Headlines

தென் கொரியாவில் வேகமாக பரவும் மெர்ஸ் வைரஸ்: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

தென் கொரியாவில் வேகமாக பரவி வரும் மெர்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. சவுதி அரேபியா நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் மர்ம நோய் ஒன்று தாக்கியது. அது புது வகை கிருமியால் உருவாகியிருந்தது. இந்த நோய்க்கு ‘மெர்ஸ்’ என்று பெயரிடப்பட்டது. இந்நோய் தாக்கியவர்களில் பலர் உயிரிழந்தனர். அங்கிருந்து ‘மெர்ஸ்’ நோய் மற்ற நாடுகளுக்கும் பரவியது. உலகம் முழுவதும் இதுவரை 1167 பேரை ‘மெர்ஸ்’ நோய் தாக்கியது. இதில் 479…

Read More

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், வாக்குப்போட வசதி செய்யுங்கள்..!

எமது நாட்டிலிருந்து மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுச் சென்றுள்ளவர்களின் வாக்குரிமையை புதிய அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டுமென  வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கான ஐக்கிய உறுப்பினர்கள் அமைப்பு வலிறுத்தியுள்ளது. அத்துடன் அவர்ளின் வாக்குரிமையையும் தொழில் உரிமைகளையும் வலியுறுத்தி எதிர்வரும் 22ஆம் திகதி சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கிய பாரிய பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ள அவ்வமைப்பு பேரணியின் இறுதி தினமான 27ஆம் திகதி ஜனாதிபதியிடம் தமது கோரிக்கைகளடங்கிய மகஜரொன்றையும் கையளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. வெளிநாட்டில் தொழில் புரியும்…

Read More

ஊடகவியலாளர்களுக்கு மிகவிரைவில் மோட்டார் சைக்கிள்

ஊடகவியலாளர்களின் நலன்கருதி மோட்டார் சைக்கிள்கள் வழங்குவது தொடர்பான விபரங்கள் இவ்வார இறுதியில் தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் என ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவித்தாரன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஊடகவியலாளர்களின் நலன் கருதி மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.தகவல்களை முழுமையாக அறிந்துகொண்ட பின்னர் விண்ணப்பங்களை ஊடக அமைச்சில் பெற்றுக்கொள்ளலாம். அதற்கமைய இலங்கை பிரஜையாக இருத்தல்,  5 வருட…

Read More

பாடசாலை மாணவர்களில் 11 சதவீதமானவர்கள் புகைப்பழக்கத்திற்கு ஆளாகியவர்கள்

இலங்கையில் 13 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் 11 சதவீதமானவர்கள், புகைத்தல் பழக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்று உலக சுகாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பாடசாலை  மாணவ, மாணவிகளில் ஆயிரம் பேரில் ஒருவர் புகையிலை பாவனைக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையின் பிரகாரம், 16 சதவீதமான மாணவர்களும் 5 சதவீதமான மாணவிகளும் புகையிலை பாவனைக்கு உட்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. புகைத்தல் மற்றும் புகையிலை பாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் 80 சதவீதமான…

Read More

நேபாளத்தில் மேகி நூடுல்ஸ் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு தடை

நேபாள அரசு மேகி நூடுல்சின் விற்பனைக்கும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் தடைவித்து உத்தரவிட்டுள்ளது. மேகி நூடுல்சில் உடலுக்கு கேடு விளைவிக்கும் காரீயமும், சுவை கூட்டும் மோனோ சோடியம் குளூட்டோமேட் ரசாயனமும் அதிக அளவு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. டெல்லி, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் மேகி நூடுல்ஸ் விற்பனையை தடை செய்துள்ளது. தற்போது ராணுவத்திலும் மேகி நூடுல்சை சாப்பிடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் மேகி நூடுல்ஸ் விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விவசாயத்துறை அமைச்சக…

Read More

பெண்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தேர்தல் முடிவு ரத்து: பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவு

பாகிஸ்தானில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெண்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து தேர்தல் முடிவை அந்நாட்டு தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. நாட்டின் வடமேற்கில் உள்ள, பழமைவாதிகள் அதிக அளவில் வசிக்கும் கைபர் பக்துன்க்வா மாகாணம் லோயர் திர் மாவட்டத்தில் உள்ள பிகே-95 தொகுதிக்கு கடந்த மே 7-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், தேர்தலின்போது பெண்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, சமூக ஆர்வலர்கள்,…

Read More

ரோஹிங்யாமுஸ்லிம்களுக்கு பிராஜா உரிமை வழங்கப்பட வேண்டும் ; அமெரிக்கா கடும் உத்தரவு

மியன்மாரில் நாட்டில் 1 மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வாழ்கினறனர் அவர்களுக்கான பிரஜா உரிமைகளை 18 இருந்த 24 மாதத்திற்குள் மியன்மார் அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அமெரிக்கா நாடு மியன்மார் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான பயங்கரமான, கொடூரமான சம்பவங்களும் இப் பரிதாபமான நிலமையும் பாங்காக்கில் 17 பிராந்திய நாடுகள் அவசர மாநாடு ஒன்றை நடத்தும் அளவிற்கு நாடுகளின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது..

Read More

இன்று காலி – மஸ்ஜிதுத் தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் திறப்பு. அனைவருக்கும் அழைப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் … காலி – மஸ்ஜிதுத் தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் புதிய கட்டட திறப்பு நிகழ்வும் விஷேட பயான் நிகழ்ச்சியும் இன்ஷா அல்லாஹ் எதர்வரும் வெள்ளிக்கிழமை 05-06-2015 நடைபெறவுள்ளது. இதில் தென்னிந்தியப் பேச்சாளர் சகோ. கோவை அய்யூப் மற்றும் பிரபல பேச்சாளர்களின் சிறப்புரைகள் இடம்பெறவுள்ளன. அனைவரும் இந் நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். குறிப்பு : அனைவருக்கும் பகற்போசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Mohamed AACN 0779 196 111

Read More