சிறுபான்மையினர் அச்சுறுத்தப்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது: சூறா சபை
பொதுபலசேனா அமைப்பும் மியான்மர் நாட்டின் முஸ்லிம் எதிர்ப்பு இயக்கமான 989வும் இலங்கையினுள் இணைந்து செயற்படப் போவது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் தேசிய சூறா சபை ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய சூரா சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பொதுபலசேனா அமைப்பு செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் மாநாடொன்றை நடாத்தியது. அம்மாநாட்டைத் தொடர்ந்து இந்த இரண்டு முஸ்லிம் விரோத தீவிர வாதக் குழுக்களும் ஒன்றிணைந்து…
