Headlines

1959 இல் பண்டாரநாயக்காவை படுகொலை செய்தது போன்று, மைத்திரியை படுகொலைசெய்ய முயற்சி – ராஜித சேனாரத்ன

-எம்.ஏ. எம். நிலாம்- ஜனாதிபதியின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக  நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்த சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, அன்று 1959 பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்டது போன்றதொரு முயற்சி இன்றும் காணப்படுவதால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய பாரிய கடப்பாட்டை மக்கள் கொண்டிருப்பதாக தெரிவித்தார். நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சர்வதேச தாதியர் தின வைபவத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அண்மைக் காலமாக சில சக்திகள் ஜனாதிபதி…

Read More

சம்மாந்துறை ; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மக்கள் சந்திப்பு

கலைமகன்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சியின் கொள்கை விளக்கம் மற்றும்  மக்கள் சந்திப்போன்று அண்மையில்  சம்மாந்துறையில்  இடம்பெற்றது. இந்த சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளரும் கிழக்கு மாகாண அமைப்பாளருமான  கணணி  பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா கலந்துகொண்டார். 100க்கும் அதிகமான தமிழ் ,முஸ்லிம் பெண்களை உள்ளடக்கிய மகளிர் அமைப்பொன்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில் மக்களின் மத்தியில் தற்போதைய சூழ்நிலையில் எமது சமுகத்தின் தேவைப்பாடுகள் சம்பந்தமாகவும் எதிர்வரும்…

Read More

திருமலை ஊடகவியலாளர் யாசீம் தாக்கப்பட்டமைக்கு கிழக்கு ஊடக சங்கம் கண்டனம்

திருகோணமலை மாவட்ட செய்தியாளரான அப்துல் சலாம் யாசீம் செய்தி சேகரிக்கச் சென்ற வேளையில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டமை குறித்து கிழக்கு ஊடக சங்கம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், பொதுச் செயலாளர் வி. பத்மசிறி ஆகியோர் கைnழுத்திட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள இக்கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருகோணமலை, ரொட்டவௌ மதரசா மண்டபத்தில் நடைபெற்ற விவசாய சங்கத்தின் கூட்டத்திற்கு செய்தி சேகரிப்பதற்காகச் சென்றிருந்த திருகோணமலை மாவட்ட செய்தியாளர் அப்துல் சலாம் யாசீம்…

Read More

வில்பத்து விவகாரம் விளக்கமளிக்கும் நிகழ்வு வெள்ளவத்தையில்

ஏ.எஸ்.எம்.ஜாவித் கடந்த 25 வருடங்களாக அகதிகளாக இருந்து தற்போது மன்னார் சிலாவத்துறைப் பகுதியில் மீள் குடியேறும் மக்கள் வில்பத்துக் காணிகளை சட்ட விரோதமாக பிடிக்கின்றார்கள் என பல ஊடகங்களில் இனவாதிகள் பொய்ப்பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அதன் உண்மை நிலைகளை கண்டறிய “உடநடித் தீர்வுக்கான குழு” எனும் அமைப்பு சிலாவத்துறைப் பகுதிக்கு நேரடியாகச் சென்று அதன் அறிக்கைகளை பொதுமக்கள், கல்விசார் சமுகம், புத்தி ஜீவிகள், ஊடகவியலாளர்கள், சட்ட அறிஞர்கள் என்போருக்கு விளக்கும் நிகழ்வு RRTஅமைப்பின் தலைவர் சட்டத்…

Read More

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்!!!

மாம்பழம்: பழங்களின் ராஜா என்று கூறப்படும் மாம்பழம் உலகிலேயே அதிக சுவை மிகுந்த ஒரு பழமாக விளங்குகிறது. ஆனால் அப்பழத்தில் மிகுந்த சர்க்கரை இருப்பதால் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது. தொடர்ந்து இதை உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடும். சப்போட்டா: இந்த பழத்தில் GI குறியீட்டு எண் 55 க்கு மேலுள்ளதால் இது சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. இப்பழத்தில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது. அன்னாசி: இப்பழத்தில் அதிக அளவு கிளைசீமிக் குறியீடு இருப்பதால் இப்பழத்தை அறவே தவிர்க்க…

Read More

யார் இந்த பழனி பாபா????வாசிக்க படவேண்டிய வரலாறு!!!

சுப.கார்த்திகேயன் சமுக ஆர்வலர் யார் இந்த பழனி பாபா???? வாசிக்க படவேண்டிய வரலாறு!!!அநீதிகளுக்கெதிராகவும்,அரசு அடக்குமுறைகளுக்கெதிராகவும் போராடி ஓய்ந்த ஒரு மாவீரனின் வரலாறு!!!அரசியல் தளத்தில் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டிய அல்ஹாஜ் பழனிபாபா அவர்களது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும். இவரது திறமையைக் கண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கைய்யா தேவர், தனது நண்பர்களிடமெல்லாம் அஹமது அலியை அறிமுகப்படுத்திவைக்கும்போது, அவரது பெயரைச் சொல்லாமல் மரியாதையுடன் “பாபா” என்றுஅறிமுகப்படுத்துவார். அதுபோலவே அஹமது அலி பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது தனது…

Read More

முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் பிரச்சினை றிஷாத் பதியுதீனுக்கு மாத்திரம் கடமையல்ல

மன்னார் வில்பத்து விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், அது இன்று அரசியல் பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் ஹலால் உணவில் ஆரம்பித்த பிரச்சினை படிப்படியாக நகர்ந்து சென்று இன்று மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் கைவைக்கின்ற அளவுக்கு கைமீறிப் போயுள்ளது. பொதுபலசேனா போன்ற சிங்கள கடும்போக்கு அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என்பன அடிப்படையில் ஆதரமற்ற பிரச்சினைகளுக்குப் பின்னால் இருந்துகொண்டு செயற்பட்டது. இதற்கு ஒருசில சிங்கள ஊடகங்களையும் இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலிருந்தே இந்த…

Read More

அதிர்ச்சிகர சம்பவம் ;மிஹின் லங்கா விமானப் பயணத்தின் போது உறக்கத்தில் ஆழ்ந்த விமானி!

இலங்கையின் குறைந்த கட்டண விமான சேவையான மிஹின் லங்காவின் விமானியான கப்டன் ஒருவர் நடுவானில் வைத்து தமது கடமையை மறந்து உறங்கிய சம்பவம் வெளியாகியுள்ளது. கடந்த மே முதலாம் திகதியன்று சார்ஜாவில் இருந்து கொழும்பை நோக்கி வந்த எம்ஜே 408 மிஹின்  லங்கா விமானத்திலேயே இந்தியரான கப்டன் வாஹ் என்பவர் சுமார் 20 நிமிடங்கள் வரை உறக்கம் கொண்டதாக முறையிடப்பட்டுள்ளது. மும்பாயை சேர்ந்த இவர், வழமையாக இடியோசையின் போதும் உறங்கக் கூடியவர் என்ற சாதனையை கொண்டுள்ளார். எனினும்…

Read More

மன்னார் வில்பத்து விவகாரம்- கட்டுரை

ஆர்.ரஸ்மின் மன்னார் வில்பத்து விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், அது இன்று அரசியல் பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் ஹலால் உணவில் ஆரம்பித்த பிரச்சினை படிப்படியாக நகர்ந்து சென்று இன்று மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் கைவைக்கின்ற அளவுக்கு கைமீறிப் போயுள்ளது. பொதுபலசேனா போன்ற சிங்கள கடும்போக்கு அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என்பன அடிப்படையில் ஆதரமற்ற பிரச்சினைகளுக்குப் பின்னால் இருந்துகொண்டு செயற்பட்டது. இதற்கு ஒருசில சிங்கள ஊடகங்களையும் இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலிருந்தே…

Read More

சஜின்வாஸ் குணவர்த்தனவிடம் CID தொடர்ந்து விசாரணை!….

பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன தற்போது குற்றப் புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். முன்னாள் ஆட்சியின் போது ஜனாதிபதி அலுவலக வாகனங்களை அநாவசியமாக பயன்படுத்தியதாக சஜின்வாஸ் குணவர்த்தன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (11) குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட சஜின்வாஸ் குணவர்த்தன தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

Read More

சவூதி அரசால் வழங்கப்பட்டுள்ள பேரிச்சம்பழங்கள் பெறுவதற்கு யாழ் முஸ்லீம் மக்கள் பெரும் சிரமம்……

பாறுக் ஷிஹான் சவூதி அரசாங்கத்தினால் நோன்பு காலத்திற்கென வழங்கப்பட்டுள்ள பேரிச்சம்பழங்கள்  பெறுவதற்கு யாழ் முஸ்லீம் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவித்துள்ளனர். யாழ் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து பள்ளிவாசல் எல்லைக்குட்பட்ட மக்களிற்கு மேற்குறித்த பேரிச்சம்பழங்களை பெறுவதற்கு என்றுமில்லாதவாறு குடும்பவிபரங்களை சமர்ப்பிக்குமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தை வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் கடிதம் மூலமாக கேட்டுள்ளார். அத்துடன் குடும்ப விபரங்கள் அவசியமாகவுள்ளதுடன் இதன்படி குடும்ப தலைவர்.தலைவி பெயர்,அடையாள அட்டை.முகவரி ,குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை என்பன அதில்…

Read More

எரிபொருள்களுக்கு தட்டுப்பாடில்லை!

எரிபொருள்களின் விலை அதிகரிக்கப் போவதாக மக்களை ஏமாற்றும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுவதாகச் சுட்டிக் காட்டியுள்ள மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு, நாட்டில் எரிபொருள்களுக்குத் தட்டுப்பாடு இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, எரிபொருள்களின் விலையை அதிகரிப்பதற்கு எவ்விதமான தீர்மானமும் எட்டப்படவில்லை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதற்கு ஒரு போது இடமளிக்கப்படமாட்டாது என்றும் அது அறிவித்துள்ளது. எரிபொருள் மாபியாக்கள் மூலமாக முன்னெடுக்கப்படும் போலியான பிரசாரங்களை நம்பவேண்டாம் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

Read More