Headlines

வெளிநாட்டவர்களுக்கு வீசா வழங்கும் போது, புதிய பாதுகாப்பு ஸ்டிக்கர்

வெளிநாட்டவர்களுக்கு வீசா வழங்கும் போது தற்போது பாவனையில் உள்ள உத்தியோக பூர்வ முத்திரைக்கு பதிலாக புதிய பாதுகாப்பு ஸ்டிக்கரை பயன்படுத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்பொருட்டு அவ்வாறான ஸ்டிக்கர்களை அச்சிடுவதற்கு, தற்போது அரசாங்கம் அச்சக கூட்டுத்தாபனத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அச்சகத்தின் முத்திராதிபதி லலித் டி சில்வா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். இந்த புதிய நடைமுறையின் கீழ் வெளிநாட்டவர்களுக்கு முற்னேற்றகரமானதும் முழுமையான பாதுகாப்பானதுமான விசாவை பெற்றுக்கொடுக்க முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்கள பேச்சாளர் ஒருவர்…

Read More

அரசாங்கத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞை – வாசுதேவ நாணயக்கார

மக்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞை வழங்கியுள்ளதாக தேசிய மொழிகள்  அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கடுமையான போட்டிக்கு மத்தியிலேயே அரசாங்கம் இம்முறை தேர்தலில் வெற்றியீட்டியுளளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வறுமை, வறட்சி போன்ற காரணிகளை விடவும் பிள்ளைகளின் எதிர்கால பாதுகாப்பை கருத்திற்கொண்டே ஊவா மாகாண மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா போன்ற கடும்போக்குவாத அமைப்புக்களின் நடவடிக்கைகளினால் சிறுபான்மையின மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த அதிருப்தியை ஐக்கிய தேசியக் கட்சி சாதகமான…

Read More

இனவாத கொள்கை, குடும்ப அரசாட்சிகளினால், தார்மீக ரீதியாக அரசாங்கத்திற்கு தோல்வி – தயான் ஜயதிலக

அரசாங்கம் தமது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வராவிட்டால் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க முடியாது என முன்னாள் தூதுவர் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு எழுதிய பத்தியொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தேர்தலில் தோல்வியைத் தழுவவில்லை என்பது உண்மை. எனினும்,  2009ம் ஆண்டு தேர்தல் முடிவுகளுடன் ஒப்பீடு செய்யும் போது அரசாங்கம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை. தார்மீக ரீதியாக அரசாங்கம் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச…

Read More

ஐக்கிய தேசிய கட்சியில் ஹரின் பெர்ணாண்டோவின் சூடு பறக்கிறது..!

ஊவா மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளில் ஐக்கிய தேசியகட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின்பெர்ணாண்டோ வெளிப்படுத்திய தலைமைத்துவ பண்புகள் மற்றும் கட்சிக்கு கிடைத்துள்ள சாதகமான முடிவுகள் என்பவற்றை அடிப்படையாக வைத்து அவரை கட்சியின் பிரதித்தலைவராக்க வேண்டும் என கட்சியின் தலைவர்கள் சிலர் கருதுவதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஹரின்பெர்ணாண்டோவின் பெயரை பிரதிதலைவர் பதவிக்கு சிலர் முன்மொழியவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில்விக்கிரமசிங்க சஜித்பிரேமதாஸாவின் பெயரை கட்சியின் பிரதிதலைவர் பதவிக்கு முன்மொழிவார் என ஊவா…

Read More

ஊவா; 6 ஆசனங்களை இழந்த ஜனாதிபதி தலைமையிலான ஐ.ம.சு.கூ

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) ஊவா மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கின்றது. ஆனாலும், 2009ஆம் ஆண்டு தேர்தலோடு ஒப்பிடும் போது 6 ஆசனங்களை இழந்துள்ளதுடன், மக்களின் அபிமானத்தையும் பெருமளவில் இழந்துள்ளமை தேர்தல் முடிவுகளில் தெரிகின்றது. நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊவா மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள் நேற்று நள்ளிரவு முதல் வெளியாகி வந்தது. இறுதி முடிவு சற்று முன்னர் வெளியானது. அதன் பிரகாரம், ஐக்கிய மக்கள்…

Read More

இழுபறி நிலையிலிருந்த ஆப்கன் அதிபர் தேர்தல் முடிவுகள் நாளை

கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக நேட்டோ துருப்புகளின் பாதுகாப்புடன் ஜனநாயக ஆட்சி நடைபெற்றுவந்த ஆப்கானிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதன் முதல் சுற்று முடிவின்போது அப்துல்லா அப்துல்லா முன்னணியில் இருந்ததாக அறிவிக்கப்பட்டார்.இரண்டாவது சுற்று எண்ணிக்கை முடிவடைந்து ஜூன் மாதம் வெளிவந்த அறிவிப்பில் மற்றொரு வேட்பாளரான அஷ்ரப்கனி அகமதுசாய் முன்னணியில் இருந்தார். இதனை ஏற்றுக்கொள்ள அப்துல்லா மறுக்கவே முடிவுகளை வெளியிட முடியாமல் அங்கு குழப்பமான சூழ்நிலை எழுந்தது.அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான்கெர்ரி தொலைபேசி…

Read More

வடக்கு மாகாண சபைக்கு ஒரு வயது

25 வருடங்களின் பின்னர் 2013 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாணத்தை பெரும்பான்மை வாக்குகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி கொண்டு இன்று ஒருவருடம் பூர்த்தியாகின்றது.

Read More

பலியெடுத்தது இராவணன் வெட்டு : இரு குழந்தைகள் சாவு

திருகோணமலை கோணேஸ்வரம் கோவிலுக்கு அருகில் உள்ள கடலில் தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளுடன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.இன்று மதியம் 01.00 மணியளவில் குழந்தைகளுடன் கடலில் குதித்தவேளை மூவரும் கடற்படையினரால் மீட்க்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது 12 வயதான சிறுமி மற்றும் 09 வயதான சிறுவனும் உயிரிழந்துள்ள நிலையில் தாய் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.கற்பாறைகளின் மேலிருந்து கடலை பார்த்து கொண்டிருந்த போது மகன் தவறி விழுந்து விட்டதாகவும்…

Read More

வெளியாகியது ஊவா தேர்தல் முடிவுகள்

வெளியாகியுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 349906 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது.இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 274773 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 36580 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன.இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 51.25 வீத வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 40.24 வீத வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 05.36 வீத வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளன.இதேவேளை…

Read More

ஊவா மாகாண சபைத் தேர்தல் 2014: வாக்களிப்பு ஆரம்பம்!

பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களை உள்ளடக்கிய ஊவா மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமானது. 834 மத்திய நிலையங்களில் ஆரம்பமாகியுள்ள வாக்களிப்பு மாலை 04.00 மணிக்கு நிறைவு பெறும் என்று தேர்தல்கள் அத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, தேர்தல்களுக்கான சகல ஏற்பாடுகளும் நேற்றையதினமே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உட்பட 12000 பேர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆள் அடையாளங்களை உறுதிப்படுத்தக் கூடிய தேர்தல் திணைக்களத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட…

Read More

போனஸ் ஆசனம் தருவதாக பொதுபலசேனா அழைத்தாலும் அய்யூப் அஸ்மீன் சென்றுவிடுவார்

முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்க போனஸ் ஆசனம் தருகின்றோம் வாருங்கள் என பொதுபலசேனா அழைத்தாலும் வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் சென்றுவிடுவார் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவம் இல்லை என குற்றம் சுமத்தும் கல்முனை வடக்கு இளைஞர் அமையம் அவரது செயற்பாடுகள் அவ்வாறு அமைந்துள்ளது என தெரிவித்துள்ளது. கல்முனை வடக்கு இளைஞர்  அமையத்தின் தலைவர் ஏ.எச்.எம் பூமுதீன் வெயியிட்டுள்ள அறிக்கையில் மேற்படடி குறிபிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது தமிழ் தேசிக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் வடக்கு முஸ்லிம்கள்…

Read More

பல்கலை மாணவர்கள் கொழும்பில் போராட்டம்

வெளிநாட்டு மாணவர்களுக்கு இலவசக் கல்வியை விற்கின்றமை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்து நேற்று கொழும்பில் பல் கலைக்கழக மாணவர்களால் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தாமரைத்தடாக சுற்றுவட்டத்துக்கு அருகாமையிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் வீதி மறியல் போராட்டத்தை மாணவர்கள் முன்னெ டுத்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் மாணவர்கள் அரசுக்கு எதிராக பல கோ­ங்களை எழுப்பியிருந்தனர். அரசால் வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வியை விற்பனை செய்வதற்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கையாள்வதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும், மஹாபொல…

Read More