Headlines

மலேசியாவில் ஐந்து இலங்கையர்கள் தடுத்து வைப்பு? சிங்கள ஊடகம்

மலேசியாவில் தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்ற ஐந்து இலங்கையர்கள், குண்டர் குழுக் கூட்டங்களல்  தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவ் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ராகல மஹதுடுவ என்னும் இடத்தைச் சேர்ந்த எம்.விஜயசிறி என்பவரே இவ்வாறு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனைவி மற்றும் தாய்க்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளார். ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் ஊடாக ஒராண்டுக்கு முன்னதாக விஜயசிறி மலேசியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச்…

Read More

ஐஎஸ் அமைப்பில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: அமெரிக்க உளவுத்துறை!

IS அமைப்பில் சேர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அமெரிக்க உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 20 ஆயிரத்தில் இருந்து 37ஆயிரத்து 500 பேர் இந்த  அமைப்பில் இணைந்துள்ளதாகவும், நாளுக்கு நாள் ஐஎஸ் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அதிகபட்ச நபர்கள் சமீபத்தில் பல்வேறு நாடுகளிலிருந்தும் இணைந்துள்ளனர் என்றும் அமெரிக்க உளவுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்நேரத்தில் அமெரிக்க அதிபர் ஐஎஸ் அமைப்புடனான வான்வழித் தாக்குதல் குறித்து உரை நிகழ்த்தியது…

Read More

பாப்பரசரின் இலங்கை விஜயம்: கத்தோலிக்க திருச்சபை உத்தியோகபூர்வமாக அறிவித்தது!

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு பாப் பிரான்சிஸ், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வரவுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. கொழும்பு ஆயர் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய கொழும்பு பேராயர் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யும் புனித பாப்பரசர், ஜனவரி 14ஆம் திகதி காலை 08.30 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலிலும், பிற்பகல் 02.00 மணிக்கு, மடுமாதா…

Read More

ஓசோன் ஓட்டை சுருங்க ஆரம்பம்

புற்றுநோய்க்கு காரணமான புற ஊதாக்கதிர்களிலிருந்து நாம் வாழும் பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலம் மீட்சி பெற்று வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஐ.நா. ஆய்வொன்று குறிப்பிடுகிறது. ஆண்டார்டிகாவில் மேலால் உள்ள ஓசோன் ஓட்டை ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து பெரிதாகி வருவது நின்றுவிட்டது. ஒரு தசாப்தத்திற்கு பின்னரே இந்த ஓட்டை சுருங்க ஆரம்பித்திருப்பதாக அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஓசோனை பாதிக்கும் சி.எப்.சி. வாயுக்களை படிப்படியாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததே ஓசோன் படல மீட்சிக்கு முழுமையான காரணம் என்று விஞ்ஞானிகள்…

Read More

அல்கைதா இயக்கம் உலக பௌத்தர்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது – சிங்கள ராவய

அல்கைதா மத்திய நிலையமாக இலங்கை மாற்றமடைந்து வருவதாக சிங்கள ராவய அமைப்பு அறிவித்துள்ளது. நாட்டை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கைதா இயக்கத்திற்கு எதிராக அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளது. இலங்கையில் முஸ்லிம் கடும்போக்குவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும். இந்தியாவில் அல்கைதா காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையிலும் விரைவில் இவ்வாறான ஓர் காரியாலயமொன்று அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அல்கைதா இயக்கம் உலக பௌத்தர்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது….

Read More

அரசமைக்கும் சவாலை வெற்றிக்கொள்வேன் – ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்களை ஒரே மேடைக்கு கொண்டுவர முடியுமாவென அரசாங்கத் தரப்பினர் விடுத்த சவாலை வெற்றிகொண்டது போல் அரசமைக்கும் சவாலையும் வெற்றிகொள்வேனென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்துள்ளார். பதுளை வியலுவ தேர்தல் தொகுதியில்அவர் நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

இந்திய பெருங்கடலில் சுனாமி வர வாய்ப்பு – ஆய்வில் தகவல்

மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதுவரை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி ஆய்வு செய்தனர். இதில், இலங்கையின் தென்கிழக்கில் உள்ள லகோன் கடல்பகுதியில் 22 வகையான படிமங்கள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். இவை இந்திய- ஆஸ்திரேலிய நிலத்தட்டுகள் சந்திக்கும் சுமத்ரா-அந்தமான் பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்களால் உருவானவை. அங்கு படிந்துள்ள மணலை ஆராய்ச்சி செய்த அவர்கள் 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி குறித்து வரலாற்று பதிவுகளை கொண்டு ஆராய்ச்சி…

Read More

சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது – காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் புதன்கிழமை சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து சிறுமியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது என தெரிவித்து மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்னால் வியாழக்கிழமை (11) பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த நபருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராக கூடாது எனக் கேட்டு சுலோகங்களை…

Read More

ISIS க்கு எதிரான அமெரிக்காவின் யுத்தம், பெரும் முதலாளிகள் மகிழ்ச்சி

(Kalaiyarasan Tha) ஈராக், சிரியாவில் ISIS இயக்கத்தை அழிப்பதற்கான திட்டத்தை ஒபாமா அறிவித்துள்ளார். ஒபாமாவின் “ISIS அழிப்புப் போர்”, அமெரிக்க பொருளாதாரத்திற்கு உதவும் என்பதால், பெரும் முதலாளிகள், குறிப்பாக எண்ணை வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில், கடந்த ஒரு வருடமாக எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பரல் ஒன்று $115 க்கு விற்ற எண்ணை, தற்போது நூறு டாலருக்கு கீழே இறங்கி உள்ளது. ஐரோப்பிய தரத்திலான Brent $99,90; அமெரிக்க தரத்திலான WTI $92,30 என, இறுதியாக…

Read More

பச்சை மிளகாய் சவாலை ஏற்ற ஐ.தே.க. எம்.பி.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பச்சை மிளகாய் சவாலை ஏற்றுக் கொண்டு அதனை செய்து காட்டியுள்ளார். இலங்கையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இளைஞர்கள் சிலர் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். “ஐஸ் பக்கட் செலன்ஞ்” திட்டத்திற்கு எதிராக “பச்சை மிளகாய் சாவால்”´ என்ற திட்டத்தை இளைஞர்கள் அறிமுகம் செய்துள்ளார். சவாலின் விதிகள்படி, சவால் விடுக்கப்படும் நபர் அந்த சவாலை ஏற்றுக் கொண்டால் 100 ரூபா நிதி உதவி அளிக்க வேண்டும்….

Read More

கோட்டாபய ராஜபக்ஸ, அரசியலுக்கு வருவதற்கு பூரண தகுதியை பெற்றுவிட்டார் – கொழும்பு மேயர் முஸாம்மில்

கோட்டாபய மிகவும் தூர நோக்கோடுதான் தனக்கு நகர அபிவிருத்தி அமைச்சு வேண்டுமென கூறியிருக்கின்றார். அவர் தற்போது அரசியலுக்கு வருவதற்கான மிக முக்கியமான தகுதியை பெற்றுவிட்டார் என கொழும்பு மாநகர மேயர் ஜே.எம் முஸாம்மில் தெரிவித்தார். 450 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் மற்றும் உபகரணங்களை கொழும்பு மாநகரசபையிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். இந்நிகழ்வு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வளாகத்தில் புதன்கிழமை (10) மாலை இடம்பெற்றது. அவர்…

Read More

ஜெயாவின் அவதூறு வழக்கு: சுவாமிக்கு அழைப்பாணை

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில் பிரதிவா தியாகக் குறிப்பிடப்பட்டுள்ள பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணி யன் சுவாமியை ஒக்டோபர் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தமிழ்நாடு நீதிமன்றம் நேற்று அழைப்பாணை விடுத்துள்ளது. தமிழக மீனவர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல், கடிதம் மட்டும் எழுதுவதாக தமிழக முதல் வரை விமர்சித்து ஆங்கில ஜெயாவின் நாளிதழ் ஒன்றுக்கு சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்திருந்தார். இதனையடுத்து, ஜெயலலிதா, சுப்பிரமணியனுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்….

Read More