Headlines

சரியும் சீட்டுக்கட்டு வீடு

மைத்திரிபால சிறிசேனவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு முன்னதாகவே அரசின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய அரச பொறுப்புகளிலிருந்து வெளியேறியிருந்தது. இன்னும் அரசில் அங்கத்துவம் வகித்துக்கொண்டிருக்கும் அமைச்சர்கள் பலரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பாக இருந்துகொண்டிருக்கிற பெருந்தலைகளும் ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகருக்கு ஆதரவளிக்கக் கூடுமான சூழ்நிலைகள் எழுந்துள்ளன. ஜாதிக ஹெல உறுமய, பத்தொன்பது அம்சக் கோரிக்கைகள் கொண்ட அரசியலமைப்புத் திருத்தத்தை முன்மொழிந்திருந்தது. இந்தக் கோரிக்கைகள் மறுதலிக்கப்படுமானால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என்றும், ராஜபக்சவைத் தோற்கடிப்போம்…

Read More

ராஜபக்சவின் ராஜதந்திரம் வெல்லுமா?

நகர்வுகள், திருப்பங்கள், திடீர் செய்திகள் அனைத்தும் அரசியல் கட்சிகளுக்கிடையே போரொன்று வெடித்திருப்பதையே நிரூபணம் செய்கின்றன. அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன, எதிர்க் கட்சி ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது அபேட்சகராக (வேட்பாளர்) வெளிப் பட்டிருப்பது மகிந்த ராஜபக்சவுக்கு பலத்த சவாலாகியுள்ளது. இதுவரை ராஜபக்ச அரசிலிருந்து அமைச்சர்கள் மூவர், பிரதியமைச்சர் ஒருவர், பாராளுமன்ற உறுப் பினர்கள் இருவர் பதவி விலகியுள்ளனர். இன்னும் 20 பேர் அளவில் விலகிச் செல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுக்கிடையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அபேட்சகர்கள்…

Read More

மைத்திரியினால் கொடுக்கப்பட்ட 800 நியமனங்கள் ரத்து!

புதிதாக பதவியேற்றுள்ள சுகாதார அமைச்சர் நேற்று மீண்டும் 1800 பேருக்கு புதிதாக நியமனங்கள் வழங்கியுள்ளார். நேற்று நியமன கடிதம் மைத்திரி மூலம் பெற்றவர்கள் கடமைக்கு சென்று ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாக சிங்கள நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Read More

ரணிலை பிரதமராக்குவதில் சிக்கல், சந்திரிகா நெருக்கடியில் – பல்டிக்கு தயாரானோர் பீதி

நான் ஜனாதிபதியானால் ரணிலை பிரதமராக்குவேன் என்று பொது எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அறிக்கையால் ஆளும் கட்சியிலிருந்து பொது எதிரணியுடன் இணைய விருப்பம் தெரிவித்த  உறுப்பினர்கள் சிலர் சந்திரிகாவிற்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தெரியவருகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுமென பொதுஎதிரணி  பிரச்சாரம் செய்து வருகிறது. மைத்திரிபால ஜனாதிபதியானால் அதிகாரங்கள் பகிரப்பட்டு பிரதமர் ஆட்சி நடக்கலாம். ஆனால் பிரதமர் ரணிலாக இருந்தால் நாம் வெளியேற மாட்டோம். மைத்திரி கூறிய வார்த்தையை மீளப்பெற்று பிரதமர் யார்…

Read More

மஹிந்த ராஜபக்ஷவுக்குகே ஆதரவு நல்க வேண்டுமாம் கூறுகிறார் அப்துல் காதர்

இந்நாட்டு முஸ்லிம்கள் எப்போதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குமே ஆதரவு நல்க வேண்டும் என்று சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார். எதிரணியினரின் ஏமாற்று பசப்பு வார்த்தைகளை முஸ்லிம்கள் நம்பி ஏமாந்து விடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முழுநாட்டு மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இருக்கும் போது ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் துரோகமிழைத்த மைத்திரி அல்ல, எவர் அபேட்சகரானாலும் எமது ஜனாதிபதியே…

Read More

அரபு எமிரேட்சில் விசா மூலம் தங்கியுள்ள அரபு அல்லாத அயல் நாட்டினருக்கு வீடுகள்

தி. ரஹ்மத்துல்லா அரபு எமிரேட்சில் விசா மூலம் தங்கியுள்ள அரபு அல்லாத அயல் நாட்டினர், 100 வருட ஒப்பந்தத்தில் ஷார்ஜாவில் வீட்டு மனைகள் வாங்கலாம். வீட்டு மனைகளில் முதலீட்டை அயல் நாட்டினருக்கு ஷார்ஜா முதன் முதலாக அனுமதித்துள்ளது. ஷார்ஜாவில் டைடல் சிடியில் 7,500 சதுர அடி பரப்ரளவு உள்ள மனைகள், ஒரு சதுர அடி 110திர்ஹம் முதல் 303 திர்ஹம் வரை கிடைக்கும். ( ஒரு சதுர அடி சுமார் 3690  ரூபாய் முதல் 10 000 ரூபாய்…

Read More

எகிப்து அஸ்ஹர் பல்கலைக்கு அமைச்சர் ரிசாத் விஜயம்இலங்கை மாணவர் ஒன்றியத்திற்கு உதவி

-ஏ.எச்.எம்.பூமுதீன்- எதிப்துக்கு விஜயம் செய்துள்ள அ.இம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ,உலகில் இஸ்லாமிய கல்விக்கு பிரபல்யம் பெற்ற அல் – அஸ்ஹர்பல்கலைகழகத்திற்கு நேற்று சனிக்கிழமை (22) விஜயம் செய்தார்.அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இலங்கையிலிருந்து புலமைப்பரிசில் பெற்றுச் னெ;றுள்ள மாணவர்களுடன் அமைச்சர் இதன்போது பல மணிநேரம் கலந்துரையாடினார்.மாணவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் இலங்கை மாணவர் ஒன்றிய வங்கிக் கணக்கிற்கு உதவித் தொகை ஒன்றையும் கையளித்தார்.குறித்த உதவித் தொகையை…

Read More

பொது கூட்டணியின் பெயர்; அபே ஜாதிக பெரமுண

எதிர் கட்சிகளின் பொது கூட்டணிக்கு அபே ஜாதிக பெரமுண என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுமார் பத்து பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்ட போதிலும் அபே ஜாதிக பெரமுண என்ற பெயர் பொருத்தமான இருப்பதாக பொதுக்கூட்டணிகள் முடிவெடுத்துள்ளன. பொது கூட்டணிக்கான சின்னம் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போதைக்கு சின்னம் தொடர்பாக கட்சிகளின் பிரதிநிதிகள் இடையே கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது.

Read More

ரஷ்யா சர்வதேச நாடுகளில் இருந்து மேலும் தனிமைப்படுத்தப்படும் – அமெரிக்கா

உக்ரெயின் விடயத்தில் ரஷ்யா தொடர்ந்தும் குற்றமிழைத்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உதவி ஜனாதிபதி ஜோ பெய்டன் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது உக்ரெயினில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்ற நிலையில், ஜோ பெய்டன் அந்த நாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கிறார். நேற்று அவர் உக்ரெயின் ஜனாதிபதி பெற்றோ பொறசென்கோவை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, யுக்ரெயினில் தளம்பலை ஏற்படுத்த ரஷ்யா தொடர்ந்தும் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தினார். ரஷ்யா தமது போக்கை மாற்றிக் கொள்ள தவறின், சர்வதேச நாடுகளில்…

Read More

எதிரணியின் பொதுவேட்பாளர் இரகசியம் பேண செய்மதி தொலைபேசி, இலக்கத்தகடற்ற வாகனங்கள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக்கும் திட்டம் மிக மிக இரகசியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அது பற்றிய தகவல்கள் வெளியே கசிந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தரப்பு உஷாரடைந்து விடாமல் இருப்பதற்காக திட்டங்கள் மிகமிக கச்சிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நகர்வு தொடர்பான அனைத்துத் தொடர்புகளுக்கும் செய்மதித் தொலைபேசிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. செய்மதித் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பது கடினமானது என்பதால் அரச புலனாய்வாளர்களை ஏய்ப்பதற்கு இந்த வழிமுறை கையாளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது….

Read More

மூன்றாக உடையும் முஸ்லிம் காங்கிரஸ்! அதிர்ச்சியில் ஹக்கீம்

தற்போதைய நிலையில் அமைச்சர் பஷீர் சேகுதாவூது தலைமையில் கட்சியின் ஒரு குழுவினர் அரசுடன் நேரடியாக ஐக்கியமாகும் முடிவில் உள்ளனர். இன்னொரு குழுவினர் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கத் தலைப்பட்டுள்ளனர். பைசல் காசிம், அஸ்லம் மற்றும் ஹரீஸ் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே பொருத்தமான தருணம் வரும்வரை எந்தப்பக்கத்துக்கும் ஆதரவு தெரிவிக்காமல் காலத்தைக் கடத்தும் யுக்தியைக் கையாள கட்சித் தலைவர் ஹக்கீம் முடிவெடுத்துள்ளார். இதற்கு ஆதரவாக செயலாளர் ஹசனலி,…

Read More

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது முடிவை 25ம் திகதி அறிவிப்பாராம்!

இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2015ம் ஆண்டு தை மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பலர் பொது எதிரணியின் பக்கம் தாவி வருகின்றனர் இந்நிலையில் உங்கள் நிலைப்பாடு என்ன? என அமைச்சர் டக்ளஸிடம் எழுப்பப்பட்ட கேள்விக் கு எதிர்வரும் 25ம் திகதி என் முடிவை அறிவிப்பேன் என கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தென்னிலங்கையில் தொடர்ச்சியாக கட்சி தாவல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்றைய…

Read More