Headlines

லங்கா அசோக் லேலேன்ட் நிறுவனத்தின் பணிப்பாளராக ஜஸ்ரி ஜவாப்தீன் நியமனம்

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழ் இயங்கும் லங்கா அசோக் லேலேன்ட் நிறுவனத்தின் பணிப்பாளராக மூதூர் பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான அஷ்-ஷெய்ஹ் ஜஸ்ரி ஜவாப்தீன் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனக்கடிதம் அமைச்சர் றிஷாத் பதியுதீனினால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் வைத்து நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர் பதவி,பட்டங்கள் ஒன்றும் எமக்கு சொந்தமானவை அல்ல. இவை அமானிதமாகும். இவற்றைக் கொண்டு எமது சமூகத்திற்கு என்னென்ன உதவிகள் புரிய முடியுமோ…

Read More

யாழ் முஸ்லிம்கள் தொடர்பில் மோடியிடம் மகஜர்

முகம்மட் பஹாத் “வடக்கில் முஸ்லிம்களுக்கான வீட்டுத் திட்ட வினியோகத்துக்கான விசேட செயற்திட்டமொன்றை அமுல்படுத்த வேண்டும்” என கோரும் மகஜர் ஒன்றினை NFGGயின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குக் கையளித்துள்ளார். இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை மன்னாருக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். இதன்போதே மேற்படி மகஜரினை அஸ்மின் அய்யூப் கையளித்துள்ளார். அம்மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைக்கான தங்களது விஜயத்தை…

Read More

மாலத்தீவில் நடைபெறும் சம்பவங்கள் கவலையளிக்கின்றன – இந்தியா

மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான முகமது நஷீத் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது நிரூபணமாகியுள்ளதாக கூறி, அவருக்கு 13 வருட சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மாலத்தீவின் அதிபராக முகமது நஷீத் இருந்தபோது, அந்நாட்டின் கிரிமினல் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா முகமதை கைது செய்ய உத்தரவிட்டார் என்றும், அவர் மீதான இக்குற்றசாட்டை போலீஸ் தரப்பு சட்டப்பூர்வமாக நிரூபித்ததாக கூறிய அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு 13 வருட சிறை தண்டனையை விதித்தது….

Read More

தலைமன்னார் புகையிரத சேவை ஆரம்பித்து வைத்தார் மோடி

கடந்த 25 வருடங்களுக்குப் பின்னர் தலைமன்னார் முதல் கொழும்புக்கான புகையிரத சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்ட்டது.இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த சேவையினை தலைமைன்னார் துறையிலிருந்து உத்தியோக பூர்வமான ஆரம்பித்து வைத்தார். கடந்த ஆண்டு இந்திய வெளிவிகார அமைச்சர் மதவாச்சி தொடக்கம் மடு வரைக்குமான புகையிரத சேவையினை ஆரம்பித்து வைத்தார்.இரண்டாம் கட்டமாக மடு முதல் தலை மன்னார் வரை புகையிரதப்பாதை செப்பனிடப்பட்டதுடன்.இந்திய பிரதமரினால் இந்த சேவையும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த புகையிர பாதை…

Read More

விரைவில் வெளிவரவுள்ள மருதமுனை சம்சுல் ஏ ரஷீதின் நடிப்பில் கட்டார் நாட்டில் தயாராகிவரும் FREE VISA குறும்படம்!

-கலீல் எஸ் முஹம்மத்- FREE VISA என்பது கட்டாருக்கு ப்றி விசா பெற்றுக்கொண்டு வேலைவாய்ப்பு தேடி செல்வோரின் இன்னல்களை அதன் உண்மை நிலைகளை சித்திரிக்கும் தத்ரூபமாக காட்டும் ஒரு குறும்படமாகும். FREE விசாவில் கட்டாருக்கு வேலை தேடி வருவோருக்கு முன் எச்சரிக்கையாகவும் படிப்பினையாகவும் இது இருக்கும் என எல்லோராலும் எதிர்பார்க்கபடுகிரர்த்து. இந்த குறுந்திரைப்படமானது தற்போது கட்டாரில் படமாக்கப்பட்டுகொண்டிருக்கிறது என்பது விசேட அம்சம்மாகும். கட்டாரிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்றுள்ள மருதமுனை மண்ணில் பிறந்த சம்சுல் அஸாம் ரஷீதின் முழுமையான…

Read More

வரலாற்று முக்கியத்துவான இன்னாலை எந்த ஒரு இலங்கை பிரஜையாலும் மறக்கமுடியாது

இந்திய நாட்டின் பிரதம மந்திரி நரேந்திர மூடி இன்று தலைமன்னார்வரையான புகையிரத பயணத்தை ஆரம்பித்து வைக்க உள்ளார். பிரதமரை வரவேற்க கைத்தொழில் வர்த்தக அமைச்சரும்,வட மாகான அபிவிருத்திக்குழு தலைவருமான றிஷாத் பதியுதீன் தலைமன்னார் பியர் புகையிரத நிலையத்தில் நிற்கும் காட்சி.

Read More

திருமணம் செய்ய தயாராகும் ஆண்களே.. இதனை கட்டாயம் வாசிக்கவும்

ஒரு முஸ்லிமான ஆண் திருமணம் செய்வதற்கு தனக்கு வாழ்க்கை துணைவியாக வரவிருக்கும் பெண்ணை நேரில் சென்று பார்ப்பது நபிவழியாகும். ஆனால் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் இந்த நடைமுறை மாற்றமடைந்து பெண் பார்ப்பதற்கு குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரங்களில் சென்று பார்த்து விட்டு கடைசியில் பெண் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுகிறார்கள். அதுவும் பெண் பிடிக்காதது மணமகனுக்கல்ல. அவனது குடும்பத்தினர்க்கு என்பது கசப்பான உண்மை. அதேபோன்று குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் பெண் பார்த்துவிட்டு வந்ததன் பின் கடைசியாக மணமகன்…

Read More

இந்திய அமைதிப் படையினரின் தூபிக்கு மரியாதை செலுத்திய முதல் பிரதமர் மோடி

இந்திய அமைதிப் படையினரின் தூபிக்கு மரியாதையை செலுத்திய முதல் இந்திய அரசாங்க தலைவராக மோடி கருதப்படுகிறார். 2008ஆம் ஆண்டில் சார்க் மாநாட்டுக்காக இலங்கை வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், இந்த தூபிக்கு விஜயம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இராணுவ முறைப்படி மோடி, சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் தூபிக்கு சென்று மலர்மாலை வைத்து வணக்கம் தெரிவித்தார். பின்னர் அமைதியான நின்று உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 1987ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு…

Read More

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்: பாராளுமன்றத்தில் மோடி உரை!

“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்கிற மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் கவிதை வரிகளில் நம்பிக்கை கொண்டே தான் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள இந்தியப் பிரதமர், பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்தியாவும், இலங்கையும் அண்மையில் இருக்கின்ற நாடுகள் என்கிற வகையில் மதம், மொழி, கலாசாரம் உள்ளிட்ட பல விடயங்களில் ஒற்றுமையுள்ளவை. அதுபோல,…

Read More

உள்நாட்டு விவகாரங்களில் மோடி தலையிடக் கூடாது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என்று, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கிய இலங்கைக் கடற்படைச் சிப்பாயான விஜித ரோஹண விஜேமுனி தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் குறித்து, இந்தியன் “எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நான் விரும்புகிறேன். அவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு நல்ல மனிதர். ஆனால், அவர்…

Read More

‘இந்திய பிரதமரின் உரை வேதனையளிக்கின்றது’

மலையக மக்களை மறந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையானது வேதனையளிப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளை மறந்து பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை வேதனையளிக்கின்றது. இதற்காக, மலையக மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் வருந்துகிறேன். இது அவர், எமது சமூகத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதையே…

Read More

மோடி இன்று யாழ் விஜயம்; யாழில் வரலாறு காணாத பாதுகாப்பு

பிரதமர் மோடி இன்று மதியம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அதற்கான பாதுகாப்புகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த  பாதுகாப்பு கடமையில் இலங்கை மற்றும் இந்திய பொலிஸாரும்  நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய மோடியின் நிகழ்வு இடம்பெறும் இடங்கள் மற்றும்  அதனை அண்டிய பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும்  தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியோ அல்லது பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் வரும்போது கூட இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. முதல் தடவையாக இந்தியப் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்  மேற்கொள்வது…

Read More