Headlines

கோட்டாவால் வெளிச்சவீடு திறந்து வைப்பு (படங்கள் இணைப்பு )

இராணுவ ஊடகப்பிரிவு காங்கேசன்துறை வெளிச்சவீட்டினை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபய ராஜபக்ச திறந்து வைத்தார். யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் அழைப்பை ஏற்று இருநாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச வரலாற்று முக்கியம் வாய்ந்த காங்கேசன்துறை வெளிச்ச வீட்டினை நேற்று திறந்து வைத்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட செயலர் பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டதுடன்…

Read More

எபோலாவைக் கட்டுப்படுத்த பேஸ்புக் நிறுவுநர் உதவி

கொடிய உயிர்க்கொல்லி நோயான எபோலாவை கட்டுபடுத்த போராடும் நாடுகளுக்கு பேஸ்புக் நிறுவுநர் மார்க் ஷுக்கர் பெர்க் ரூ.150 கோடி நிதி உதிவி அளிக்க போவதாக அறிவித்துள்ளார். எபோலா நோய் தாக்கி மேற்கு ஆபிரிக்க நாடுகளில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயரிழந்ழள்ளனர். 9,000 பேர் அந் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எபோலா பரவாமல் தடுக்க உலக சுகாதார நிறுவனம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் எபோலா நோய் தாக்கி மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளான கினியா, லைபீரியா,…

Read More

24 வருடங்களின் பின் யாழ். வந்த தபால் ரயில்

கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான தபால் புகையிரத சேவை  24 வருடங்களின் பின்னர் இன்று காலை 7.25 மணியளவில் யாழ். பிரதான புகையித நிலையத்தை வந்தடைந்துள்ளது. இந்த சேவையினை கொண்டாடும் முகமாக தற்பொழுது யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து தபால் பொதிகள் யாழ். பிரதான தபாலகத்திற்கு வீதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றது.

Read More

மூன்று மாதங்களுக்குப் பின் அளுத்கமை (சிறப்புக் கட்டுரை)

டிரன் குமார பங்ககம ஆரச்சி நாம் புதிய நிலைமையை அறிந்து கொள்வதற்கு அளுத்கமைக்கு சென்றோம். அளுத்கமை – பேருவளை தீ எரிந்து, அணைந்து மூன்று மாதங்கள் கழிவதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜூன் நடுப்பகுதியில் எரிந்த இனவாத தீயின் இருண்ட நினைவு முழுமையாகவே அணைந்துள்ளதா? அதனை எதிர்கொண்ட மனிதர்கள் முன்னரைப்போன்று பழக்கப்பட்ட நிலையில் காலம் கழிக்கின்றனரா? அனைத்து நிலைவரங்களும் அளுத்கமைக்குள் பிரவேசித்து பார்க்க வேண்டியவைகளாகும். அளுத்கமை இன்னமும் இருண்டு காணப்படுகிறது. மூதேசிகளான, பயங்கரமான கடந்தகால பேய்கள் எல்லா இடங்களிலும்….

Read More

சோபித தேரர் – முஸ்லிம் காங்கிரஸ்; பேசத்தயார்!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்குவது தொடர்பில் மாதுலுவாவே சோபித தேரர் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக நிறைவேற்று முறைமையினை எதிர்க்கும் சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் கோட்டை நாக  விகாரையின் நகராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் களமிறங்கியுள்ளார். சோபித தேரர் அழைப்பு விடுத்தால் பேசத்தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தெரிவித்துள்ளன. அடுத்த ஆண்டு…

Read More

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கட்சிக்கு பாதக நிலையேற்படும் – முன்னாள் பிரதமரின் மகன்

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கட்சிக்கு பாதக நிலைமை ஏற்படும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபைத் தேர்தலின் மூலம் எதிர்க்கட்சிகளினால் வெற்றியீட்ட முடியும் என்ற நிலைப்பாடு உருவாகியுள்ளது. ஆளும் கட்சியின் காலம் முடிவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலைப்பாடுகள் உறுதியாவதனை மாற்றியமைத்தே அரசாங்கம் தேர்தல்களுக்குச் செல்ல வேண்டும். எம்மில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்….

Read More

புத்தளம் சாஹிரா கல்லூரியின் “பசுமைப்புரட்சி”

HITYP புத்தளம் சாஹிரா கல்லூரியின் 2006 O / L  மற்றும் 2009 A / L மூலம் கல்வி கற்று வெளியேறிய  மாணவர்கள் மூலம் உறவக்கப்பட்ட HITYP  அமைப்பினால் எதிர் வரும் 17/10/2014 ஆம் திகதி “பசுமைப்புரட்சி ” என்ற தொனியில் சாஹிரா கல்லூரியின் 70 வது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் முகமாக HITYP  அமைபினரால் கல்லூரியின் மைதான வளாகத்தில் மரம் நாடும் நிகழ்வு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது . ” மர நடுகையில் ஆரம்பித்து ,…

Read More

ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்க முடிந்தளவு பாடுபடுவேன் – ரதன தேரர் எச்சரிக்கை

இரண்டு தடவைகள் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி பதவியை தொடர்ந்தும் வகிப்பதற்கு வசதியாக மஹிந்த 18வது திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தார். இதனை எனது கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் ஆதரித்து வாக்களித்து வரலாற்றுத் தவறைச் செய்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம் அதுவரை செயல்பாட்டில் இருந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பான 17 வது திருத்தச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டு, சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாதொழிக்கப்பட்டன. நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. ஜனாதிபதி மஹிந்த மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள்…

Read More

இலங்கை மீன்களுக்கு ஐரோப்பாவில் தடை

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன் வகைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. இதன்காரணமாக, இன்னும் மூன்று மாத காலங்களின் பின்னர் இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மீன் வகைகளை ஏற்றுமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளுக்கு இலங்கை மீன் வகைகள் பிரவேசிப்பதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய மீன்பிடி மற்றும் கடற்றொழில் விவகார ஆணையாளர் மாரியா தமனகி (Maria Damanaki) தெரிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு…

Read More

அமெரிக்க – இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்த 11 ஆவது கூட்டுக்குழு சந்திப்பு (படங்கள் இணைப்பு )

( படங்கள்: ஜஹான்ஸர்  கான் ) அமெரிக்க – இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான 11 ஆவது கூட்டுக்குழு சந்திப்பு சற்றுமுன் (15.10.2014) கொழும்பு தாஜ் சமுத்ராவில் இடம் பெற்றது.

Read More

இன்று முதல் சிறை கைதிகளுக்கு தொலைபேசி

சிறைக்கைதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி மத்திய நிலையம் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் திறந்துவைக்கப்படவுள்ளது. சமூகத்துடனும் குடும்பத்துடனுமான சிறைக்கைதிகளின் உறவை மேம்படுத்தும் நோக்கில் சிறைச்சாலைகள் வரலாற்றில் முதற் தடவையாக தொலைபேசி மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரசேன பல்லேகமவின் தலமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர கலந்து கொள்ளவுள்ளார்.

Read More

பாலஸ்தீனை ஆதரியுங்கள்! (சிறப்புக்கட்டுரை)

காஸா – இஸ்ரேல் யுத்தம் முடிந்ததன் பின்னர் சர்வதே சத்தின் பார்வை பலஸ்தீனை நோக்கித் திரும்பியுள்ளது என்றே சொல்லவேண்டும். 65 வருடங்களாக பலஸ்தீன் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப் புகளை -அட்டூழியங்களைக் கண்டுகொள்ளாத சர்வதேசத் தின் கண்களை காஸா – இஸ்ரேல் யுத்தம் திறந்துள்ளதை, பலஸ்தீனுக்கு ஆதரவாகக் குரல் எழுப்ப வைத்துள்ளதை அவதானிக்க முடிகிறது. காஸா மீதான யுத்தம் நீடிக்க நீடிக்க அழிவுகள் கூடிக்கொண்டு போனமை ஒருபுறமிருக்க, மறுபுறம் அந்தப் பிரச்சினை , இஸ்ரேலின் கோர முகம்…

Read More