Headlines

தொழிநுட்ப உபகரணங்கள் ,தளபாடங்கள் உட்பட விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள சமூக சேவை நிறுவனங்கள் , விளையாட்டு கழகங்கள் , சன சமூக நிலையங்கள்,பாலர் பாடசாலைகள் உட்பட 12 அமைப்புக்களுக்கு தேவையான உபகரணங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அன்பளிப்பு செய்யப்பட்ட 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தொழிநுட்ப உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள் ,தளபாடங்கள் உட்பட…

Read More

பங்களாதேஷ்-இலங்கை இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவில் அமுல்படுத்த ஏற்பாடு!

பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு என்பவற்றில பங்களாதேஷம்; இலங்கையும் பிணைப்புகளை ஏற்படுத்தியுள்ளன எனினும், அவை முழுமையான ஆற்றல் வளத்தை பெறுவதற்கு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும.; எனது அமைச்சின் கீழ் உள்ள வர்த்தகத் திணைக்களம் ஏற்கனவே வர்த்தக உடன்படிக்கையின் ஆய்வு அறிக்கையினை பூர்த்தி செய்துள்ளது என்பதனை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பங்களாதேஷ்pன் வர்த்தக ரீதியான சாதகமான தலையீடுகள் இருதரப்பு முயற்சிகளினை பெரிதும்; அதிகரிக்கும். உண்மையில், இரு தரப்பினரது தனியார் துறையினர் வர்த்தகத்தினை வழிநடத்தும் ஒரு இயக்கியாக காணப்படுகின்றனர்….

Read More

மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் பொது பல சேனாவின் முகத்திரை கிழிந்தது: மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்துள்ளதன் மூலம் பொது பல சேனாவின் முகத்திரை கிழிந்துள்ளதாகவும், அதன் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளதாகவும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கே தம்முடைய ஆதரவு என்று பொது பல சேனா நேற்று வியாழக்கிழமை அறிவித்திருந்தது. அதனையடுத்து, மைத்திரிபால சிறிசேன தன்னுடைய ருவிட்டர் பக்கத்தில் மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொது பலசேனா…

Read More

அரசியல் கட்சிகளையும் இல்லாமல் செய்யும் நோக்கிலேயே மஹிந்த செயற்படுகின்றார்: மைத்திரி

கொழும்பு நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனநயாகத்தை முற்றுமுழுதாக அழித்து விடவே ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக போட்டியிடுகின்றார். ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நான் ஜனாதிபதியாவது நிச்சயம். சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்தேன். எனக்கு மட்டுமல்ல இந்த அனுபவம் என்னுடன் வெளியேறிய அமைச்சர் ராஜித சேனாரட்ன உள்ளிட்டவர்கள் மற்றும்அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களுக்கும் இதே நிலைமையே காணப்படுகின்றது. நாட்டில்…

Read More

பொதுபல சேனாவை போட்டுத்தாக்கும் மைத்திரியும், ஹெல உறுமயவும்..!

அஷ்ரப் சமத் பொதுபல சேனா அமைப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமது நிலைப்பாட்டை இன்று ஊடகங்களுக்கு அறிவித்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொது பலசேனாவை பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவ்வமைப்பை பேச அழைத்ததாகவும் அந்த அழைப்பை பொதுபல சேனா அமைப்பு  நிராகரித்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன . இது தொடர்பாக மைத்ரிபால சிறிசேன அவர்களின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இது முற்றிலும் பொய்யான தகவல் என குறிப்பிட்டுள்ளது. இந்த நாட்டில்…

Read More

ஹூனைஸ் பாறுக் எம்பிக்கு ஏதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஏ.எச்.எம்.பூமுதீன் சமுகத்திற்காகவும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்காகவுமே கட்சி மாறியதாக ஹூனைஸ் எம்பி  தெரிவிக்கும் காரணம் முழுப்பூசனி;க்காயை சோற்றுக்குள் மறைப்பதற்கு ஒப்பானதாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிஸின் செயலாளர் நாயகம் வை.எல் .எஸ் ஹமீட் தெரிவித்துள்ளார். அ.இ.ம.கா உயர்பீட கூட்டங்களில் கலந்து கொள்ளாமலும் அங்கு கருத்துக்கள் எதையும் தெரிவிக்காமலும் தான் தோன்றித் தனமாக கட்சி மாறிவிட்டு மேற்படி காரணத்தை ஒப்புவிப்பது அவரது சுயநலத்தை தெளிவாக எடுத்துக்காட்ட போதுமானது என்றும் வை.எல்.எஸ் ஹமீட் தெரிவித்துள்ளார். ஹூனைஸ் பாறுக்…

Read More

கொழும்பு துறைமுகத்தில் ரஷ்ய கப்பல்

நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு ரஷ்ய கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்தை கடந்த 24ஆம் திகதி வந்தடைந்துள்ளதாகவும் அது எதிர்வரும் 28ஆம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என கடற்படை தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த ரஷ்ய கப்பலுக்கு கடற்படை மரபுக்கிணங்க இலங்கை கடற்படையினர் வரவேற்பளித்துள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

Read More

புறா சின்னத்தில் போட்டியிடுகிறார் மைத்திரி exclusive

இதனை மைத்திரிபால சிறிசேன உறுதி செய்துள்ளார். இதன்படி அவர் புறா சின்னத்தில் போட்டியிடுவார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் மங்கள சமரவீர இந்த கட்சியை பதிவு செய்தார். இந்தநிலையில் ஜாதிக ஹெல உறுமய பொதுவேட்பாளர் தொடர்பில் தமது நிலைப்பாட்டை இன்று வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பொதுவேட்பாளர் மற்றும் சின்னம் என்பதை தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் அதிருப்தி  கொள்ளத் தேவையில்லையென அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார். கட்சியின் தனித்துவம் எந்தநேரத்திலும்…

Read More

அஸ்ஸலாமு அலைக்கும் என பேச்சை ஆரம்பித்த, மைத்திரியின் உருக்கமான வேண்டுகோள்..!

இருண்ட ஆட்சியில் இருந்து நாட்டை விடுவிக்கவே அரசை விட்டு வெளியேறியுள்ளேன். நெல்சன் மண்டேலா மகாத்மாகாந்தியின் கொள்கையினை பின்பற்றி இந்த நாட்டில் ஜனநாயகத்தினை வென்றெடுப்பேன் என உறுதியளித்துள்ள மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மகிந்தவுடன் போட்டியிட அதிகார பலமோ பணபலமோ என்னிடம் இல்லை. மக்களின் பலத்தினை நம்பியே களத்தில் குதித்துள்ளேன். மக்கள் என்னை கைவிடவேண்டாம் எனவும் தெரிவித்தார். பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன நேற்று ஐக்கிய தேசிய கட்சியின் காரியாலயத்தில் அக்கட்சியின் மாவட்ட மாகாண அமைப்பாளர்களை சந்தித்திருந்தார். இதன்…

Read More

4000 சட்டத்தரணிகள் மைத்திரியை ஆதரிக்க முடிவு

4000 ற்கும் மேற்பட்ட இலங்கை சட்டத்தரணிகளை உள்ளடக்கிய லோயர்ஸ் கலக்டிவ்(lawyers collective) என்ற அமைப்பு எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனா கலந்துகொள்ளவுள்ள பிரச்சார கூட்டங்களில் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் பிரச்சாரங்களின் போது பழிவாங்கப்படுவோரிற்கு எதிராக இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஆஜாரவர்கள், முன்னாள் பிரதம நீதியரசரின்…

Read More

ஜனாதிபதியால் இனி தூங்க முடியாது – ராஜித

தனது புல­னாய்வு பிரி­வினர் சிறந்­த­வர்கள் என மார் தட்டும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு பொது வேட்­பாளர் யார் என்­பதை கண்­டு­பி­டிக்க முடி­யாமல் போய்­விட்­டது. தனது போட்­டி­யா­ளரை தன்­னு­ட­னேயே வைத்­திருந்துள்ளார் என குறிப்­பிட்ட ராஜித சேனா­ரத்ன, அர­சாங்­கத்தின் மொத்த பற்­க­ளையும் ஒன்­றாக கழற்றாது ஒன்­றொன்­றாக கழற்றி எடுப்போம். மஹிந்­தவின் தூக்­கத்தை கெடுப்போம் எனவும் குறிப்­பிட்டார். பொது எதி­ர­ணி­யினர் நேற்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாகாண மாவட்ட உறுப்­பி­னர்­களை சந்­தித்த போது அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;…

Read More

மக்களால் உருவான தேசியத் தலைவன் – 42 இற்குள் 15 வருடம்

ஆக்கம் எஸ்.எச்.எம்.முஜாஹிர் – புதுக்குடியிருப்பு குறிப்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனுக்கு இன்று (27) பிறந்த நாளாகும் (42வயது). அத்துடன் பாராளுமன்ற அரசியலில் 15வது வருடத்தில் காலடி எடுத்தும் வைக்கின்றார். இதனை முன்னிட்டு இக்கட்டுரை. உலகில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம் என்ற இனம்தான் திட்டமிட்டுத் தாக்கப்படுகின்ற இனமாகும்.உலகம் பூராகவும் உள்ள முஸ்லிம்களை அடக்கி ஒடுக்க வேண்டும்-அழித்தொழிக்க வேண்டும் என்ற தூர நோக்குடைய சர்வதேச சதித் திட்டத்தின் அடிப்படையில்தான் உலகம் பூராகவும் இன்று…

Read More