Headlines

மைத்திரி அமைச்சரவையில் மனோ; ஐ.தே.க. தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகிறார்(?)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் இடம்பெறுவார் என்று தெரிகிறது. தற்போது மேல் மாகாண சபையின் உறுப்பினராகவுள்ள மனோ கணேசனுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கும் என்று தெரிகிறது. பொது எதிரணியின் முக்கியஸ்தராக மனோ கணேசன் ஆரம்பம் முதலே செயற்பட்டு வந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

Read More

கட்டார் நாட்டின் புதிய தொழில் சட்டம்

மௌலவி எம்.ஐ.எம். நௌபர் (காசிபி) நேற்றைய (11/01/2015) கட்டார் நாட்டின் “அர் றாயஃ”பத்திரிகையில் கட்டார் நாட்டின் புதிய தொழில் சட்டம் தொடர்பில் ஒரு ஆக்கம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாடு கருதி அது தொடர்பான விபரங்களை இங்கு சுருக்கமாகத் தருகின்றேன். 1.கட்டார் நாட்டின் தொழில் சட்டங்களின் புதிய திருத்தங்களை “மஜ்லிஸு ஷ் ஷூறா” (கிட்டத் தட்ட பாராளுமன்றம்!!)அங்கீகரித்து விட்டது.குறித்த சட்டத் திருத்தங்கள் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 2.குறித்த சட்டத் திருத்தங்கள் தொழிலமைச்சின் மீதான புதிய…

Read More

பாப்பரசர் வருகை: அரச விடுமுறை

பாப்பரசரின் இலங்கைக்கான வருகையை முன்னிட்டு நாளை மறுதினம் 14 ஆம் திகதி அரச வங்கி பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 14 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெறும் பிரதான தேவஆராதனையை முன்னிட்டு அன்றைய தினம் விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

Read More

மஹிந்த எதிர்கட்சி தலைவர் ஆவதில் சட்டச் சிக்கல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதில் சட்டச் சிக்கல் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.ம.சு. கூட்டமைப்பு சார்பாக 2011ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தேசியப் பட்டியலில் மகிந்த ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படாததே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் உரிமைபெற்று எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பெறுவதில் சட்டச்சிக்கல் உருவாகுவதற்கு காரணமாகும். இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வாவே எதிர்க்கட்சித் தலைவராக நியிமக்கப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேட…

Read More

மொஹான் பீரிஸ்க்கு, 48 மணிநேர காலக்கெடு

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்க்கு எதிராக உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. உயர்நீதிமன்றத்துக்கு முன்பாகவும் நீதியமைச்சுக்கு முன்பாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமையால் பிரதம நீதியரசர் உயர்நீதிமன்றுக்கு இன்று திங்கட்கிழமை செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, 44 ஆவது பிரதம நீதியரசருக்கு 48மணிநேர காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அப்பதவியிலிருந்து அவரை நீக்கிவிட்டு முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை நியமிக்குமாறும் கோரியுள்ளனர்.

Read More

றிஷாத் பதியுதீன் இரண்டு விடயங்களில் பங்காளிகளாகுமாறு வேண்டுகோள்

-இர்ஷாத் றஹூமத்துல்லா – இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தனவந்தர்களிடமும்,புத்தி ஜீவிகளிடமும் இரண்டு விடயங்களில் பங்காளிகளாகுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிஷாத் பதியுதீன். அவைகளாவன; 1.முஸ்லிம் சமூகத்தின் கல்வித்துறை 2.முஸ்லிம் சமூகத்தின் ஊடகத்துறையாகும் – என்று கூறினார். இலங்கை முஸ்லிம் வர்த்தக சம்மேளம் நேற்று (2015-01-11) இரவு தலைநகர் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிஷாத் பதியுதீனுக்கு அளித்த பிரமாண்டமான வரவேற்பு வைபவத்தினை…

Read More

இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை பதவியேற்பு

இன்று மாலை இலங்கை நேரம் 06 மணிக்கு புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்கின்றது. இது தொடர்பான முழுவிபரத்தையும் அறிய இணைந்திருங்கள்

Read More

கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலில் புதிய ஜனாதிபதி

அஸ்ரப் ஏ சமத் கண்டி தலாதா மாளிகையில் புதிய ஜனாதிபதி அஸ்கிரிய மகா பீடாதிகளிடம் ஆசிர்வதிப்பதிலும் மற்றும்  கண்டி மீரா மக்கா பள்ளிவாசலிலும் துஆ பிரத்தனையிலும் ஈடுபட்டனர்.

Read More

இன முரண்பாடுகளை ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்படாது – மங்கள

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வெற்றியை தடுக்க மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சித் திட்டங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோர் மைத்திரிபாலவின் தேர்தல் வெற்றியை தடுக்க முயற்சி மேற்கொண்டதாகவும், இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் ஆட்சியை கைப்பற்றிக்கொள்ள முயற்சித்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசேட விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன தேர்தலில்  வெற்றியீட்டுவதனை…

Read More

பாலிவுட்டைத் துறந்து, இஸ்லாத்தை ஏற்ற முர்ஸிலின்…!

23 வயதான முர்ஸிலின் பிர்ஸாதா இஸ்லாமிய குடும்பத்தில்தான் பிறந்தார். ஆனால் இஸ்லாமிய நடவடிக்கை எதுவும் இவரிடத்தில் இருந்ததில்லை. தந்தை ஃபெரோஸ் பிர்ஸாதா காஷ்மீரில் பெரும் தொழிலதிபர். இவ்வளவு வசதிகள் இருந்தும் சினிமா மோகத்தால் மும்பையில் செட்டில் ஆகி ‘ஏக் தா டைகர்’ என்ற சல்மான்கான் படத்துக்கு துணை இயக்குநராகவும் பணிபுரிந்தார். யாஷ் சோப்ரா இவரது சினிமா ஆர்வத்துக்கு வழி அமைத்துக் கொடுத்தார். ஆடம்பர வாழ்வு, ஃபேஷன் ஷோக்கள் என்று மிக சந்தோஷமாக ஓடிக் கொண்டிருந்தது வாழ்க்கை. திடீரென…

Read More