Headlines

மக்களுக்காக பணியாற்றவில்லை என்றால் மக்கள் அணிதிரளமாட்டார்கள் – றிஷாத் பதியுதீன்

ஊடகப் பிரிவு எந்தக்கட்சியாக இருந்தாலும் அவை மக்களுக்காக பணியாற்றவில்லை என்றால் அதன் பின்னால் மக்கள் அணிதிரளமாட்டார்கள் என சுட்டிக்காட்டியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஏனைய கட்சிகளுடன் வ ஒப்பீட்டு பார்க்கும் போது எமது கட்சிக்கு மக்கள் வழங்கிய அரசியல் பலத்தினால் ஆற்றியுள்ள பணிகளை நீங்கள் எடை போட்டு பார்க்கலாம் என மக்களிடத்தில் எடுத்துரைத்தார். வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் பிரதேச சபைக்குட்பட்ட வாழவைத்த குளம் பஸ் தரிப்பு நிலையம்,மற்றும் பொது விளையாட்டு…

Read More

எந்த தடைகள் வந்தாலும் அவற்றை தாண்டி அதனை நாம் பெற்றுக் கொடுப்போம் – எஹியான்

ஊடகப் பிரிவு அமைச்சர் றிசாத் பதியுதீனின் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பயணத்தில் எந்த தடைகள் வந்தாலும் அவற்றை தாண்டி அதனை நாம் பெற்றுக் கொடுப்போம் என முசலி பிரதேச சபை தவிசாளர் எஹியான் தெரிவித்தார். முசலி பிரதேசத்தின் தம்பட்டை முதலியார் கட்டு கிராம பள்ளிவாசல் முன்றலில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது கலந்து கொண்டு உரையாற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு மேலும் தவிசாளர்…

Read More

தையல் பயிற்சி நிலையம் திறப்பு

Shm Wajith மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் உள்ள யுவதிகள் கைத்தொழில் துறையில் வேலைவாய்ப்புகளை பெற்று கொள்ளும் நோக்குடனும் கடந்த 21,22ஆம் திகதி 18 தையல் பயிற்சி நிலையங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும்,கைத்தொழில் வாணிப துறை அமைச்சருமான றிஷாத் பதியுதின் திறந்து வைத்தார். இன் நிகழ்வில் அமைச்சர் தெரிவிக்கும் போது கடந்த காலத்தில் எமது சமுகம் பல்வேறுபட்ட அழிவுகளையும்,இழப்புகளையும் எதிர் நோக்கின சமுகமாக இருக்கின்றது. நீங்கள் எல்லோரும் மிகவும் அதிஷ்ட சாலிகள்   ஓவ்வெரு…

Read More

இவரை பற்றிய தகவலை கோருகிறது பொலிஸ்;.!

சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான ‘வேலே சுதா’வுடன் தொடர்புடைய தலைமறை வாகியுள்ள மொஹமட் மக்கீம் மொஹமட் சித்தீக் என்பவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்து தகவல்களை தந்துதவுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது. தற்போது துபாய் அல்லது பாகிஸ்தானில் தலைமறைவாகியிருக்கும் மொஹமட் சித்தீக் என்பவருக்கு சர்வதேச பொலிஸாரூடாக விடுக்கப்பட்டுள்ளதுடன் இவர் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதுவாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கையில் அவரது பெயரில் அசையும் அல்லது அசையா சொத்துக்கள் இருக்குமாயின்…

Read More

கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம சுரங்க பாதை!

கனடாவில் மர்மமான சுரங்கபாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ரொறொன்ரோவில் Pan Am விளையாட்டுக்கள் நடைபெறவுள்ள‌ இடத்திற்கு அருகே இந்த சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரொறொன்ரோவின் றெக்சால் சென்ரர் மற்றும் யோர்க் பல்கலைகழகத்தின் கீழ் வளாகம் ஆகிய பகுதிகளிற்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் இந்த சுரங்கபாதை தோண்டப்பட்டுள்ளது. இந்த சுரங்கபாதையானது ஒருவர் நிற்பதற்கு போதுமான அளவுடையதாக 2.5 மீற்றர்கள் உயரம், கிட்டத்தட்ட 7 மீற்றர்கள் நீளமுடையதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கபாதைக்குள் ஒரு ஜெனரேட்டர் மூலம் விளக்குகள் இயக்கப்படுவதுடன்…

Read More

ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் 26 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் பிரிந்தனர்

கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எலிசீ என்ற பெண்மனிக்கு ஒட்டிய நிலையில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. நடல்யே ஹோப், அடிலைன் மாட்ட என்று பெயரிடப்பட்ட இந்த இரட்டைப் பெண் குழந்தைகள், நுரையீரல், கல்லீரல், குடல், பெருங்குடல், இடுப்பு மற்றும் இதயம் உட்பட பல உறுப்புகளும் ஒட்டிய நிலையில் பிறந்தன. டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 26 மணி நேர தீவிர அறுவை சிகிச்சைக்கு பின்னர் இருவரையும் மருத்துவர்கள் பிரித்துள்ளனர்.

Read More

காத்தான்குடியில் நிர்மானிக்கப்பட்டுவரும் இஸ்லாமிய அருங்காட்சியகத்தில் உருவச்சிலைகள் சர்ச்சை: காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா ஆராய்வு

ஜுனைத் எம். பஹத் காத்தான்குடியில் நிர்மானிக்கப்பட்டு வரும் இஸ்லாமிய வரலாற்றைக் கொண்ட இஸ்லாமிய அருங்காட்சியகத்தில் (நூதனசாலை) உருவச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டள்ளது. காத்தான்குடியில் உலமாக்களிடையே இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினாலும் அவரின் நிதியொதுக்கீட்டிலும் இந்த இஸ்லாமிய வரலாற்று அருங்காட்சியகம் நிர்மானிக்கப்பட்டு அதன் நிர்மான வேலைகள் முடிவடையும் நிலையிலுள்ளன. இலங்கையின் வரலாற்றில் முதன் முதலாக காத்தான்குடியில் நிர்மானிக்கப்பட்டு வரும் இந்த இஸ்லாமிய அருங்காட்சியகத்தில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று தொன்மையை வெளிப்படுத்தும் முஸ்லம்களின் பாரம்பரிய…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதின் முசலிக் கிராமங்களுக்கு விஜயம்

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சர் றிசாத் பதியுதீன் முசலிப் பிரதேசத்திலுள்ள மக்களை பார்வையிடுவதற்காக ஒவ்வொரு கிராமத்திற்கும் சூறாவளிச்சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பொதுவாக மக்கள் பிரதிநிதிகளை தேர்தல் காலஹ்களில் மட்டுமே சாதரண பொதுமக்களால் இலகுவாக சந்திக்க முடியும்.பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டால் கொழும்பில் சென்று குடியேறுவிடுவர்.இதன் பின்பு மக்களால் சந்திக்கவோ தொடர்பு கொள்ளவோ முடியாத நிலை பல மாவட்டங்களில் காணக்கூடியதாக உள்ளது.(உ-ம்)வன்னியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு முஸ்லிம் மாகாணப் பிரதிநிதி அமைச்சர்களில் மிகவும்…

Read More

இந்த நல்லாட்சியை பயன்படுத்தி கொள்ள வேண்டும் – அமைச்சர் றிஷாத் பதியுதீன்

இலங்கை நாட்டில் தமிழ் பேசும் மக்கள் ஒரு நிர்நதரமான தீர்வை பெற்றுக்கொள்ள தமிழ்,முஸ்லிம் மக்களின் ஒற்றுமையும், ஒத்துழைப்பும் இன்றியமையாதது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இன்று இடம் பெற்ற 5 ஆம் ஆண்டு பலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டும் விழா பாடசாலை அதிபர் தனபாலசிங்கம் தலைமையில் இடம் பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது…

Read More

ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

ஊடகப் பிரிவு வவுனியா மாவட்டத்தின் ஆண்டியா புளியங்குளம்  முஸ்லிம் வித்தியாலயத்தின்  வருடாந்த பரிசளிப்பும்,கவிதை நூல் வெளியிட்டு விழாவும் இன்று மாலை பாடசாலை மைதானத்தில்  இடம் பெற்றது. பாடசாலை அதிபர் எம்.ஜாபிர்  தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில்,பிரதம அதிதியாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் வவுனியா வலயக் கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் ; கலந்து கொண்டனர்.

Read More

‘நுகேகொடை கூட்டத்தை கண்டு தமிழ் பேசும் மக்கள் பதட்டமடைய தேவையில்லை’

நுகேகொடை கூட்டத்தை கண்டு தமிழ் பேசும் மக்கள் பதட்டமடைய தேவையில்லை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஜனநாயக இளைஞர் இணையை கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய மனோ கணேசன், “முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் முன்னின்று நுகேகொடை அங்காடிக்கு எதிரே நடத்திய…

Read More

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அதுல் நியமனம்?

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அடுல் கெஸ்பா நியமிக்கப்படவுள்ளதாக வொஷிங்கடனிலுள்ள இராஜாங்க செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இவரின் இந்த நியமனத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் விரைவில் அங்கீகாரம் வழங்கவுள்ளது எனவும் செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டன. முன்னாள் அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசென், அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் நாடு திரும்பினார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே நியமிக்கப்படவுள்ளார். தற்போது இவர் வொஷிங்கடனிலுள்ள இராஜாங்க செயலகத்தில் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதி உதவி…

Read More