Headlines

வெறும் 6000 ரூபா!

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்பு வைபவம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டார். நேற்றைய தினம் மாலை 6.30 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அவரது பதவியேற்பு வைபவம் இடம்பெற்றது. மிகவும் அமைதியான முறையில் மைத்திரிபால சிறிசேன தனது பதவியேற்பு வைபவத்தினை நடாத்தியிருந்தார். இதற்கான வைபவத்திற்காக 6000 ரூபா மட்டுமே செலவு செய்யப்பட்டதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த 6000…

Read More

மைத்திரி அமைச்சரவையில் ஜே.வி.பி., மு.கா., ரீ.என்.ஏ. இடம்பெறுவதில்லை என முடிவு!

அஸ்ரப் ஏ சமத் நாளை கண்டி தலாதா மாளிகையில் பி.பகல். 3.00 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்யும் அமைச்சரவையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, முஸ்லீம் காங்கிரஸ், ஜே.வி.பி இடம்பெறுவதில்லை என அக் கட்சிகள் தீர்மாணம் அரசுக்கு ஆதரவு ஆனால் அமைச்சர் பதவிகளை பெறுவதில்லை. முஸ்லீம் காங்கிரஸ் மைத்திரியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஆதரவு அளிப்பதே எமது நோக்கம், பதவிக்காகவும் நாம் ஒருபோதும் துணைபோகும் கட்சி அல்ல, அரசின் 100 நாள் வேளைத்திட்டத்தில் சொல்லியிருந்த சகல திட்டங்களுக்கும் நாம் ஆதரவளிப்பதாக…

Read More

நாட்டில் வாழும் சகல தமிழ் பேசும் மக்களிடத்திலும் அசாத் சாலி விடுக்கும் அவசர வேண்டுகோள்!

அஷ்ரப் ஏ சமத் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த தரப்பு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் வெற்றி கொண்டாட்டத்தை பயன்படுத்தி சிறுபான்மை மக்களை பெரும்பான்மை சமூகத்துடன் அல்லது ராணுவம் பாதுகாப்பு தரப்புடன் சண்டை மூட்டிவிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இது தொடர்பாக பாதுகாப்ப்பு தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள செய்தியிள் குறிப்பிட்டுள்ளார். வரும் தினங்களில் முஸ்லிம்கள் மற்றும் தமிழ் பேசும் மக்கள் மிக அவதனமாவும் நிதானமாகவும் செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More

வடக்கின் புதிய ஆளுநராக எச்.எம்.ஜி.எஸ் பளிஹகாரவை நியமனம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பொது எதிரணியிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாணத்துக்காக எச்.எம்.ஜி.எஸ் பளிஹகாரவை  நியமித்துள்ளார்.

Read More

ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு அவுஸ்திரேலியா வாழ்த்து

இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு அவுஸ்திரேலியா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அமைதியான, ஒழுங்கான ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடித்தமைக்காக இலங்கை மக்களுக்கும் குறிப்பாக தேர்தல் அதிகாரிகளுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் (Julie Bishop) கூறியுள்ளார். புதிய ஜனாதிபதி, நல்லாட்சியை ஏற்படுத்துவது மட்டுமன்றி ஊழல் எதிர்ப்புக்காக தனது ஆணையை செயல்படுத்துவார் என்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் விரும்புகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்தல் முடிவுகளை ஏற்று அமைதியான முறையில் ஆட்சியை…

Read More

மைத்திரி அமைச்சரவை நாளை பதவியேற்பு(?)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தெரிகிறது. அமைச்சரவை அந்தஸ்துள்ள 25 அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தற்ற 10 அமைச்சர்கள் மற்றும் 25 பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவே பதவியேற்கவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோடு கலந்தாலோசித்து அமைச்சர்கள் குழுவை இறுதி முடிவு செய்யவார் என்று தெரிகிறது. இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்த முக்கிய அமைச்சர்கள்…

Read More

சர்வதிகார அரசுக்கெதிராக வாக்களித்த மக்ளுக்கு நன்றிகள்

எஸ்.அஸ்ரப்கான் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டை இனவாதத்தின் கோரப்பிடிக்குள் தள்ளி ஒரு சர்வாதிகார ஆட்சியை நடாத்திய அரசைத் துாக்கி வீசுவதற்காக ஒன்றுபட்டு வாக்களித்த முஸ்லிம், தமிழ் சிறுபான்மை சமூகங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காய் ஒன்றுபட்டு வாக்களித்த சிறுபான்மை மக்களுக்கு நன்றி தெரிவித்து கட்சி சார்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வரலாற்றில…

Read More

பாதுகாப்பு கட்டமைப்பில் புதிய மாற்றங்கள்; பலர் வெளியேற்றம்

புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு கட்டமைப்பில் உடனடி மாற்றங்களை செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய  பாதுகாப்பு கட்டமைப்பில் பதவியில் உள்ள இராணுவத்தளபதி, விமானப்படை தளபதி, பொலிஸ் மா அதிபர் , சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடத்திலேயே இந்த மாற்றத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தற்போதைய இராணுவ தளபதி ஜெனரல் தயா ரட்னாயக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா ஆகியோரை…

Read More

புதிய அரசு மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

இலங்கையின் புதிய அரசு மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க புதிய அரசுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது எனவே அதைத் தவறவிடாது செயற்படுமாறு சர்வதேச மன்னிப்பு சபையின் இந்தியத் தலைமை நிர்வாகி அனந்தபத்மநாதன் தெரிவித்துள்ளார். குறிப்பாக 18ம் திருத்தச் சட்டம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு பரந்த அதிகாரத்தை அளிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பன திரும்பப் பெறப்பட வேண்டும். அத்துடன் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை…

Read More

துறைமுக இரகசிய தகவல்களை காணவில்லை!

இலங்கை துறைமுக அதிகாரசபையின் பணிப்பாளர் பிரியல்; பந்து விக்ரமவின் பொறுப்பின் கீழ் இருந்த துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான அனைத்து இரகசியத் தகவல்கள் உள்ளடங்கிய கணனி ஹாட்டிஸ்க் நேற்றைய தினத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனுள் இலங்கையின் அனைத்து துறைமுகங்களுக்கும் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான இரகசியத் தகவல்கள் அத்துடன் ஹம்மாந்தோட்டை துறைமுகம் சம்மந்தமான அனைத்து தகவல்களும் உள்ளடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

சிறுபான்மை மக்களின் வாக்குகளினாலேயே தோற்றுள்ளேன்: மஹிந்த

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளிலிருந்து அளிக்கப்பட்ட வாக்குகளினாலேயே தான் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதனைத் தவிர்த்து, தான் தோல்வி அடைந்ததாகக் கருதவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமையே தன்னுடைய சொந்தக் கிராமமான அம்பாந்தோட்டையின் மெதமுலனவிற்கு சென்றார். அங்கு, கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Read More

கோத்தபாய மாலைதீவுக்குத் தப்பியோட்டம்!!

நேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதும், தனது மனைவி அயோமாவுடன், விமானப்படை விமானம் ஒன்றில் கோத்தபாய ராஜபக்ச மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டார். மாலைதீவுக்குச் செல்வதற்கு முன்கூட்டியே வீசா பெறத் தேவையில்லை. வீசா இல்லாமல் செல்லக் கூடிய மற்றொரு நாடாக சிங்கப்பூர் இருந்தாலும், அங்கு இராணுவ விமானத்தில் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாது. அதேவேளை, ராஜபக்சவின் புதல்வர்களும் சீனாவுக்குச் சென்றுவிட்டனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தலில் தாம் தோல்வியடைவதை உணர்ந்து கொண்டு மகிந்த…

Read More