Headlines

நாளை 16–ந் தேதி பார்க்கிங் கட்டணம் இல்லை துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் தகவல்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் மிராஜ் தினம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அன்று பார்க்கிங் கட்டணம் இல்லை என துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த நடைமுறை துபாய் மீன் மார்க்கெட் மற்றும் துபாய் மாநகராட்சி பல அடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு பொருந்தாது. அங்கு வழக்கம் போல் கட்டணம் செலுத்த வேண்டும். அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து துபாய்க்கு வருபவர்களின் நலனை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாக துபாய்…

Read More

கோட்டாவை செப்டம்பர் மாதம்வரைகைது செய்ய முடியாது – பிரதமரின் உரை (விபரம்)

அஸ்ரப் ஏ சமத் கோட்டாபயா ராஜபக்ச செப்டம்பர் மாதம்வரை நிதி மோசடியில் அவரை கைது செய்ய முடியாது. என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு பற்றி அமைச்சரவைக்கு நான் விளக்க வேண்டும் அத் தீர்ப்பு பற்றி எனக்கு கூறுங்கள் என சட்டமா அதிபரை நான் வினவியபோது. இவ்விடயம் பற்றி சட்டமா அதிபருக்கோ சட்ட திணைக்களத்திற்கு எதுவும் தெரியாது இதனை நாங்கள் அறிந்திருக்க வில்லை என கூறுகின்றார். அடுத்த பாராளுமன்றம் ஏற்படுத்தப்பட்டு புதிய அமைச்சரவை வரும் இந்த செப்படம்பர் மாதம்…

Read More

சிங்களவர்கள் மரம் வெட்டினால்? – முஸ்லிம்கள் மரம் வெட்டினால்?

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் தம்புள்ளையில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் காடு வெட்டி சிங்களவர்கள் குடியேற முயற்சிக்கும் போது கண்டு பிடிக்கப்பட்டால் அதனை சட்டவிரோத மரம் கடத்தல் என்று கூறி உண்மையை மறைக்கிறார்கள். ஆனால்,வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியுடன் தொடர்புபடாத இடங்களில் முஸ்லிம்களை சட்டரீதியாக குடியேற்ற முயன்றால் அதற்கு மரக்கலயாக்களின் சட்டவிரோத குடியேற்றம் என்று கூறி பொய்யை வளர்க்கிறார்கள். என்ன அநியாயம் ஐயா இது? இனவாத சிங்களவர்களால் முஸ்லிம்களை ஏளனப்படுத்த பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்று மரக்கலயா)

Read More

234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்றுடன் பூர்த்தி

பதவிக் காலம் பூர்த்தியான உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் அதிகாரிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட உள்ளது. 234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் இன்றுடன் பூர்த்தியாகும் நிலையில், அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. மாநகரசபைகள் ஆணையாளர்களினாலும், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் செயலாளர்களினாலும் நிர்வாகம் செய்யப்பட உள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் வரையில் அதிகாரிகளினால் நிறுவனங்கள் நிர்வாகம் செய்யப்பட உள்ளது. உள்ளூராட்சி மன்றங்ளை நிர்வாகம் செய்த மேயர்கள், நகர பிதாக்கள், பிரதேச சபைத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள்…

Read More

வில்பத்து விவகாரம் அரசியல் பழிவாங்கும் செயலேயன்றி வேறு ஒன்றும் இல்லை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல

வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களே மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உரித்தான காணிகளிலே அவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகும் பெருந்தோட்ட அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியாளர் மாநாட்டில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…. 2002 ஆம் வருடம் நான் பெருந்தோட்ட அமைச்சராக இருந்த போது வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த   முஸ்லீம்களை புத்தளத்தில் குடியேற்ற சுமார் 15 ஏக்கர் காணியை பெற்றுக்கொடுத்தேன் அப்போது அமைச்சர் ரிசாத் ஊடக அகதிகளான முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டனர். நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தை நேரடியாக…

Read More

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதியிடத்தில் அமைச்சர் றிஷாத் பகிரங்கவேண்டுகோள்….!

வில்பத்து காட்டுப் பகுதியில் அத்துமீறி முஸ்லிம் குடியேற்றத்தை  அமைச்சர் றிசாத் பதியுதீன் செய்வதாக மேற்கொள்ளப்பட்டுவரும் அபாண்டம் தொடர்பில் நேற்று  அமைச்சரவையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதியிடத்தில் அமைச்சரவை உப-குழுவொன்றினை நியமித்து விசாரனையொன்றினை செய்யுமாறு கோறியுள்ளார். நேற்று மாலை ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த வேண்டுகோளை பகிரங்கமாக விடுத்துள்ளார். கடந்த சில வாரங்களாக சில ஊடகங்களும்,இனவாத அமைப்புக்களும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக வடமாகாணத்துக்கு உட்படாத வடமேல் மாகாணத்திற்குட்பட்ட வில்பத்து காட்டினை அழித்து பிற மாவட்ட…

Read More

இன்று வில்பத்தை அண்டிய பகுதிகளில் இனவாத குழுக்கள் விஜயம் செய்த செய்தியின் மேலதிக விபரங்கள்

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  மன்னார் மாவட்டத்தின் வில்பத்து எல்லைக் கிராமமான சிலாவத்துறைப் பகுதியில் உள்ள மரிச்சிக்கட்டி, மேதரகம பகுதியை அண்டிய உப்பாறு உள்ளிட்ட கிராமப் பகுதியில் இன்று (13) இனவாத அமைப்புக்களான ராவணபலய, சிஹல உறுமைய மற்றும் ஜே.வி.பியின் பிக்குமார் உள்ளிட்ட குழுக்கள் சுமார் மூன்று நான்கு பேரூந்துகளில் சென்று அப்பகுதியைப் பார்வையிட்டதாகவும் இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் காணப்பட்தாக அங்கிருக்கும் மீள் குடியமர்ந்துள்ள மக்கள் தெரிவித்தனர். இவ்வாறு வந்தவர்கள் அப்பகுதி மக்களுடன் எந்தவிதச் சந்திப்புக்களையும் மேற்கொள்ள வில்லை…

Read More

வில்பத்தும் ஊடக தர்மமும்? – எம்.எம்.ஏ.ஸமட்

– எம்.எம்.ஏ.ஸமட் ஊடகம் என்பது மக்களிடையே கருத்துக்களைக் காவிச் செல்லுகின்ற, பரப்புகின்ற செயற்பாட்டைக் கொண்டதாக விளங்குகிறது. குறிப்பாகச் சொல்வதானால், கருத்தியலைக் கட்டமைப்பது, மக்களினதும் சமூகத்தினதும் இருப்பைத் தீர்மானிப்பது, சந்தைப் பொருளாதாரத்தின் வளர்;ச்சிக்கும் விருத்திக்கும் ஊக்கியாக செயற்படுவது என அதன் பங்களிப்பு உள்ளது, அதுதவிர, அரசியல், தத்துவம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், சட்டம், மருத்துவம், பொறியியல் என்ற பல்வேறு துறை சார்ந்த விடயங்களிலும் அதன் செல்வாக்கை காலூண்டியதொன்றாக ஊடகத்துறை வியாபித்திருக்கிறது. ஊடகங்கள் இல்லாத தேசத்தையோ, அதன் தாக்கத்திற்கு அகப்படாத மனித…

Read More

சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் அறைகளுடன் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய ஹோட்டல்!

சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் அறைகளுடன் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய ஹோட்டல் சவுதி அரேபியாவில் மக்கா மத்திய மண்டலத்தில் மனாபியா பகுதியில் அப்ரஜ் குடை எனும் உலகின் மிகபெரிய ஹோட்டல் அமைக்கப்பட உள்ளது. சுமார் 1.4 மில்லியன் சதுர மீட்டர் பரப்ப‌ளவில் 12 கோபுரங்களுடன் அமைய உள்ள இந்த ஹோட்டலில் 10 ஆயிரம் அறைகள்,70 உணவகங்கள் , மேல் தளங்களில் ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.பாலைவனத்தில் கோட்டை போன்று வடிவமைப்பில்…

Read More

சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் அறைகளுடன் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய ஹோட்டல்!

சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் அறைகளுடன் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய ஹோட்டல் சவுதி அரேபியாவில் மக்கா மத்திய மண்டலத்தில் மனாபியா பகுதியில் அப்ரஜ் குடை எனும் உலகின் மிகபெரிய ஹோட்டல் அமைக்கப்பட உள்ளது. சுமார் 1.4 மில்லியன் சதுர மீட்டர் பரப்ப‌ளவில் 12 கோபுரங்களுடன் அமைய உள்ள இந்த ஹோட்டலில் 10 ஆயிரம் அறைகள்,70 உணவகங்கள் , மேல் தளங்களில் ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.பாலைவனத்தில் கோட்டை போன்று வடிவமைப்பில்…

Read More

சவூதி அரேபியாவில் வேலை செய்பவர்கள் தங்கள் பிரட்சனைகளை எங்கு எவ்வாறு முறைஇடுவது?

சவூதியில் வாழும் பெரும்பாலானவர்களுக்கு தங்கள் பணிபுரியும் இடங்களில் பல வகையான பிரட்சனைகளை சந்தித்து வருகின்றனர் அதாவது முதளாளி தொழிலாளிக்கு செர வேண்டிய சம்பளத்தையோ அல்லது பிற சலுகைகளையோ அதாவது விடுப்புப் பணம் (வெக்கேசன் மணி) சர்விஸ் மணி ஆகியவற்றை குறைவாக கொடுப்பது அல்லது கொடுக்காமல் இருப்பது எக்சிட் (exit)கொடுக்க மறுப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்ப்படும் போது அதை எவ்வாறு எதிர் கொள்வது யாரை அனுகுவது எப்படி முறையாடுவது என்பது பற்றி பார்ப்போம் 1.ஆன்லைன் மூலம் முறை இடலாம்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு கண்டனம்

அபு அலா இந்நாட்டு முஸ்லீம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது மிக தைரியமாக குரல் கொடுக்கும் துணிச்சல்மிக்க ஒரேயொரு முஸ்லிம் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதினை குற்றம் காண்பதன் மூலம் இந்நாட்டு முஸ்லிம்களின் வாழும் உரிமையினை மறுக்க சிலர் முற்படுகின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம் எடுக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டம் அதன் தலைவர் எம்.ஏ.சீ.நஜீப் தலைமையில் நேற்று புதன்கிழமை மாலை (13)…

Read More