Headlines

நுரைச்சோலை அனல் மின்நிலையத் திருத்தப்பணிகள் நிறைவு

நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் திருத்தப்பணிகள் இன்று  மாலையுடன் நிறைவடையும் என்று இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. கடந்த 25ஆம் திகதி தொடக்கம் முழுமையாக இயக்கம் செயலிழந்த நுரைச்சோலை அனல் மின்னிலையத்தின் பணிகள் நாட்டின் மின்தேவைக்கு பாரிய தாக்கம் செலுத்தியது. தலைநகர் மற்றும் அதனை அண்மித்த பல பாகங்களில் மின்சாரம் இடைநிறுத்தப்பட்டதுடன் மின்சாரத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கடந்த வௌ்ளிக்கிழமை திருத்தப்பணிகள் ஆரம்பித்தன என்றும் இன்றுடன் நிறைவடையும் என்றும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தகு அமைச்சின்…

Read More

மன்னார் கடலில் கலவரம்

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடிப் படகொன்றின் மீது, மற்றுமொரு படகில் வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டதால், அப்படகில் இருந்த மூன்று மீனவர்களில் ஒருவர், கடலில் குதித்து சுமார் 10 கிலோமீற்றர் தூரம் நீந்தி கரை சேர்ந்துள்ளார். ஏனைய இருவரும் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தின் போது, மேற்படி மீனவர்கள் மூவர் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டதாக உயிர் தப்பிய மீனவர், பொலிஸாரிடம் சென்று அறிவித்துள்ளார். இந்நிலையில், மாயமாகியுள்ள மீனவர்கள் இருவரையும் தேடும்…

Read More

மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலை அயல்வீட்டு குடும்பஸ்தர் கைது

படுகொலை செய்யப்பட்டு வவுனியா, உக்குளாங்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது மாணவியின் கொலை தொடர்பில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.  மாணவியின் அயல் வீட்டில் வசித்து வந்தவரான 35 வயதுடைய பாலசிங்கம் ஜனர்தன் என்ற குடும்பஸ்தரே விசாரணைகளுக்காக சந்தேகத்தின் பேரில் கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர  உறுதிப்படுத்தினார். கைது  செய்யப்பட்ட சந்தேக நபரை டி.என்.ஏ.பரிசோதனைக்கு உட்படுத்தி…

Read More

முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில்  பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவியின் கொலைக்கு நீதிகோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹரிஷ்ணவியின் கொலைக்கு நீதிகோரியும், குற்றவாளிகள் உடன் கைதுசெய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு மாவட்ட மகளிர் அமைப்புக்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தினி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். நீதித்துறையே! காமுகர்களை கண்டுபிடி, சட்டத்தின் முன்நிறுத்து, மரண தண்டனை வழங்கு உள்ளிட்ட வாசகங்களுடனான பதாதைகளை ஏந்தியவாறு…

Read More

வவுனியா மாணவி படுகொலை விசாரணைக்கு சிறப்புக் குழுக்கள்

– எம்.எப்.எம்.பஸீர் – வவு­னியா  மாணவி ஹரிஸ்­ணவி வன்­பு­ணர்வின் பின்னர் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை முன்­னெடுப் ­ப­தற்கு சிறப்புக் குழுக்கள் நியமிக் ­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி வித்துள்ளனர். விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்ப்ட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சfர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். வவு­னியா பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பீர்வு பொறுப்­ப­தி­கா­ரியின் கீழ் இது தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்­காக சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசா­ர­ணையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள போதும் நேற்று (24) மாலை வரை சந்­தேக நபர் தொடர்­பிலோ…

Read More

தமிழர்களும் முஸ்லிம்களும் பகைத்துக்கொண்டு ஒருபோதுமே வாழ முடியாது

– சுஐப் எம் காசிம் – தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்வதன் மூலமே இனி வரும் காலங்களிலும் நமது ஆயுள் எஞ்சியுள்ள காலங்களிலும் நிம்மதியாக வாழமுடியுமென்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார் \னில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையம் அங்குரார்பபண நிகழ்வில் அவர் சிறப்பதிதியாக பங்கேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறான கருத்தை அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அபோஸ்தலர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பிரதம விருந்தினராகவும் சிறப்பு அதிதிகளாக குழுக்களின்…

Read More

மாங்குளத்தில் விபத்து : அறுவர் படுகாயம்

முல்லைத்தீவு – மாங்குளம் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் அறுவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வான் ஒன்று ஏ-09 வீதி மாங்குளம் பகுதியில் இன்று (18) அதிகாலை வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதுண்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த அறுவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வீதியில் கட்டாக்காலியாக நடமாடிக்கொண்டிருந்த எருமைமாட்டுடன் வான் மோதுண்டு விபத்துக்குள்ளாகாகியிருப்பதாக மாங்குளம் பொலிஸார் குறிப்பிட்டனர்….

Read More

மன்னார் மாவட்டத்தில் நவீன முறையிலான கைத்தொழில் வலயம்

மன்னார் மாவட்டத்தில் கைத்தொழில் வலயம் ஒன்றை உருவாக்கவுள்ளோம். இது தொடர்பில் மன்னார் மாவட்ட கல்விமான்களை உள்ளடக்கிய ஆலோசனை சபை ஒன்றை அமைத்துத் திட்டங்களை தயாரித்து வருகின்றோம். இவ்வாறு அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் அடம்பன் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விஞ்ஞான ஆய்வுகூடத் திறப்புவிழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது யுத்தம் எமது மக்களின் வாழ்வை மிக மோசமாக சீரழித்திருக்கிறது. இதனால் நாம் வாழ்விடம் இழந்தோம். உடமைகளை இழந்தோம். தொழில்களை இழந்தோம். உறவுகளை இழந்தோம். யுத்தம் முடிவடைந்து…

Read More

வவுனியாவில் அதிகமான மூடுபனி!

வவுனியா நகரில் இன்று (10) காலை அதிகமான மூடுபனி காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய காலங்களை விட இன்று அதிகமாக மூடுபனிக் காணப்பட்டதால் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதமே வவுனியா பிரதேசங்களில் சாதாரண பனி நிலைமை காணப்படும் என தெரிவித்துள்ள பிரதேசவாசிகள் வழமைக்கு மாறாக இன்றைய தினம் இங்கு மூடுபனி படர்ந்துக் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Read More

சொந்த இடங்களில் மீள்குடியேற்றுங்கள்! முஸ்லிம் அமைப்பு ஆர்பாட்டம்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட தங்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றி பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரி வடக்கு முஸ்லிம் அமைப்பு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள்  அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (09) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

Read More

முல்லைத்தீவு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் உருக்கம்

– ஊடகப்பிரிவு – தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளும் தந்திரத்துக்கு தமிழ்த் தலைமைகள் துணைபோகக் கூடாதெனவும், பெரும்பான்மை இனத்தின் சூழ்ச்சிகளுக்குள் அகப்படக் கூடாது எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (25) காலை உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் றிஷாத் பதியுதீன், முதலமைச்சர் விக்னேஸ்வரன், மஸ்தான் எம்.பி. ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவில் நடைபெற்றபோது அமைச்சர் றிஷாத் தமது ஆதங்கங்களையும், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும் வெளிப்படுத்தினார். இதன்போது அமைச்சர்…

Read More

மன்னார் தனியார் நண்டு வளர்ப்பு நிலையத்தைப் பார்வையிட்ட மஹிந்த அமரவீர

மன்னார் – சௌத்பார் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நண்டு வளர்ப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நண்டுகளை கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர பார்வையிட்டார். மன்னார் மாவட்டத்தில் நண்டு வளர்ப்பினை ஊக்கப்படுத்த உதவிகள் எவையும் அற்ற நிலையில் தனியார் ஒருவர் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நண்டு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார். குறித்த நண்டுகள் வளர்க்கப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. குறித்த நண்டு வளர்ப்பு நிலையத்தை ஊக்கப்படுத்தும் வகையில் ஏனைய உதவிகளை வழங்குவதற்கான…

Read More