Headlines

உங்கள் உணவில் விஷம் உள்ளது.!

ஆம்… அன்றாடம் நாம் உண்ணும் உணவில் ஒன்றற கலந்திருக்கிறது ஏராளமான நச்சுப் பொருட்கள். அப்படியா! என உங்களின் ஆச் சரிய வார்த்தை காதில் விழுகிறது. முதலில் காலை முதல் இரவு வரை நீங்கள் உண்ணும் உணவு வகை களை பட்டியல் போடு வோமா? காலை எழுந்தவுடன் பால் சாப்பிடுகிறீங்க… அப்புறம் 5 இட்லி, தேங்காய் சட்னியுடன் காலை டிபன். மதியம் அரிசி சாதம், சாம்பாருடன், சுவையான சிக்கன் 65. ராத் திரி திடீர்னு ஒரு போன் வரும்….

Read More

தோட்டத்தொழிலாளர்களுக்கான வீடுகள் கட்டும் பணி ஆரம்பம்!

தோட்டத்தொழிலாளர்களுக்கான வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தினை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு முன்னெடுத்துள்ளது. 25000 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் இத்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவ்வகையில் இவ்வீடுகள் கட்டும் பணி மீரியபெத்தையிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது. நாட்டின் அபிவிருத்திக்கும் ஏற்றுமதி வருமானங்களுக்கும் சிறந்த முன்னேற்றத்தினை வழங்குவது தோட்டத் தொழிலாளர்களின் அரிய பங்களிப்பாகும். அவ்வகையில் அவர்களுக்கான இவ் வீட்டுத்திட்டத்தினை வழங்குவதில் இந்திய அரசாங்கமும் தமது உதவிகளை வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஒவ்வொருவருக்கும் சுமார் 07 பேர்ச்சஸ்…

Read More

இளகிய மனம் கொண்டவர்களே இவர்களுக்கு உதவுங்கள் !!

(16/05/2015) கணவன் மனைவி கல்வி கற்கின்ற இரண்டு பெண் பிள்ளைகளையும் இரண்டு ஆண் பிள்ளைகளுமாக வாழும் இந்த குடும்பமானது வருமானமே இல்லாத நிலையில் குடும்ப தலைவியின் நெல் குத்தி கிடைக்கும் சிறிய வருமானத்தினால் இந்த குடும்பம் கஸ்டத்தின் மத்தியில் செல்கின்றது. படத்தில் காணப் படுகின்ற 4 பிள்ளைகளின் தகப்பனார் தலையில் உள்ள நரம்பு பாதிக்கப் பட்டு தான் என்ன செய்கின்றோம் என்று கூட தெரியாமல் சில வேளைகளில் நினைவிழந்து செயற்படுகிரார் . இதனை சரி செய்வதர்க்காக பல…

Read More

அமைச்சர் றிஷாதை கைது செய்ய கோரும் சிங்கள ராவயவிடம் சில கேள்விகள்?

-சித்திக் காரியப்பர் – எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்ய வேண்டுமென்றும் அவ்வாறு நடைபெறாவிட்டால் எதிரான போராட்டம் வெடிக்கும் என்றும் சிங்கள ராவய என்ற இனவாத அமைப்பு தெரிவித்துள்ளது. வில்பத்து தேசிய வனம் மற்றும் மடு பிரதேசம் ஆகியவற்றில் இயற்கை வளங்களை அழித்தமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட வேண்டும். கைது செய்யப்படாவிடின் குற்ற விசாரணைப் பிரிவின் முன்பாக போராட்டம் நடத்தப் போவதாகவும் அந்த அமைப்பின் செயலாளர் நாயகமான மாகல்கந்த…

Read More

முஸ்லிம்களின் எதிர்ப்பினை தேடிக்கொள்ள மஹிந்தவும் அவரது குடும்பமுமே காரணம்: எஸ்.பி

மஹிந்த ராஜபக் ஷ யுத்­தத்தை வெற்றி கொண்­டதன் மூலம் 96 வீத­மான நன்­மை­களை வடக்கு தமிழ் மக்­களே பெற்றுக் கொண்­டார்கள். ஆனால் தமிழ் மக்­களை மஹிந்த ராஜபக் ஷவினால் வெற்றி கொள்ள முடி­யாமற் போனது. வெறு­மனே நாம் முஸ்லிம் மக்­களின் எதிர்ப்­பினைத் தேடிக் கொண்டோம். இதற்கு மஹிந்­தவும் அவ­ரது குடும்­ப­முமே காரணம் என கிரா­மிய பொரு­ளா­தார விவ­கார அமைச்சர் எஸ்.பி .திசா­நா­யக்க தெரி­வித்தார். அமைச்சர் திசா­நா­யக்க ஊட­க­மொன்­றுக்கு வழங்­கிய பேட்­டி­யொன்­றிலே இவ்­வாறு கூறி­யுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது….

Read More

மாணவரை காணவில்லை!

பண்டாரவளையைச் சேர்ந்த மொஹமட் அஸ்மி என்ற மேற்படி மாணவரை கடந்த (14/06/2015) ஞாயிற்றுக் கிழமை முதல் காணவில்லை. இவர் குறித்த தினமன்று காலை 6.30 மணிக்கு வீட்டிலிருந்து சென்றுள்ளார். மாலை வரை வீடு திரும்பாத நிலையில் இது பற்றி பண்டாரவளைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப் பட்டுள்ளபோதும் இதுவரை இவர் பற்றி எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. இவர் இறுதியாக பச்சை நிற டிசேர்ட்டும், சாம்பல் நிற ஜேர்ஸியும் கருப்பு நிற ட்றவ்சரும் அணிந்திருந்ததாக இவரின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இவர்…

Read More

வித்தியா படுகொலை – பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை (photos)

வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 9 பேரையும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 30 நாட்களுக்கு  தடுத்து வைத்து விசாரிக்க ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக இந்த உத்தரவினை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார். மேற்படி உத்தரவிற்கமைய இன்றிலிருந்து 30 நாட்களுக்கு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குறித்த சந்தேக நபர்களை விசாரிக்க மன்று அனுமதியளித்தது. இதனையடுத்து இன்றையதினமே யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த சந்தேக நபர்கள் 9 பேரையும் விசாரணைக்காக…

Read More

இபாஸாவுக்கு காது கேட்க உதவுவீர்களா?

பணத்தினால் உதவ முடியாவிட்டாலும் இந்த தகவலை SHARE செய்வதன் மூலம் உதவலாமே? (16/06/2015) அஸ்ஸலாமு அலைக்கும், முகம்மது இனாயத்துல்லாஹ் இபாஸா என்னும் முஸ்லிம் மாணவி தற்போது மொறட்டுவை பல்கலைகழகத்தில் முதலாம் வருட மாணவியாக Quantity Surveying (QS) பட்ட படிப்பினை தொடர்கின்றார். இவருடைய தந்தை ஒரு கிராம சேவகர் (GS) ஆவார். தனது உயர் தர படிப்பை வெற்றிகரமாக முடித்த இவருக்கு பட்ட படிப்பை முடிப்பதற்கு முன் வல்ல இறைவனின் சோதனை அணைத்துவிட்டது. தனது இரண்டு காதுகளின்…

Read More

பலசேனா தூஷணம் பாடுகிறது – டிலான் பெரேரா

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ படுதோல்வி அடைவதற்கு காரணம் கடும்போக்கு வாத அமைப்பைச் சேர்ந்த சில மதக் குழுக்களின் இனவாத செயற்பாடுகளேயாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். “பொதுபலசேனாபோன்ற கடும்போக்கு இனவாத மதக்குழுவுடன் அவர்களது அநாகரிக செயற்பாடுகள் தொடர்பாக நேருக்கு நேர் தகுந்த பதில் கூறியவன் என்ற விதத்தில் இத்தகைய இனவாதிகளின் நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டாம் என்று அன்று பல தடவைகள் முன்னாள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன்….

Read More

உயிர் தியாகம் செய்ய தயார் – ஜனாதிபதி மைத்திரி

“அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்காக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க செய்த தியாகத்தை எமது நாடு மீண்டும் வேண்டி நிற்கிறது. நாட்டுக்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர எனது உயிரையும் தியாகம் செய்யத் தயாராகவுள்ளேன்” – என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். உலகில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக உழைத்த எந்தவொரு அரசியல்வாதியும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அவர்களுடைய உயிர்களையும் கூட தியாகம் செய்ய வேண்டியிருந்தது. எந்த சவால்களுக்கும் அஞ்சாது எல்லா சமூக அரசியல்…

Read More

600 குடும்பங்களுக்கு உலா் உணவுப் பொதிகள்

அஸ்ரப் ஏ சமத் லைலா டீன் உம்மா பௌன்டேசனினால்  நோன்பு காலத்தில் தெமட்டக்கொட பிரதேசத்தில் வாழும் 600 குடும்பங்களுக்கு உலா் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இவ் பொதிகளை வழங்கும் நிகழ்வு தெமட்டக்கொட அல் ஹிஜ்ரா வித்தியாலயத்தில் நடைபெற்றது.  காலாநிதி  ஹாரீஸ்டீன் ஏற்பாட்டில் இப் பொதிகள் வழங்கப்பட்டன. தெமட்டக்கொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் கலந்து கொண்டாா்.  இம்முறை ஏறாவுர் போன்ற பல்வேறு இடங்களி்வல் 2000 பொதிகள் நோன்பு நோற்பதக்காக ஏழை முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டது.

Read More

எச்சரிக்கை!

தென்கொரியாவில் துரிதமாக பரவி வரும் உயிர்கொல்லியான ‘மர்ஸ்’ வைரஸ் இலங்கைக்குள் பரவுவதை தடுக்கும் வகையில் விசேட முன்னெச்சரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் நோய் தடுப்பு பிரிவின் தகவல்படி, வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கையர்களை பூரண பரிசோதனை உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு, கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 24 மணித்தியால சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது, தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை பிரஜைகள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்…

Read More