Headlines

மறிச்சுக்கட்டிக்கு பஸ்களில் சென்ற குழுக்களால் பதட்டம்

சிலாவத்துறை பிரதேசத்தின் மறிச்சிக்கட்டி மற்றும் கரடிக்குளி உள்ளிட்ட கிராமங்களுக்கு ராவணபலய உள்ளிட்ட இனவாத குழுக்கள் இன்று  விஜயம் மேற்கொண்டுள்ளதால் அங்கு சிறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. முசலி பிரதேச செயலகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட குழுவின் விஜயத்தால் அப்பகுதி மக்கள் பயந்த நிலையில் உள்ளதாகவும், இவர்கள் சுமார் நான்கு பஸ்களில் சென்றுள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.

Read More

இலங்கைப் பெண்கள், டுபாயில் உண்ணாவிரதப் போராட்டம்

தமக்கான சம்பள கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி, துபாயிலுள்ள இலங்கைப் பணிப்பெண்கள் சிலர் எட்டாவது நாளாகவும் சாஜாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சுமார் 100 இலங்கைப் பணியாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள அதிகாரிகளை தெரியப்படுத்தியுள்ள போதிலும், தமக்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனைய நாட்டவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், சம்பள உயர்வு உள்ளிட்ட எவ்வித வசதிகளும் தமக்கு செய்துகொடுக்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். தம்மை மீண்டும் நாட்டிற்கு…

Read More

இலங்கை – கட்டார் உறவை மேம்படுத்த முயற்சி, இருநாட்டு பொருளாதாரப் பரிமாற்றத்தின் அளவு 417.4 மில்லியன்

இலங்கை மற்றும் கட்டாருக்கிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு துறைகளில் காணப்படும் உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாஷிம், கட்டாரின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் ஷேக் அஹ்மத் பின் ஜாசிம் பின் முஹம்மத் அல் தானி ஆகியோருக்கிடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு ஒத்துழைப்பு அம்சங்களை மேம்படுத்தும் வழிகளை பரிசீலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் பொருளாதாரம்…

Read More

வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியேறவில்லை – பஸில் ராஜபக்ஸ

வில்பத்து மற்றும் அதனையண்டிய பிரதேசத்தில் உரியமுறைகளை பின்பற்றியே வடக்கு முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தினால் காணிகள் வழங்கப்பட்டதாக பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வடக்கு வசந்தம் திட்டத்திற்கு தான் பொறுப்பாளராக நியமிக்கபட்பட்டிருந்த போது, உரிய சட்டங்களை பின்பற்றி  அங்கு மீளக்குடியேறிய முஸ்லிம்களுக்கு, அரசாங்கத்திற்குரிய காணிகளை வழங்கியதாகவும், இவை முழுக்கமுழுக்க சட்டபூர்வமானவை எனவும் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசங்களில் 1990 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதிகளில் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் உண்டு. அதன்பின்னர் அவர்கள் புலிகளினால் பலாத்காரமாக விரட்டியடிக்கபட்டனர். பயங்கரவாத பிரச்சினை…

Read More

ஏமாறும் வாலிபர்கள், ஏமாற்றும் வெளிநாட்டு முகவர்கள்

கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம் இப்போதெல்லாம் நாட்டில் படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் அவர்களுக்கு வெளிநாட்டுக்கு ஒருமுறையாவது தொழிலுக்கு சென்று விடவேண்டும். படிப்புக்கு தகுந்த ஊதியம் இல்லை என சொல்லும் காரணம் இன்னொருப்பக்கம் இருக்க வெளிநாட்டின் அக்கரை பச்சைக்கு மயங்கி செல்லும் வாலிபர்களே அதிகம் எனலாம். அவ்வாறாக செல்லும் வாலிபர்களே கொஞ்சம் நிதானமாக முடிவெடுங்கள். “இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை” இதுதான் வெளிநாட்டு வாழ்க்கை என்பதை அடுத்தவர் சொல்லும் போது விளங்குவதில்லை. தான் அங்கு சென்று அதன் வடிவத்தை கண்ணால்…

Read More

இலங்கைக்கும் நில நடுக்க எச்சரிக்கை.. புவியியல் நிபுணர் சீ.பி.திஸாநாயக்க

இலங்கையில் எதிர்காலத்தில் பாரிய நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் நிபுணர் சீ.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்து – அவுஸ்திரேலிய பூமித் தட்டுக்களில் உருவாகியுள்ள மாற்றமே இவ்வாறு இலங்கையில் நில நடுக்கம் ஏற்பட காரணமாக அமையும். இலங்கைக்கு 500 முதல் 700 கிலோ மீற்றர் தொலைவில் இந்த புதிய பூமித் தட்டுப்பகுதி காணப்படுகின்றது. 50 மில்லியன் ஆண்டுகளாக இந்த பூமித்தட்டுக்கள் நகரத் தொடங்கியுள்ளன. இந்து – அவுஸ்திரேலிய பூமித் தட்டு ஏற்கனவே வெடிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கையின் மத்திய…

Read More

பாலத்தீனத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க வத்திகன் முடிவு

பாலத்தீன நாட்டை வாத்திகன் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கும் உடன்பாடு விரைவில் எட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலத்தீன் ஆகிய இரு நாடுகள் தனியாக இருப்பதே இஸ்ரேலுடனான மோதலைத் தணிக்கும் வழி என வாத்திகன் கூறியுள்ளது. இது தொடர்பிலான புதிய ஒப்பந்தத்தில் பாலத்தீனத்தில் கத்தோலிக்க தேவாலயத்தின் செயல்பாடுகள் குறித்த விடயங்களும் இடம்பெறும். இம்முடிவு தொடர்பாக இஸ்ரேல் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலத்தீனப் பகுதிகள் மீது கடந்த ஆண்டு இஸ்ரேல் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது….

Read More

பிளாஸ்டிக் தராசுகளுக்கு தடை

பிளாஸ்டிக் தராசுகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தராசுகளை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தராசுகளை பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட தராசுகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் இவ்வாறான தராசுகளே பயன்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் கொள்வனவு செய்யும்பொருட்கள் உரிய நிறையில் காணப்படுகின்றதா என்பதனை பரிசோதனை செய்யும் உரிமை நுகர்வோருக்கு உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. நிறை தொடர்பில் ஏதேனும் முறைப்பாடு இருந்தால் 011- 2587199…

Read More

ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இலங்கையில் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் முன்னெக்கப்படுகின்றது!

முனவ்வர் காதர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தலைமையின் கீழ்  இலங்கையில் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் முன்னெக்கப்படுகின்றது. இது  வெளிப்படையான கொள்கைகளினை உறுதிசெய்கின்றது. இந்த சாதகமான மாற்றங்கள் இலங்கையுடனான சுவிட்ஸ்லாந்தின் வணிக தொடர்புகள் எளிதாக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.ஏற்றுமதி,வர்த்தகம் மற்றும் பரஸ்பர வர்த்தக ஊக்குவிப்பானது ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் நோக்கமாக உள்ளதால் சுவிட்ஸ்லாந்து – இலங்கை இரு நாடுகளுக்கிடையிலான இணைந்த பொருளாதார சந்திப்புக்கள் வெற்றிகரமான முயற்சியாக அமையும் என்பதிலும் ஐயமில்லை. வெளிநாட்டு முதலீடுகளை விருத்திசெய்து முக்கியமாக…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதினால் இலங்கை சட்டக் கல்லூரிக்கு நீர் குளிரூட்டும் இயந்திரம் வழங்கிவைப்பு

இலங்கை சட்டக் கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிசின் வேண்டுகோளுக்கினங்க கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவருமாகிய அமைச்சர் றிசாட் பதியுதினால் மாணவர்களின் பயன்பாட்டிற்கென 88,000ரூபா பெறுமதியான நீர் குளிரூட்டும் இயந்திரம் ஒன்றை தனது தனிப்பட்ட நிதியிலிருந்து வழங்கிவைத்தார். இந் நிகழ்வின் போது கருத்து தெரிவித்த இலங்கை சட்டக் கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிசின் தலைவர் ‘அமைச்சரிடம் நாங்கள் இவ் வேண்டுகோளை முன்வைத்தவுடன் அதனை ஏற்றுக்கொண்டு அதற்கான காசோலையை எம்மிடம் கையளித்தார். இதன் மூலம்…

Read More

ACMC -SLMC யோசனைகள், ஜனாதிபதி செயலகத்தில் இன்று கையளிப்பு

புதிய தேர்தல் முறை உள்ளடங்கிய 20 வது அரசியலமைப்பு திருத்தம் இன்று அமைச்சரவையில் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர்களிடையே பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில், தேர்தல் முறை தொடர்பான அரசியல் கட்சிகளின் யோசனைகளை இன்று மதியம் வரை கையளிக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார். இதன்படி, தமிழ் கட்சிகளின் தலைவர்கள், மக்களின் அபிலாஷைகள் அடங்கிய யோசனைகளை ஜனாதிபதி செயலயத்தில் கையளித்துள்ளதாக ஜனநாயக…

Read More

வடமாகாண மீள்குடியேற்றத்திற்கும் வில்பத்து காணிக்கும் சம்பந்தமே இல்லை – ஜம்இய்யத்துல் உலமா

மன்னார் முசலி – ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் எம்.எம்.தௌபீக் மதனி அவர்கள் வடபுல மீள்குடியேற்றம் தொடர்பாக விடுக்கும் ஊடக அறிக்கை. வடமாகாண மீள்குடியேற்றத்திற்கும் வில்பத்து காணிக்கும் சம்பந்தமே இல்லாத நிலையில் சில கடும்போக்கு இனவாத அமைப்புக்களும் அதனோடு தொடர்புடைய ஊடகங்களும் அண்மைக்காலமாக போலிப்பிரச்சாரங்களை மெற்கொண்டு வருவதாக மன்னார் முசலி – ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் ஏம்.எம்.தௌபீக் மதனி தெரிவித்தார். வில்பத்து மீள்குடியேற்றம் எனும்போர்வையில் அண்மைக்காலமாக ஊடகங்கின் ஊடாக மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரச்சாரங்கள் தொடர்பாக விடுத்த ஊடக…

Read More