Headlines

பிரசன்னவுக்கு எதிராக முறைப்பாடு

காணி விவாகாரம் தொடர்பில் பலவந்தமாக 70 மில்லியன் ரூபாவை கோரினார் என்ற மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக மொரட்டுவையைச்சேர்ந்த நபரொருவர் நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

மஹிந்த களமிறங்கினால் சு.க. தோல்வி அடையும்

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்­ ஷவை பிர­த­ம­ர் வேட்பாளராகக் கள­மி­றக்­கினால் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தோற்­றுப்­போகும். தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் மஹிந்­த­வுக்குக் கிடைக்­காது. பொதுத்­தேர்­தலில் வெற்­றி­பெ­று­வ­தற்கு தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை திரட்­டிக் ­கொள்ள வேண்டும் என கிரா­மிய பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் எஸ்.பி. திசா­நா­யக்க தெரி­வித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மைக்­கா­ரி­யா­ல­யத்தில் நேற்­றுக்­காலை நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். தொடர்ந்து அவர் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­தா­வது, எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்­ஸவை…

Read More

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பலஸ்தீன் வழக்கு

-இப்னு ஜமால்தீன்- 2014ம் ஆண்டு இஸ்ரேல் பலஸ்தீன் – காஸா மீது மேற்கொண்ட போரில் பலஸ்தீன் மக்களின் மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்து கொண்டதுடன்,  சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் மற்றும் குண்டுகளையும் பயன்படுத்தி யுத்தக்குற்றங்களை புரிந்தது. இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றங்களை விசாரணை செய்யுமாறு பலஸ்தீன் அரசு சர்வேதச குற்றவியல் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்குத் தாக்கள் ஒன்றை செய்துள்ளது. யுத்தக்குற்றங்கள் உள்ளிட்ட இரு பயில்கள் அடங்கிய ஆவனங்களை கையளித்த பலஸ்தீன் வெளிவிவகார அமைச்சர் ரியாழ் அல்மாலிகி…

Read More

நட்பு நாடுகளை வேவு பார்ப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது – ஒபாமா

பிரெஞ்சு நாட்டின் அதிபர்களை அமெரிக்கா வேவு பார்த்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபருடன் போனில் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. அந்த உரையாடலின்போது கடந்த காலத்தில் நட்பு நாடுகளை அமெரிக்கா வேவு பார்த்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாது. அவை உடனடியாக நிறுத்தப்படும் என அவர் கூறியதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, பிரெஞ்சு நாட்டின் அதிபர்களான ஜாக்குவெஸ் சிராக், நிக்கோலஸ் சர்கோசி மற்றும் பிராங்கோய்ஸ் ஹாலண்டே ஆகியோரை அமெரிக்கா வேவு பார்த்ததை விக்கிலீக்ஸ் இணையதளம் நேற்று அம்பலப்படுத்தியது….

Read More

இலங்கையுடன் உறவை மேம்படுத்த பிரான்ஸ் ஆர்வமாக உள்ளது: தூதுவர்

இலங்கையுடன் உறவை மேம்படுத்த பிரான்ஸ் ஆர்வமாக உள்ளது என இலங்கக்காளன பிரான்ஸ் தூதுவர் ஜீன் மாரின் சொச் தெரிவித்துள்ளார். குறிப்பாக வர்த்தகம், முதலீடுகள், சுற்றுலா, மீன்பிடி, நீர்சுத்திகரிப்பு, சுற்றாடல் மற்றும் போதைவஸ்து தடுப்பு ஆகிய விடயங்களில் இந்த ஆர்வம் வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸின் தூதுவர் ஜீன் மாரின் சொச் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது இதனை தெரிவித்துள்ளார். இதனொரு கட்டமாக பிரான்ஸின் ஆசியாவுக்கான தலைமையகம் இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பிரான்ஸ் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வருடத்தில் ஒரு லட்சத்தை…

Read More

பாஸ்டனில் வெடிகுண்டு; வாலிபருக்கு அதிகாரபூர்வமாக மரண தண்டனை விதித்து தீர்ப்பு

அமெரிக்காவில் பாஸ்டன் நகரை சேர்ந்தவர் ஷோகார் சர்னேவ் (21). கடந்த 2013–ம் ஆண்டில் பாஸ்டன் நகரில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது. அதில் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 260 பேர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து ஷோகார் சர்னேவ் அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு ஷோகார் சர்னேவுக்கு 12 பேர் அடங்கிய மக்கள் நீதிபதிகள் குழு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது….

Read More

புதிய அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தாள்கள் செல்லுபடியானவை – மத்திய வங்கி

திய அரசால் அச்சிட்டு வெளியிடப்பட்ட நாணயத்தாள்கள் செல்லுபடியானவை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புதிய அரசு கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி புதிய ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை அச்சிட்டு வெளியிட்டிருந்தது. மத்திய வங்கியின் ஆளுநரது நியமனம் மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட நாணயத்தாளின் சட்டபூர்வ தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன், ஐயாயிரம் ரூபா நாணயத்தாளில் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டுள்ளதாகவும்,அவர் சிங்கப்பூர் பிரஜை எனவும் இதனால் இந்த நாணயத் தாள் செல்லுபடியாகாது எனவும் முன்னாள்…

Read More

பொது மக்களின் பணத்தை வீணடிக்க வேண்டாம் – ஜனாதிபதி

மக்களின் பணத்தை சுவரொட்டிகளுக்காகவும், பதாதைகளுக்குமாக வீணடிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த கால மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது, சுவரொட்டிகளையும், பதாதைகளையும் அமைப்பதற்காக பல பில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன. இதற்காக அரச நிறுவனங்களினால் பொது மக்களின் நிதி ஒதுக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இதனைத் தவிர்த்து, அந்த நிதி மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Read More

போதைப்பொருள் விவகாரத்தில் அரச அதிகாரிகளுக்கு தொடர்பு : ஜனாதிபதி

எமது நாட்டிற்குள் போதைப்பொருட்களை கொண்டுவருவதற்கு அரச நிறுவனங்கள் இரண்டை சேர்ந்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த வாரம் அறிக்கை கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?.

பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும். பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும். மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம்உண்டாகும். எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும். ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும். தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்….

Read More

இஸ்லாத்துடன் முரண்படும்  எந்த சட்டத்தையும் ஒப்பு கொள்ள மாட்டோம் –  சவூதி அரசு

ஆணும் பெண்ணும் திருமணம் செய்வது என்பது இயல்பான ஒன்று இந்த நிலையை மாற்றி ஆணும் ஆணும் திருமணம் செய்வது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்வது போன்ற செயல்களுக்கு சில நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன மேலும் இதை சர்வதேச சட்டங்களாக மாற்றுவதர்கு பல நாடுகள் முயர்ச்சித்து வருகின்றன. இந்த நிலையில் இந்த இழி செயல்களை கடுமையாக விமர்ச்சித்துள்ள சவூதி  அரேபியா இஸ்லாமிய சட்டங்களோடு முரண்படாமல் ஒத்து போகும் சர்வதேச சட்டங்களை மட்டுமே சவூதி  அரேபியா மதிக்கும் என்றும் மனித…

Read More