Headlines

சிங்கள பௌத்த ஜனாதிபதி வேட்பாளருக்கு 50 லட்சம் வாக்குகள் திரட்டிக்கொடுக்கப்படும்

சிங்கள பௌத்த உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஐம்பது லட்சம் வாக்குகள் திரட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்றைய தினம் நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் தேசிய மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதிலும் உள்ள 5000 விஹாரைகளைத் தெரிந்து அதன் ஊடாக பிரச்சாரம் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.வடக்கு கிழக்கில்…

Read More

அரபு நாடுகளின் ஆதவை இழந்துவரும் இலங்கை

சர்வதேசத்தில் இலங்கைக்கான ஆதரவு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிரேஸ்ட ராஜதந்திரியும் பிரான்ஸிற்கான முன்னாள் தூதுவருமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22 நாடுகள் ஆதரவளித்துள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தின் யதார்த்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் சர்வதேச ரீதியான விசாரணை நடாத்துவது அவசியமற்றது எனவும், தேவையற்ற தலையீடு எனவும் தெரிவித்து 22 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இலங்கையில் உள்நாட்டு ரீதியான விசாரணைப்…

Read More

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவு – வெனுஜா நிம்சத் 199 புள்ளிகள் பெற்று தேசிய ரீதியில் முதலாமிடம்

ஐந்தம்தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று (28) வெளியாகியுள்ள நிலையில் எம்பிலிபிட்டிய முன்பள்ளி மாணவி டபில்யூ.ஏ.வெனுஜா நிம்சத் 199 மதிப்பெண்களை பெற்று தேசிய ரீதியில் முதலாமிடத்தை பெற்றுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(28) வெளியாகியுள்ளன. கிராமப்புர பாடசாலைகளுக்கான முடிவுகள் தபால் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் www.doenets.lk எனும் இணையத்தள முகவரியினூடாக பரீட்சை முடிவுகளை பார்வையிட முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பிலுள்ள…

Read More

ஜனாதிபதி இல்லாதபோது, சர்வதேச தீவிரவாதியை நாட்டுக்குள் அழைத்தமை சந்தேகத்திற்குரியது

சர்வதேச ரீதியில் கடும்போக்கு வாதி என அடையாளம் காணப்பட்ட மியன்மாரின் அசின் விராது தேரருக்கு இலங்கை அரசாங்கம் வீஷா வழங்கியமை தேசத்துக்கு செய்யும் துரோகச் செயலாகும் என மேல் மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் கடுமையாக சாடினார். மியன்மாரில் இயங்கி வரும் கடும் போக்கு அமைப்பான 969 இயக்கத்தின் தலைவர் அசின் விராது தேரரிர் பொதுபலசேனா அமைப்பி;ன் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்திருக்கின்றமையானது இந்த நாட்டின் அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாகம் எனவும்…

Read More

கொழும்பில் பொதுபல சேனா மாநாடு – வன்செயலினை ஆரம்பிப்பதற்கான முறை

இன்று பௌத்த பிக்குகள் நான்காயிரம் பேர் ஒன்றிணைந்து, இலங்கையை பௌத்த நாடு என நிரூபிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் ஐனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர்கள் இல்லாத நிலையில் இதனை மேற்கொள்வுள்மையை தற்செயலாக நடக்கின்ற விடயமாக கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 27-09-2014  மட்டக்களப்பில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேரத்தினை சரியாக தெர்ந்தெடுத்து வன்செயலினை ஆரம்பிப்பதற்கான முறையாக நாங்கள்…

Read More

இங்கிலாந்து ஒப்புதல்: ISIS மீது விமான தாக்குதல்

ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் வாதிகளுக்கு எதிராக அமெரிக்கா விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இங்கிலாந்து படைகளும் இணைந்து கொள்ள இங்கிலாந்து நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் வாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சிரியா எல்லைக்கு அருகே உள்ள குர்தீஷ் பிராந்தியத்தில் பல்வேறு நகரங்களையும் அவர்கள் கைப்பற்றி உள்ளனர். மேலும், அங்குள்ள எண்ணெய் கிணறு களையும் கைப்பற்றி உள்ளனர். சிரியாவில் அதிபருக்கு எதிராக நடைபெறும் கிளர்ச்சியாளர்கள் கூட்டத்திலும்…

Read More

அல்காயிதா வீடியோவை வெளியிட்ட இஸ்ரேலிய உளவுப் பிரிவு…!

அல்காயிதா, இந்தியாவில் கிளையை துவக்கவிருப்பதாக கூறப்படும் வீடியோவை  வெளியிட்டுள்ள இணையதளம் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாதால் நிர்வகிக்கப்படும் நுண்ணறிவு பிரிவாகும்.ஸெர்ச் ஃபார் இண்டர்நேசனல் டெரரிஸ்ட் எண்டிடீஸ் என்பதன் சுருக்கமே ஸைட் ஆகும்.இந்த இணையதளத்தின் தலைவரான ரீத்தா காட்ஸும், ஜோஷ் ஸெவனும் 2002-ஆம் ஆண்டு வரை இஸ்ரேல் துவக்கிய ஒரு உளவு அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்களாவர்.அதற்கு முன்பு காட்ஸ், இஸ்ரேல் ராணுவத்திலும் பணியாற்றியுள்ளார். பணம் வாங்கிக்கொண்டு ‘ரகசிய தகவல்களை’ அளிப்பதற்காக இருவரும் இணைந்து 2008-ஆம் ஆண்டு இணையதளத்தை துவக்கினர்….

Read More

BREAKING NEWS சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு: ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிப்பு

18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பகல் 2.25 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை வழங்கினார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக நீதிமன்றம் அறிவிப்பு. முதல்வர் பதவியை இழந்தார் ஜெ: பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் பவானி சிங் ‘தி இந்து’விடன்…

Read More

இன்று ஜெயலலிதாவிற்கு எமகண்டமா?

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தீர்ப்பு வெளியாகும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இருப்பதால் பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் பெங்களூரில் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 18 ஆண்டுகளாக…

Read More

மகிந்த – மோடி இன்று பேச்சுவார்த்தை

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 69ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மற்றும்  இந்தியப் பிரதமர் இடையே இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளது.அமெரிக்க நேரப்படி இன்று காலை 11.45 மணிக்கு இந்த இருதரப்புச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இரு நாட்டு அரசுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.சுமார் 30 நிமிடங்கள் வரை நடைபெறவுள்ள இச் சந்திப்பின்போது இலங்கை தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகப் பேசப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Read More

அஷின் விராதுவின் இலங்கை வருகை குறித்து கவலைப்பட வேண்டியவர்கள் முஸ்லிம்கள் அல்ல

(இனாமுல்லாஹ் மஸிஹுதீன்) மியன்மாரில் பல்லாயிரக்காணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்களை கொன்று குவித்த சக்திகளுக்குப் பின்னால் இருந்தவர் என சர்வதேச சமூகம் இனம் கண்டுள்ள அஸின் விராது எமனும் பௌத்த துறவி பொதுபல சேனாவின் ஏற்பாட்டில் இடம்பெறும் சங்க மாநாட்டிற்கு பிரதம விருந்தினராக அழைக்கப் பட்டு வருகை தந்துள்ளமை இந்த நாட்டின் குறிப்பாக பெரும்பான்மை சமூகத்தின் மதத்திற்கோ அரசியலுக்கோ எந்த விதத்திலும் நன்மை பயக்கப் போவதில்லை. மாறாக சிங்கள பௌத்தர்கள் போற்றும் பௌத்த மதத்திற்கும் தம்முடையது என உரிமை கோரும்…

Read More

(வீடியோ & படங்கள் ) சற்றுமுன் இலங்கையை வந்தடைந்தார் மியன்மாரின் அஷின் விராது

VIDEO Post by அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். download video_2014-09-27_09-16-49 பொதுபல சேனா பெளத்த அமைப்பு நாளை கொழும்பு சுகததாஸ அரங்கில் பிரமாண்டமான ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் ஏற்கனவே இலங்கை மற்றும் உலகில் உள்ள பெளத்த தலைவர்கள் 7000 பேர் கலந்து கொள்வதாக அறிவித்து இருந்தும் மியன்மாரின் சர்ச்சைக்குரிய தேரர் என அழைக்கப்படும் அஷின் விராது வருவது பற்றி உத்தியோகபூர்வமாக தெரிவித்து இருக்கவில்லை. அதேவேளை சற்றுமுன் மியன்மாரின் அஷின் விராது இலங்கையை வந்தடைந்ததாக பொதுபல சேனா அமைப்பு தனது…

Read More