Headlines

கிளிநொச்சியில் வரலாற்றிலேயே அதிகூடிய மழைவீழ்ச்சி

கடந்த 71 வருடங்களின் பின்னர் கிளிநொச்சிப் பிரதேசத்துக்கு பெய்த அதி கூடிய மழை வீழ்ச்சி நேற்று (16) பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இது 373.2 மி.மீ. என கணிப்பிடப்பட்டுள்ளது. 1945 டிசம்பர் 5 ஆம் திகதியே அப்பிரதேசத்துக்கு பெய்த அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இது 260 மி.மீ. எனவும் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.

Read More

சீரற்ற காலநிலை! கடுவலை அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்

கடுவலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையின் நுழைவு பகுதி வெளியேறும் பகுதிகளில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவே இந்த பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக 10 மாத குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளன. பாதிப்பு காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

சீரற்ற காலநிலை: 31, 851 பேர் இடம்பெயர்வு : 8445 குடும்பங்கள் நிர்க்கதி

நிலவும் சீரற்ற காலநிலை கார­ண­மாக நாட­ளா­விய ரீதியில் மக்­களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஏற்­பட்ட அனர்த்­தங்­களில் சிக்கி 6 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். அத்­துடன் மேலும் 9 பேர் காய­ம­டைந்­துள்­ள­துடன் நான்கு பேர் காணாமல் போயுள்­ளனர். இத­னை­விட சீரற்ற கால­நிலை கார­ண­மாக 25, 820 குடும்­பங்­களைச் சேர்ந்த 88 933பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 65 வீடுகள் முற்­றா­கவும் 1240 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. மேலும் பாதிக்­கப்­பட்­டோரில் 8445 குடும்­பங்­களைச் சேர்ந்த…

Read More

வவுனியாவில் தொடரும் மழை: 2689 பேர் பாதிப்பு

வவுனியாவில் மூன்றாவது நாளாகவும் தொடரும் மழை காரணமாக 711 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 689 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் மழை காரணமாக 306 குடும்பங்களைச் சேர்ந்த 1134 பேரும்,…

Read More

கடுகண்ணாவையில் மண் சரிவு: ஆறு முஸ்லிம்களை காணவில்லை

– ijas Ahmed – கடுகண்ணாவை இலுக்குவத்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அப்பிரதேசத்தில் 3 முஸ்லிம் குடும்பங்கள் வாழும் வீடுகள் மண்னில் புதைந்து 6 பேர் காணாமல் போயுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். ரம்மக்கல தக்கியா பள்ளிவாயலுக்கு முன்னால் அமைந்துள்ள இவ்வீடுகள் தொடர் மழையால் நேற்று (16) இரவு மண் சரிவில் சிக்கியுள்ளது. இராணுவம் உற்பட மீட்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் சேவைகள் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தும்  இதுவரை…

Read More

வெள்ளத்தில் மூழ்கியது பேலியகொடை மத்திய மீன் சந்தை

பேலியகொடை மத்திய மீன் சந்தையின் வாயிற் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று(16) அதிகாலை பொருட்களை கொண்டு வந்த லொறிகளும், மீன்கள் கொண்டுவந்த லொறிகளும் சந்தையின் உட்பகுதிக்குள் உள்நுழைய முடியாத நிலை காணப்படுவதாக பேலியகொடை மீன் சந்தை சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமஆராச்சி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த வெள்ள நிலைமை காரணமாக மத்திய மீன் சந்தைப் பகுதியின்…

Read More

மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

அதிக மழை காரணமாக மன்னார் மாவட்டத்திலுள்ள சில பாடசாலைக்கு இன்று (16) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வலயக் கல்விப் பணிப்பாளர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார். மன்னார் நகர் மற்றும் முசளி பகுதியில் வௌ்ளம் புகுந்துள்ள பாடசாலைகளுக்கே இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Read More

அனர்த்தமா உடன் அறிவிக்கவும்

நாட்டில் தற்போது நிலவுகின்ற மோசடியான காலநிலை காரணமாக ஏற்படும், அவசர அனர்த்த நிலைமைகளை, கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் இருக்கின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அனர்த்தம் தொடர்பில் கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்கலாம். இராணுவம்: 011 2 434 251, 011 3 818 578 கடற்படை: 011 2 212 230, 011 2 445 368, 011 2 212 231 விமானப்படை:  011 2 343 970,…

Read More

கொழும்பில் வெள்ளம்

கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் சீரற்ற காலநிலையால் கொழும்பில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Pic By: Sujeewa Kumar (நன்றி வீரகேசரி)

Read More

நாட்டின் பல பகுதிகளில் அடை மழைக்கு வாய்ப்பு!

நாட்டைச் சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும் இன்று (10) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் சில பிரதேசங்களில் இம் மழை வீழ்ச்சியினளவு 100 மில்லி மீற்றரைத் தாண்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில்…

Read More

நாடு முழுவதிலும் இடியுடன் கூடிய மழை!

நாட்டைச்சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும் இன்று(09) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில் குறிப்பாக 2.00 மணிக்குப் பின்னர் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் சில பிரதேசங்களில் இம்மழைவீழ்ச்சியினளவு 75 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலையில் மழைக்கான சாத்தியம் நிலவுகிறது. மேல் மாகாணம்,…

Read More

இன்றும் பல பிரதேசங்களில் மழை பொழியலாம்!

நாட்டில் வடக்கு கிழக்கு பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று (2) பிற்பகல் மழையுடன் கடுமையான காற்று மற்றும் மின்னல் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மின்னலால் ஏற்படும் விபத்துக்களை தவிர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read More