முஹம்மட் ஜெலீல் நிந்தவூர் 2014 ம் ஆண்டிற்கான ஐந்தாம் தரப்புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தம்பி, தங்கையர்கள் அனைவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, இப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானதையடுத்து நேற்றைய தினம் எமது பிரதேசங்களில் சித்தியடையாத மாணவர்கள் சகிதம் மாணவர்களின் பெற்றோர்கள்கூட கண்ணீரில் மூழ்கியதை காணக்கிடைத்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது, இது தவிர சில பொற்றோர்கள் தமது குழந்தைகளை வெறித்தனமான பேச்சுக்களால் திட்டித்தீர்த்தும் அடித்தும்மிருக்கின்றார்கள். உண்மையில் இது பெற்றோர்களின் அறியாத்தன்மையை வெளிப்படுத்துகின்றது. இதுதான் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்கு…