Headlines

அட்டாளைச்சேனை வீதிகளின் அவல நிலை போக்குவது யாரோ..??

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் அண்மைக் காலமாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அட்டாளைச்சேனை 1 ஆம் பிரிவு,9ஆம் பிரிவு,8ஆம் பிரிவு,15ம் பிரிவு வீதிகளில் மக்கள் பயணிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.அன்றாடம் பாட சாலை செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப் படுவதாகவும் அறிய முடிகிறது.சில குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயரக் கூடிய நிலைக்கும் தள்ளப் பட்டுள்ளனர்.சிறந்த வாடிகால் அமைப்பு தொழில் நுட்பங்கள் இல்லாமையே இதற்கான பிரதான காரணம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.பல வருட…

Read More

தனிநபர் நிதியின் கீழ் அல் – மனாரில் திறந்த அரங்கு (photos)

ஏ.எச்.எம். பூமுதீன் மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியில் ரூபா 45 இலட்சம் செலவில் நிர்மானிக்கப்பட்டு வரும் லயன் சித்திக் நதீர் திறந்த அரங்கானது மருதமுனையில் தனி நபர் ஒருவரின் சொந்த நிதியினால் நிர்மானிக்கப்படும் முதலாவது கட்டடம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ‘மை ஹோப்’ குழுமம் மற்றும் ஐவா தாதியர் கல்லூரி என்பனவற்றின் தலைவரான சித்திக் நதீரே பிரமாண்ட திறந்த அரங்கிற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். அல்மனாரில் நிர்மானிக்கப்படும் இந்த திறந்த அரங்கிற்கு மேலதிகமாக அரங்கின் மேற்பகுதியில்…

Read More

மைத்திரிபாலவின் வீட்டு பாதுகாப்பும் வாபஸ்

பொலன்னறுவையில் உள்ள முன்னாள் சுகாதார அமைச்சரான மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு பிரிவினர் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக, நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஹெல உறுமயவும் ஆதரவு

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஐாதிக ஹெல உறுமயவும் எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளது. அண்மையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஐாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

Read More

மைத்திரியின் பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் சுகாதார அமைச்சரும் எதிர்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவர் நேற்று அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளதால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பு அவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

Read More

தம்மை எதிர்த்த சரத்தின் நிலையே மைத்திரிக்கும் : மகிந்த

தம்மை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைமையே மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏற்படும் என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கான போசனம் வழங்கல் நிகழ்வில் ஜனாதிபதி இந்தக்கருத்தை வெளியிட்டார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சி தெரிவு செய்துள்ளது. இது ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தின் பொது வேட்பாளராக போட்டியிடுவது…

Read More

மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்து விட்டாராம் அஸ்வர் MP கண்டுபிடிப்பு

நேற்று வரையில் அமைச்சராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, குடும்ப அரசியல் பற்றி எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்? சிறிமாவோ பண்டாரநாயக்க நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்தார். எனினும் அவரது மகள் சந்திரிக்கா, மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து சூழ்ச்சி செய்கின்றார். மக்களுக்கு நலன்களை ஏற்படுத்திய மதத் தலைவர்கள் அரசியல் தலைவர்களுக்கு எதுவும் நடக்காது. மைத்திரிபாலவின் நடவடிக்கை பாரியளவிலான துரோகமாகும். சர்வதேச சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதனை ஜனாதிபதி அம்பலப்படுத்தினார். கடந்த சில தினங்களில் பல மில்லியன் அமெரிக்க…

Read More

மு.கா உறுப்பினர்களை கொழும்புக்கு வருமாறு அழைப்பு

முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,மாகாண சபை உறுப்பினர்கள் ,உள்ளுராட்சி உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்களை கொழும்புக்கு வருமாறு கட்சியின் தலைமையால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முகா உறுப்பினர் பிரமுகர் எம்மிடம் தெரிவித்தார். பம்பலப்பட்டி சிலோன் ஹோட்டலில் நாளை ஞாயிறு (23)அவசர கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலும் இங்கு தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Read More

ஸ்ரீ.சு.க.யின் செயலாளராக அநுர பிரியதர்ஷன நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக அநுர பிரியதர்ஷன யாபா நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

அவசரமாக கூடிய மு.கா. (படங்கள் இணைப்பு)

சு.க பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கட்சி மாறி பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து பெரும் அதிர்ச்சியடைந்த முகா இன்று அவசரமாக கூடியது. நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் அமைச்சு அலுவலகத்திலேயே இந்த அவசர ஒன்றுகூடல் இடம்பெற்றுள்ளது. இந்த ஒன்று கூடல் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை கட்சி மாறிய மைத்திரியின் ஊடுகவியலாளர் மாநாடும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. இதனை அடுத்து தமது ஒன்று கூடலை சற்று தாமதப்படுத்திய முகா தரப்பினர் – மைத்திரியின்…

Read More

அதிகாரங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்தின் கையில் அடக்கம்; மைத்திரிபால சிறிசேன

நாட்டின் அதிகாரங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்தின் கையில் குவிந்திருப்பதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் சட்டம் சீர்குழைந்துள்ளது. யுத்த வெற்றியின் பின்னர் இந்த அரசு பிழையான வழியில் செல்கின்றது. குறிப்பாகஅரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் பாரியதொரு தவறாகும் 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சந்திரிகா அம்மையார் பாரிய முயற்சிகளை முன்னெடுத்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கொள்கை மற்றும் தூரநோக்கு இருக்கிறது. 1974 – 1994 வரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, கண்ணீர் சிந்தி…

Read More

EXCLUSIVE சந்திரிகாவுடன் இணையும் மேலும் பத்து பேர்

நமது நிருபர் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரம நாயக்க தலைமையில் மேலும் 10 ஆளும் கட்சி அமைச்சர்கள் MPமற்றும் அடங்கலாக 10 பேர் சந்திரிகாவுடன் இணையவுள்ளதாக அறியவருகிறது. சந்திரிகாவுடன் ஏற்றகனவே அமைச்சர்களான மைத்ரி , ராஜித உட்பட 6 பேர் இன்று இணைந்துள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாகவே மேர்த்படி 10 பெரும் இணையவுள்ளனர். அமைச்சர்களான நிமல், சுசில், ஜனக பண்டார தென்னகோன், பிரதி அமைச்சர் ரெஜினோல் குரே, மற்றும் பிரதமர் ரத்னசிரியின் மகனான விதுர விக்ரம சிங்க mp…..

Read More