Headlines

புலமைப்பரிசில் மீள்திருத்தம் ; ஒக்ரோபர் 15 வரை விண்ணப்பிக்கலாம்

நேற்றைய தினம் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் மீள்திருத்தத்திற்கு ஒக்ரோபர் மாதம் 15 ம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபர் ஊடாக விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

Read More

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அழைப்பில் இலங்கை வரும் ஹயாத் மதானி

இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் செயலாளர் நாயகம் ஹயாத் மதானி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்த அழைப்பினை அடுத்து, அவர் இலங்கை வரவுள்ளதாக சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதரக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மதானியின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக அவரது அதிகாரிகள் இலங்கைக்கு வந்து, விஜயத்திற்கான ஏற்பாடுகளை செய்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

கல்லூரி வரலாற்றில் முத்திரை பதித்த பாத்திமா எப்.எம்.

பிறவ்ஸ் முஹம்மட்) கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரின் ஊடகப்பிரிவும் அதன் பழைய மாணவிகள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பாத்திமா எப்.எம். கடந்த 20ஆம் திகதி சனிக்கிழமை வெற்றிகரமாக ஒலிபரப்பானது. அடுப்படிக்குள் மட்டுப்படுத்தப்பட்ட பெண் சமுதாயம் இப்போது சகல துறைகளிலும் தங்களது இருப்பிடங்களை தக்கவைத்துள்ளனர் என்பதை இந்த வானொலி மூலமாக பாடசாலை மாணவிகள் நிரூபித்துக்காட்டினார்கள். ஒருநாள் சேவையாக ஒலிபரப்பான பாத்திமா எப்.எம். அனைவரது மனதிலும் பெண்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை புடம்போட்டுக் காட்டியுள்ளது. இலங்கை ஒலிபரப்புக்…

Read More

புலமைப் பரீட்சையால் கண்ணீர் சிந்திய பெற்றோர்கள்.!

முஹம்மட் ஜெலீல் நிந்தவூர் 2014 ம் ஆண்டிற்கான ஐந்தாம் தரப்புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தம்பி, தங்கையர்கள் அனைவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, இப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானதையடுத்து நேற்றைய தினம் எமது பிரதேசங்களில் சித்தியடையாத மாணவர்கள் சகிதம் மாணவர்களின் பெற்றோர்கள்கூட கண்ணீரில் மூழ்கியதை காணக்கிடைத்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது, இது தவிர சில பொற்றோர்கள் தமது குழந்தைகளை வெறித்தனமான பேச்சுக்களால் திட்டித்தீர்த்தும் அடித்தும்மிருக்கின்றார்கள். உண்மையில் இது பெற்றோர்களின் அறியாத்தன்மையை வெளிப்படுத்துகின்றது. இதுதான் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்கு…

Read More

பதுளை நகரில் தற்பொழுது பொதுமக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்பாட்டம்

-ZIMAM AMMAR- பதுளை நகரில் பதுளை பிர‌தேச செயலகம் முன்பாக  ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக மடவளை நியூஸ் பதுளை செய்தியாளர் சிமாம் அம்மார் தெரிவித்தார்.திவிகிரிய திட்டதின் கீழ் பயனடைந்து  வந்த பிரதேச விவசாயிகள் திவினெகும திட்டம் அமுலுக்கு வந்த பின்னர் அதனூடாக தமக்கு அசாதாரனம் நிகழவதாக கூறி திவினெகும திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.குறித்த ஆர்பாட்டத்தில் சுமார் 200 க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

பலசேனாவுடன் இணைந்து 969 அமைப்புக்கள் செயற்படும் ; அஸின் விராது தேரர்

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க மியான்மாரின் 969 அமைப்பு பொது பல சேனாவுடன் கைகோர்த்து செயற்படப் போகிறது அதன் நிறுவுநர் அஸின் விராது தேரர் நேற்றுக் கொழும்பில் வைத்து பகிரங்கமாக அறிவித்துள்ளார். விராது தேரரின் வருகையே முஸ்லிம் மக்களின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் இந்த பகிரங்க அறிவிப்பு முஸ்லிம்களின் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் மேலும் கிளப்பிவிட்டுள்ளது. உள்நாட்டு அமைப்பான பொதுபல சேனா அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் இலங்கையர்…

Read More

அரசாங்கத்தை மாற்ற தயங்கமாட்டோம் – பொதுபல சேனா

இலங்கையில் பௌத்தம் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலை முடிவிற்க்கு கொண்டு வருவதற்க்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை மாற்றவும் தயங்கமாட்டோம் என பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் மாநாட்டில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள பொதுபலசேனாவின் தலைவர் கிரம விமலஜோதி, இலங்கை ஒரு பல்லின நாடால்ல அல்ல என குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஒரு பௌத்த நாடு, பௌத்த நாட்டில் அது இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின்  அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. பௌத்தர்களின் கரிசனைகள் குறித்த ஆவணமொன்றை அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளோம், அரசாங்கம்…

Read More

மட்டக்களப்பில் 193 புள்ளிகள் பெற்று முஸ்லிம் மாணவன் சாதனை

(பழுலுல்லாஹ் பர்ஹான்) 28-09-2014 ஞாயிற்றுக்கிழமை இலங்கை கல்வி திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட 2014 தரம் 5 ஜந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 193 புள்ளிகளைப் பெற்று காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலய மாணவன் முஹம்மது அன்வர் அர்ஷக் அகமட் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமை புரியும் திவினெகும அபிவிருத்தி உத்தியோகத்தரும் ,ஊடகவியலாளருமான எம்.எச்.எம். அன்வர் மற்றும் காத்தான்குடி நகர சபை முகாமைத்துவ உதவியாளர் ஜனாபா சபீனா ஆகியோரின் 3வது…

Read More

முஸ்லிம் கட்சிகள், சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் – ஜே.வி.பி. தலைவர்

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சகல தரப்பினரும் உள்ளனர் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு சரியான சந்தர்ப்பத்தை அரசாங்கத்திற்குள் இருப்பவர்களும் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தவேளையில் அனைவரும் இணைந்து பலமான எதிரணியை உருவாக்க வேண்டும். இதற்கு அடித்தளம் இடப்படுமாயின் தமது ஆதரவை வழங்க தயார் எனவும் அநுரகுமார திஸநாயக்க குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், அரசாங்கத்துடன், இணைந்திருக்கும் முஸ்லிம் கட்சிகளும் தற்போது சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை…

Read More

ஜனாதிபதி தேர்தலில் சோபித தேரர் போட்டியிட்டால், சிக்கலில் மாட்டிக்கொள்வார்

தேர்தல் நடத்தாமலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய முடியும் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பெட்டி வீரக்கோன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ஆதரவினை பெற்று பொது வேட்பாளராக போட்டியிட்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட மாதுலுவே சோபித தேரர் முயற்சிக்கின்றார். எனினும், இவ்வாறு தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் சோபித தேரர் சிக்கலில் மாட்டிக்கொள்வார். தேர்தலில் வெற்றியீட்டினாலும் ஜனாதிபதி முறைமையை மாற்றியமைக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. சோபித தேரருக்கு அரசியல் அனுபவம் கிடையாது எனவே வேறும்…

Read More

போலாந்தில் இப்படியும் நடைபெற்றது..!

போலந்து நாட்டின் வார்சாவில் உள்ள விலங்கியல் காப்பகத்தில் காதலில் மூழ்கித் திளைத்த காரணத்திற்காக பிரிக்கப்பட்ட இரண்டு கழுதைகள் பிரிக்கப்பட்டு மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. அந்தக் கழுதைகளின் பெயர் நெப்போலியன் மற்றும் அனடோசியா என்பதாகும். இருவரும் இப்போது மீண்டும் தங்களது காதலைத் தொடர்கின்றனர். இரு கழுதைகளும் காதலில் மூழ்கித் திளைத்ததாக கூறி சமீபத்தில் இதைப் பிரித்து விட்டனர். இரு கழுதைகளும் கிட்டத்தட்ட 10 வருடமாக ஒன்றாக சுற்றித் திரிந்த காதல் பறவைகளாகும். ஆனால் இந்த விலங்கியல் பூங்காவுக்கு வந்த…

Read More

உரிய ஆவணங்கள் இருப்பின் ஒருவாரத்தில் ஊழியர் சேமலாப நிதி

உரிய ஆவணங்களைச் சமர்பிக்கும் பட்சத்தில் ஒரு வார காலத்தினுள் ஊழியர்கள் தமது ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக் கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலமைச்சர் காமினி லொக்குகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஒத்துவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றிய அவர், ஊழியர் சேமலாப நிதியில் மோசடிகள் இடம்பெற்றிருப்பது உண்மையால் எதிர்க்கட்சி அது பற்றி “கோப்” குழுவிற்கு முறைப்பாடு செய்யலாம் என்றும் தெரிவித்தார். மேற்படி நிதி தொடர்பான நிர்வகிப்புகளை மத்திய வங்கியே மேற்கொள்கின்றதெனக் குறிப்பிட்ட அமைச்சர் பொய்க் குற்றச்சாட்டுக்களை…

Read More