முஸ்லிம் சகோதரர் கண்ணீர் ரிப்போட்

அபுஷெய்க் முஹம்மது 1.ஒரு வருடத்திற்கு முன்பு ரோஹிங்க்யா முஸ்லிம்களை கடத்திய கொடுமைக்காரர்களை விட்டும் அவர்களின் முகாம்களை விட்டும் தப்பி சென்று இருக்கின்றார் தோஹா . 2.தோஹா மற்றும் அவருடைய நண்பர்கள் முகாம்களை கண்காணிக்கும் நபர்களால் கொடூரமான முறையால் இரும்புத்தடி மற்றும் கட்டையால் பெற்ற தாக்குதல் பொறுக்க முடியாமல் தப்பிச்சென்று உள்ளனர் . 3.அடர்ந்த காட்டுப்பகுதியான மலேசியா -தாய்லாந்த் நாட்டின் எல்லையோரப் பகுதிகளான வாங் கெலிஅன் என்ற இடத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டு இந்த கொடுமைகள் அரங்கேறி உள்ளன ….

Read More

பயணத்தின் இடையில் சாதாரண பாதணி கடையில் ஜனாதிபதி…..

முன்னர் இந்நாட்டை ஆட்சி செய்தவர்கள் மிக ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நபர்கள். அவர்கள் மக்கள் பணத்தையும் சேர்த்து செலவு செய்தார்கள், அவர்களின் பிள்ளைகள் அணியும் பாதணிகளின் பெறுமதி 3 இலட்சத்தை கடந்தது. அவ்வாறானவர்கள் பயன்படுத்திய இடுப்பு பட்டியின் விலை 1 இலட்சத்திற்கும் அதிகமானதாகும். இப்படியிருக்கும் போது பொலன்னறுவையை பிறப்பிடமாக கொண்ட பல்லேவத்த கமராலகே மைத்திரிபால யாப்பா சிறிசேன என்ற சாதாரண ஒருவரை இந்நாட்டு ஜனாதிபதியாக நியமித்தது இந்நாட்டு மக்களினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு புரட்சியாகும். இவ்வாறு நியமிக்கப்பட்ட…

Read More

அமெரிக்காவில் 7 வருட ஹிஜாப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!

அமெரிக்கா, ஒக்லஹாமா மாநிலத்தில், டல்சா எனும் பிரதேசத்தில் பிரபல ஆடை விற்பனை நிறுவன நேர்முகப் பரீட்சைக்கு (2008) ஹிஜாப் அணிந்து சமூகமளித்த 17 வயது முஸ்லிம் பெண்ணொருவருக்கு ஹிஜாப் அணிந்த காரணத்தினால் தொழில் வாய்ப்பு நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் பாதிக்கப்பட்டவருக்கு சார்பாக தீர்ப்பளித்துள்ளது. ஏழு வருட போராட்டத்தின் பின் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு அமெரிக்காவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதோடு குறித்த நிறுவனம் ஏற்கனவே தமது ஊழியர்கள் இருவரை ஹிஜாப் அணிந்தமைக்காக…

Read More

ஜனாதிபதியின் தன்சலின் போது தீப்பற்றிக்கொண்ட முச்சக்கர வண்டி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்சலை ஆரம்பித்த போது முச்சக்கர வண்டி தீப்பற்றிக்கொண்டுள்ளது. பொசோன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பராக்கிரம சமுத்திரத்திற்கு அருகாமையில் இந்த தன்சல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதேச மக்கள் இணைந்து தீயை அனைத்துள்ளனர். முச்சக்கர வண்டி முற்று முழுதாக தீப்பற்றிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தன்சலுக்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வருகை தந்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

Read More

எகிப்து முன்னாள் அதிபர் மோர்சி மரண தண்டனையில் 16-ம் தேதி இறுதி தீர்ப்பு

எகிப்து முன்னாள் அதிபர் முகம்மது மோர்சி மீது 2011ம் ஆண்டு சிறைக்கைதிகள் தப்பிச் செல்வதற்கு உதவியாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை இறுதி தீர்ப்பு வரும் 16-ம் தேதி அறிவிக்கப்படும் என கெய்ரோ கோர்ட் தெரிவித்துள்ளது. எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சி(63). முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012 ஆம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கிவிட்டு அதிபர் பதவியைப் பிடித்த மோர்சியால் ஓராண்டுக்கு மேல்…

Read More

கொழும்பிலுள்ள பள்ளிவாசல்களுக்கு சீ.சீ.டி.வி கமெரா

கொழும்பில் உள்ள பள்ளிவாசல்களில் சீ.சீ.டி.வி கமெரா வசதிகள் இல்லாத பள்ளிவாசல்களுக்கு கமெராக்களை பொருத்துவதற்கும் றமழான் மாதத்தில் இரவு நேரங்களில் பள்ளிவாசல்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று முஸ்லிம் விவகாரங்கள் மற்றும் தபால் அமைச்சின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. முஸ்லிம் விவகாரங்கள் மற்றும் தபால்துறை அமைச்சர் அப்துல் ஹலீம் மொஹமட் ஹசிமினின் பணிப்பில் அமைச்சரின் அந்தரங்க செயலாளர் பாஹிம் ஹாஷிம் தலைமையில் பொரளை பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டது. கொழும்பை சேர்ந்த பள்ளிவாசல்களின்…

Read More

பள்ளிவாயல் நிர்மாணிப்பதற்கு உங்கள் 100 ரூபாவையாவது தந்து உதவுங்கள். மூடப்பட்ட மபாஸா பள்ளிவாயலின் தலைவர் வேண்டுகோள்…

இர்ஸாத் ஜமால் பொத்துவில் கிராம சேவகர் பிரவு -05ல் அமைந்துள்ள மஸ்ஜிதுல் பமாஸா பள்ளிவாயல் கடந்த மாதம் 28ம் திகதி தொடக்கம் மூடப்பட்டிருப்பது வாசகர்கள் அறிந்த விடயமாகும். குறித்த பள்ளிவாயல் முறையற்ற வகையில் தனக்குச் சொந்தமான காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதை அடிப்படையாக கொண்டு  நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டது. குறித்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் வழக்கை தொடுத்தவரான அக்கறைப்பற்றை பிறப்பிடமாகவும் தலைநகரை அண்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தாஹீர் என்பவருக்கே காணி சொந்தமானது என தீர்ப்பு வழங்கியது….

Read More

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை கைவிடுங்கள்: மியான்மருக்கு ஒபாமா எச்சரிக்கை!

பல ஆண்டுகளாக ராணுவத்தின் பிடியிலிருந்து ஜனநாயக ஆட்சிக்கு முன்னேறிச் செல்லும் மியான்மர், சிறுபான்மையின ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ராணுவ அடக்குமுறையால பல ஆண்டுகளாக ஆட்சி செய்யப்பட்டு வந்த மியான்மரில், 2011-ம் ஆண்டு நிகழ்ந்த மாற்றத்திலும் ஜனநாயக போக்குக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு அளித்து வந்தார். இந்த நிலையில் தற்போது ஜனநாயகத்துக்கு எதிராக ரோஹிங்கிய முஸ்லிம் மக்களிடம் மியான்மர் அரசு காட்டும் போக்கை அமெரிக்க…

Read More

உலக புகைபிடித்தல் எதிா்ப்பு தினத்தையொட்டி பிரதமருக்கு மாணவா்கள் கொடி அணிவிப்பு

அஸ்ரப் ஏ சமத் உலக புகைபிடித்தல் எதிா்ப்பு தினத்தையொட்டி பிரதமா் ரணில் விக்கிரகசிங்கவுக்கு பாடாசலை மாணவா்கள் கொடியொன்றை அணிவித்தனா். இது அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் இந் கொடி விற்பனை தினத்தை சமுாத்தி அதிகரிகள் ஊடகா அமுல் படுத்தபட உள்ளது. படத்தில் சமுா்த்தி வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதியமைச்சா் அமீர் அலியும் காணப்படுகின்றனா்.

Read More

நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 2 எண்ணெய் கிணறுகள் – விலைமனு கோர திட்டம்

நாட்டில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு எண்ணெய் கிணறுகளில் எண்ணெய் படலத்தை பெற்றுக்கொள்வதற்கு விலைமனு கோருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 02 மாதங்களுக்குள் விலைமனு கோருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பீ.எம்.எஸ் படகொட தெரிவித்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விலைமனு கோரவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் கிணறுகளில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பீ.எம்.எஸ் படகொட மேலும் கூறினார்.

Read More