புடவைக் கைத்தொழில் திணைக்களத்திற்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் விஜயம் (படங்கள் இணைப்பு)
இர்ஷாத் றஹ்மத்துல்லா புடவைக் கைத்தொழில் திணைக்களத்திற்கு( சலுசல) இன்று விஜயம் செய்த கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். புதிய அரசாங்கத்தின் கீழ் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சராக நியமனம் பெற்றதன் பின்னர் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று உத்தியோகபூர்வ விஜமொன்றினை மேற்கொண்டு இங்கு வருகைத்தந்திருந்தார். இங்குள்ள தொழிற்சங்க பிரதி நிதிகள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.அதே வேளை அதிகாரிகளுடனும் அமைச்சர் கலந்துரையாடல்களை நடத்தினார். நிறுவனத்தின்…
