Headlines

வில்பத்து பிரதேசத்தில் சட்டவிரோத குடியேற்றங்கள் இல்லை: மாவட்ட செயலாளர்

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் வில்பத்து வனப்பகுதியை அண்டிய குடியிருப்புகள் தொடர்பாக நேரில் கண்டறியச் சென்ற ஜே.வி.பி உறுப்பினர்களை சந்தித்த மாவட்ட செயலாளர் அங்கு அவ்வாறு எதுவிதமான சட்டவிரோதமான குடியேற்றமும் இல்லையென தெரிவித்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் ஜே.வி.பி மேல் மாகாண சபை உறுப்பினர் லால் காந்த. 24 வருடங்களுக்கு முன் அங்கு வாழ்ந்த மக்களுக்கே அங்கு மீள் குடியேறும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தம்மிடம் நேரில் தெரிவித்ததாகவும் லால் காந்த மேலும் தகவல் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் அங்கு…

Read More

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தவறென வாதித்த ஊடகவியளாளர் குழுவிற்கு அதே இடத்தில் பதிலடி கொடுத்த அமைச்சர் றிஷாத் (வீடியோ இணைப்பு)

உஸாமா பாஹிம் கடந்த காலங்களில் இருந்து அமைச்சர் றிஷாத் பல்வேறுபட்ட இனவாத அமைப்புகளினால் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றார். இதில் மக்கள் விடுதலை முண்ணணி கட்சியின் உறுப்பினர் லால் காந்தன்,காணி அமைச்சின் செயலாளர்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் முசலி பிரதேச செயலாளர் கலந்து கொண்டு வில்பத்து தொடர்பான உண்மை நிலையினை ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

Read More

எனது ஆட்சியில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடம்பெற்ற அநீதிகளுக்கு நான் பொறுப்பல்ல: மஹிந்த ராஜபக்ஷ

எனது ஆட்சியில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு நான் பொறுப்பல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆரம்பம் முதலே தான் முஸ்லிம்களின் நண்பன் என்று கூறியுள்ள அவர், பொய் பிரசாரங்களினாலே முஸ்லிம்கள் தன்னைவிட்டு தூரமானதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை கொழும்பு நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Read More

நாடு பிளவுண்டால் பேரழிவைச் சந்திக்க நேரிடும்: மைத்திரிபால சிறிசேன

எந்தக் காரணத்துக்காக மக்கள் பிளவுண்டாலும், பிளவுபடுத்தப்பட்டாலும் பேரழிவையே சந்திக்க நேரிடும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசியல் நிகழ்ச்சி நிரலை விட நாட்டின் நிகழ்ச்சி நிரல் முக்கியமானது. அதிகாரத்திற்காக பிளவுபடுவதா அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவதா என்பது பற்றி அனைவரும் தீர்மானமெடுக்கும் தருணமிது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாந்தோட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை மாகம்புர ருஹுணு மரபுரிமை அருங்காட்சியகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். நாட்டை கட்டியெழுப்புவதற்கு…

Read More

சல்மானின்ஆட்சியில் முன்னேற்ற பாதைகளை முத்தமிடும் சவுதி அரேபியா இன்னும் 18 மாதத்தில் சவுதி தயாரிப்பில் உருவான விமானங்கள் வானில் பறக்கும் என அறிவிப்பு!

மே 6 ஆம் நாள் நடை பெற்ற சவுதி அரேபியாவின் பொருளாதார வளர்ச்சி குழுவின் கூட்டத்தில் சவுதி அரேபியாவின் இளவரசரும் பாது காப்பு துறை அமைச்சருமான முஹம்மது பின் சல்மானால் வைக்க பட்ட பரிந்துரையை ஏற்று கொண்டு விமான தயாரிப்பில் சவுதி அரேபிய இறங்குவது என்ற முடிவு ஒரு மனதாக எடுக்க பட்டது உக்ரைன் நாட்டுடன் கூட்டாக இணைந்து இந்த தயாரிப்பில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்க பட்டிருக்கிறது உக்ரைன் நாட்டுடன் கூட்டாக தயாரிப்பது என்றாலும் இதன் தொழில்…

Read More

இறை இல்லத்தில் அமர்ந்து மார்க்க சொர்பொழிவை செவியுறும் அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கேரி!

மௌலவி செய்யது அலி ஃபைஜி ஆப்ரிக்க கண்டத்தில் அமெரிக்காவின் முக்கிய படை தளத்தை கொண்டுள்ள நாடு ஜைபுட்டி சில தினங்களுக்கு முன்பு இங்கு வந்த அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கேரி அங்கு உள்ள ஒரு இறை இல்லத்திர்கு வருகை தந்தார் அப்போது அங்கு மார்க்க உரை நடை பெற்று கொண்டிருந்தது இஸ்லாம் கூறும் சகிப்பு தன்மை என்ற தலைப்பில் நிகழ்த்த பட்டு கொண்டிருந்த உரையை அந்த இறை இல்லத்தில் அமர்ந்து ஜான் கேரி செவியுற்றார்…

Read More

மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்!

பலம் தரும் மாம்பழம்! முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். இந்தியப் பழங்களின் அரசன் என்ற சிறப்பும் பெற்றது மாம்பழம். ஒருபுறம், பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாகக் கூறி, ஐரோப்பிய யூனியனானது இந்தியாவின் அல்போன்சா மாம்பழத்துக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது. மற்றொருபுறம், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுவருகின்றன. இதனால், மாம்பழத்தின் மீதான ஒருவித அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ‘பல்வேறு ஆரோக்கிய நலன்களையும் அள்ளித்தரக்கூடிய சுவையான மாம்பழத்தை, பயத்தின் காரணமாக ஒதுக்கித் தள்ளக்…

Read More

இறுக்கமான ஆடைகள் அணியும் பெண்கள் மட்டும் இதனை வாசிக்கவும்!

இன்றைய இளம் பெண்கள் பாஷன் என்று நினைத்து உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணிகிறார்கள். இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என நவநாகரிக உடைகள் இப்பொழுது கடைகளில் கிடைக்கின்றன. பெண்கள் நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம் என்று கருதுகின்றனர். ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உடலுக்கு நல்லதல்ல. பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர்வை வெளியேற முடியாமல், அதாவது வெளியே வர வாய்ப்பு இல்லாமல் கிருமிகளின்…

Read More

பிரித்தானியாவில் எம்.பி.யாக தெரிவு செய்யப்பட்டுள்ள 20 வயது மாணவி

பிரித்தானியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 20 வயது பெண் ஒருவர் இளம் எம்பியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் ஸ்கொட்லாந்திலிருந்து போட்டியிட்ட மேஹ்ய்ரி பிளாக்(Mhairi Black-20) என்ற பெண், அந்நாட்டின் மிக இளம் வயது எம்.பி.யாக இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் வெளிநாட்டு விவகார செய்தி தொடர்பாளருமான டக்ளஸ் அலெக்சாண்டர் என்பவரை 5000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். தேர்தலில்…

Read More

மாகாண நிதி ஒதுக்கீட்டில் இருந்து சிலவற்றை பெற்றுத்தர உ றுதியளிக்கின்றேன் – றிப்கான் பதியுதீன்

பாடசாலையின் கோரிக்கை தொடர்பில் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதினின் கவனத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்  பாடசாலையின் சில தேவைப்பாடுகளை  தமது மாகாண நிதி ஒதுக்கீட்டில் இருந்து பெற்றுத்தருவதாகவும் கூறினார். வவுனியா  சூடுவேந்தபுளவு  அல்-இக்பால் பாடசாலை யில் இடம் பெற்ற  விளையாட்டுப் போட்டி  நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் அங்கு பேசுகையில்  கூறியதாவது – வவுனியா மாவட்டத்தின் கல்வி…

Read More

சிறுவர் பாதுகாப்பு குழு மற்றும் சிறுவர் கழகங்களுக்கு அலுமாரிகள் வழங்கி வைக்கப்பட்டன

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிறுவர் பாதுகாப்பு குழு (YCRMC)மற்றும் சிறுவர்கழங்கள் என்பவற்றின் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் வோர் சைல்ட் நிறுவனத்தின் அனுசரனையில் எஸ்கோ  நிறுவனத்தின் வழிகாட்டலில் அலுமாரிகள் வழங்கி வைக்கப்பட்டன. உதவி பிரதேச செயலாளர் ஏ.நவேஸ்வரன் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் வோர் சைல்ட் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதி நிதி மரினா டொறிஸ் லீனஸ் பொன்னக்கோன், எஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.பிரித்தியோன்,…

Read More

வீட்டிலிருந்து நகை பணம் திருட்டு

அப்துல்லாஹ் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகல்லாறு முதலாம் குறிச்சியில் வீடொன்றிலிருந்து (08) நேற்று 10 பவுண் நகைகளும், பத்தாயிரம் ரூபா ரொக்கமும் திருடப்பட்டுள்ளதான முறைப்பாடு பதியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுப்பிரமணியம் சுகந்தி என்பவரின் வீட்டில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது. அடுக்களைப் பக்கத்தினூடாக வீட்டிற்குள் பிரவேசித்து அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நகைகளும் பணமும் திருடப்பட்டுள்ளதாக சுகந்தி தெரிவித்தார். தாம் நித்திரையில் ஆழ்ந்திருந்தபோது திருட்டு இடம்பெற்றுள்ளதாகவும் தூக்கத்திலிருந்து வழமைபோன்று காலை ஐந்து மணிக்கு எழுந்து பார்த்தவுடன் மேற்படி திருட்டு…

Read More