Headlines

விமானிகளுக்கு ஏற்படும் மர்ம நோய்: திரைப்படம் எடுத்து அம்பலப்படுத்திய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி

இங்கிலாந்தை சேர்ந்த ட்ரிஸ்டன் லோரைன் என்ற விமானி, பிரபல விமான சேவை நிறுவனமான ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ நிறுவனத்தில் 19 ஆண்டுகள் விமானியாக பணியாற்றிய அனுபவசாலி. ஆனால், 2006-ல் அந்நிறுவனத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். காரணம் 19 ஆண்டுக்கால பணியின் பலனாக அவருக்கு கிடைத்த வியாதி. நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னதான 7 ஆண்டுகளில் பிஏஈ 146 ரக ஜெட் விமானத்தை இயக்கினார். அந்த விமானத்தின் இன்ஜினை ஒவ்வொரு முறை இயக்கும் போதும் கரும் எண்ணெய் புகை வெளியாகும். ஆனால் அது…

Read More

பொதுமக்களின் காணிகளை விடுவிக்க அதிகாரிகளுடன் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பேச்சு

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மறிச்சுக்கட்டி,கரடிக்குளி,பாலக்குளி,கொண்டச்சி.காயாக்குளி,தம்பட்டை முதலியார் கட்டு,கொக்குபடையான்,கொண்டச்சிகுடா,சிலாவத்துறை கிராமங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் விஜயமொன்றினை(2015-02-21) மேற்கொண்டார். முசலி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி தொடர்பிலும்,மக்களது தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொள்ளும் வகையில் அமைச்சர் தலைமையிலான குழுவினரின் விஜயம் அமைந்திருந்ததாக முசலி பிரதேச சபை தவிசாளர் தேசமான்ய யஹ்யான் தெரிவித்தார். அமைச்சர் றிசாத் பதியுதீன்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,முசலி பிரசேசபை தவிசாளர் எஹியான்,பிரதி…

Read More

எனது 15 வருட அரசியல் வாழ்வில் பிரதேச வாதம்,இனவாதம் பற்றி சிந்தித்ததே இல்லை – றிஷாத் பதியுதீன்

எனது 15 வருட அரசியல் வாழ்வில் பிரதேச வாதம்.இனவாதம் என்பனபற்றி சிந்தித்ததே இல்லை என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த இரண்டும் எமது மக்களின் முன்னேற்றத்திற்கு சாபக் கேடு எனவும் கூறினார். தான் பிறந்து,வளர்ந்து,கல்வி கற்ற பாடசாலையான மன்னார் தாராபுரம் அல்மினா பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். பாடசாலை அதிபர்…

Read More

தமிழ்,முஸ்லிம் மக்கள் புரிந்துணர்வுடன் வாழ வேண்டும் – றிஷாத் பதியுதீன்

ஓற்றுமை,கல்வி,பிரதேச மக்களின் நலன் குறித்து அதிக கவனத்தை செலுத்துவது சாலச்சிறந்தது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முத்தலிபாவா பாருக் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள அடம்பன் கட்டைக்காடு பரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்பு விழாவில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பு குவைத் சர்வதேச இஸ்லாமிய நிதியத்தின் உதவியின் கீழ் இந்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டன. இங்கு மேலும் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிபாவ பாருக் உரையாற்றுகையில்-…

Read More

தேர்தல் வெற்றிக்காக குழந்தையை நரபலி கொடுத்த அரசியல்வாதிகள்!

ஆப்பிரிக்க நாடுகளில் பலவற்றில் மனிதனை நரபலி கொடுத்து பூஜை செய்யும் பழக்கம் இப்போதும் உள்ளது. இதன் மூலம் வெற்றி கிடைப்பதாகவும், வீட்டிற்கு நன்மை கிடைப்பதாகவும் அவர்கள் கருதுகிறார்கள். இந்த நிலையில் தான்சானியா நாட்டில் ஒரு வயது ஆண் குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள சாட்டோ மாவட்டத்தை சேர்ந்த பெண் ஈஸ்டர்ஜனாஸ் (வயது 30) என்பவர் தனது ஒரு வயது குழந்தையுடன் இருந்தார். அப்போது மர்ம நபர்கள் தாயை கடுமையாக தாக்கிவிட்டு அவரிடமிருந்து குழந்தையை வலுக்கட்டாயமாக…

Read More

ஐந்து வருடங்களுக்கு முன்பு நாங்கள் கண்ட கொழும்பு வேறு : ரவுப் ஹகீம்

தென்கிழக்காசியாவின் மிகப் பிரதான நகர மையமாக கொழும்பு அமையப்போகின்றது எனக் குறிப்பிட்ட, நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நகரமயமாக்களைப் பொறுத்தவரை வெளிப்படைத் தன்மை பேணப்படுவதோடு, தொழில்சார் திறமைகளுக்கேற்ப உரிய இடமளிப்பதற்கும், தனியார் துறை பங்களிப்புகளுக்கு வாய்ப்பளிப்பதற்கும் தனது அமைச்சு நடவடிக்கை எடுக்குமெனவும் தெரிவித்தார். கட்டடக் கலைஞர் நிறுவனத்தின் செயலமர்வின் 2015ஆம் ஆண்டுக்கான அங்குரார்பண நிகழ்வு கொழும்பு, பண்டநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் செவ்வாய்கிழமை (17)…

Read More

வெலிக்கடை சூட்டுச்சம்பவம்; விசாரணைக்கு குழு

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியசரசர் விமல் நம்புவாசம் தலைமையில், அசோக வியஜதிலக்க (ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர்), ஓய்வு பெற்ற நிர்வாக உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.கே.லியனே ஆகியோர் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இந்தக் குழு, இச்சம்பவம்…

Read More

ஜீவன் மெண்டிஸ் சிரித்தது ஏன்? ; வெளிவந்தது உண்மை

உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது லீக் போட்டியில் இலங்கை அணியின் ஜீவன் மெண்டிஸ் நியூஸிலாந்து வீரரின் பிடியெடுப்பொன்றை நழுவ விட்டதோடு சிரித்துகொண்டு இருந்தமை சர்ச்சையை தொற்றியிருந்தது. கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற இப் போட்டியில் நியூஸிலாந்து வீரர் கொரி ஹெனடர்சன் 43 ஓட்டங்களுடன் இருந்த போது ஜீவன் மெண்டிஸ் அவரின் பிடியெடுபை நழுவ விட்டார். இதனையடுத்து அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஹென்டர்சன் 75 ஓட்டங்களை பெற்றதோடு போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார். போட்டியின் தன்மையை மாற்றியமைத்த கொரி…

Read More

தனியார் துறையின் சம்பளம் 15- 35 வீதத்தால் அதிகரிப்பு

தனியார் துறைகளின் சம்பளத்தை 15 -35 சதவீதமாக அதிகரிக்க சம்பள நிர்ணய சபை இணக்கம் தெரிவித்துள்ளது. சம்பள நிர்ணய சபை , தொழிற்சங்கங்கள் என்பவற்றுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்கமைய ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 10,000 ரூபாவாகவும் ஏனைய நிறுவனங்களின் வருமானத்திற்கமைய அவர்களின் சம்பளம் 15…

Read More

வெலே சுதாவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் “வெலே சுதா“ என்கிற சமன் குமாரவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்து பொலிஸார் விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வெலே சுதா ஆஜர்படுத்தப்பட்டார். பொலிஸார் சமர்ப்பித்த சாட்சியங்களையும், அறிக்கைகளையும் ஆராய்ந்த நீதிமன்றம், அவரை மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. போதைப் பொருள் கடத்தலின் மூலம் 17 கோடி ரூபா பெருமதியான…

Read More

அதிகமான இலங்கை பணிப்பெண்களை பணியில் அமர்த்த மலேசியா தீர்மானம்

மலேசியாவின் வெளிநாட்டு பணிப்பெண் முகவர்கள் சங்க தலைவர் அந்நாட்டு இணையமொன்றிற்கு வெளியிட்ட கருத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து பணிப் பெண்களை அமர்த்துவது இலாபகரமானது எனவும், இதுவரைகாலமும் இந்தோனேஸிய பெண்களே அதிகளவில் மலேசியாவில் வீட்டுப் பணிப்பெண்களாக கடமையாற்றி வந்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்தோனேஸிய பெண்களை பணியிலமர்த்துவது அதிக செலவு விரயமாகும் காரணத்தினாலேயே வேறு நாட்டு பெண்களை பணியிலமர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More

மஹிந்தவிற்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அழைப்பாணை உத்தரவினை பிறப்பிக்க நீதிமன்ற பதிவாளருக்கு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கோரி அழைப்பாணை உத்தரவுகளை பிறப்பிக்க பதிவாளருக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் ஊடாக நாட்டு பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறிச் செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்டவர்களுக்கு எதிராக முன்னனி சோசலிச கட்சி உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது….

Read More