Headlines

பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் வெளியானது – இங்கே பாருங்கள்

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. குறித்த வெட்டுப்புள்ளிகளின் முடிவுகளைhttp://www.ugc.ac.lk/ என்ற  இணையத்தளத்தில் பார்வையிட முடியும். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் மாவட்ட ரீதியாக  இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை இம்முறை 27 ஆயிரத்து 603 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்படவுள்ளதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த வருடத்தை விட 10…

Read More

பல்கலைக்கு 27,603 மாணவர்கள் உள்வாங்கப்படுவர்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 27,603 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொகான் டி சில்வா தெரிவித்துள்ளார். இது கடந்த முறையை விட 10 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Read More

பல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள்  வெளியீடு!

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் மாவட்ட ரீதியாக வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சப்ரகமுவ பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் உபவேந்தரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் வருட மாணவர்களை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் வகுப்புத் தடைக்கு உள்ளான மாணவர்களுக்கு வகுப்புத் தடையினை நீக்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தரது அலுவலகத்தை மூடவிடாது நேற்று இரவு வரை இவர்களது ஆர்ப்பாட்டம் தொடர்ந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை வகுப்புத்தடைக்கு உள்ளான மாணவர்கள் பகிடிவதையில் ஈடுபட்டமைக்கான சான்றுகள் இருப்பதாகவும், இவர்களுக்கான வகுப்புத்தடை தற்காலிகமானது என்றும் எதிர்வரும் 23ஆம்…

Read More

பல்கலை முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகத்தெரிவு!

VTM. IMRATH- பல்கலைக்கழகங்களில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் சமூக முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்ய முன்வர வேண்டும் என்ற நீண்டகால வேண்டுகோளின் விளைவாக, ஏற்கனவே பல்கலைக்கழக வளாகங்களில் இயங்கிவரும் முஸ்லிம் மஜ்லிஸ்களை ஒன்றிணைத்த ஒரு குடை அமைப்பாக உருவாக்கப்பட்டதுதான் ஒம்சா (AUMSA) எனப்படுகின்ற அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமாகும். 2002 ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு, சுனாமிக்கு பிற்பட்ட மீள் குடியேற்ற காலத்தில் ஓர் இயங்கும் படையாக உருவெடுத்து, பல்வேறு சமூக நல விடயங்களில் பங்காற்றிவிட்டு காலவேட்டத்தில்…

Read More

சப்ரகமுவ பல்கலையில் மாணவ நலன் தொடர்பான பிரச்சினைகள்.!

சப்ரகமுவ பல்கலைக்கத்தினுள் மாணவ நலன் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அதன் பொது மாணவ சங்க அமைப்பின் தலைவர் சமீர கப்புவத்த தெரிவித்துள்ளார். மாணவர் விடுதி, பரீட்சை பெறுபேறுகள் தாமதிக்கப்படல், மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் அங்கு நிலவுவதாக மாணவ சங்க அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு குரல்கொடுக்கும் மாணவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளும் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

இன்று தீர்வு கிட்டலாம்!

தமது கோரிக்கைகளுக்கு இன்று (8) எழுத்து மூல தீர்வு கிடைக்கலாம் என, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இன்று இது குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, அந்த ஒன்றியத்தின் இணைத் தலைவர் எட்வட் மல்வத்தகே குறிப்பிட்டுள்ளார். ஏழு கோரிக்கைகளை முன்னிருத்தி பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கடந்த 27ம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். எதுஎவ்வாறு இருப்பினும், இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் வேலை…

Read More

பணிக்கு திரும்­பாத ஊழி­யர்­கள் பணியில் இருந்து நீங்­கி­ய­வர்­க­ளாக கரு­தப்­ப­டு­வார்கள் : மொஹான்

வேலை நிறுத்தப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள பல்­க­லைக்­க­ழக கல்வி சாரா ஊழி­யர்கள் இன்று (5) முதல் கட­மைக்குத் திரும்ப வேண்டும் என அர­சாங்கம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அவ்­வாறு இன்று பணிக்கு திரும்­பாத ஊழி­யர்­கள் பணியில் இருந்து நீங்­கி­ய­வர்­க­ளாக கரு­தப்­ப­டு­வார்கள் எனவும் பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா குறிப்­பிட்­டுள்ளார். பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரினால் வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கு­றிப்­பிட்ட விட­யங்கள் தெளிவு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.இந்­நி­லையில் அர­சாங்­கத்தின் இந்த செயற்­பா­டு­களால் தமது தொழிற்­சங்க நட­வ­டிக்­கையை நிறுத்தப் போவ­தில்லை என, பல்­க­லைக்­க­ழக தொழிற்­சங்க…

Read More

பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் வேலைநிறுத்தம்

பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டமானது இன்றும் (4) தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இன்று மீண்டும் போராட்டத்தை தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி முதல் இவர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டமானது இன்று 9ஆவது நாளாகவும் தொடரவுள்ளதாக பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தமது கோரிக்கைகள் தொடர்பில் நேற்றைய தினம் பல்கலைக்கழக மானியங்கள ஆணைக்குழுவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலே தோல்வியடைந்துள்ளதாகவும், இதனால் போராட்டம் தொடர்வதாகவும்…

Read More

கிழக்கு பல்கலையில் ஆர்ப்பாட்டம்

-ஜவ்பர்கான் – கிழக்கு பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் இன்று நண்பகல் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் பேராட்டங்களில் ஈடுபட்டனர். பல்கலை கழகத்தில் நிர்மாணிப்பதற்கென முன்னாள் உயர்கல்வி அமைச்சரால் அடிக்கல் நடப்பட்ட கட்டிடம் பூர்த்திசெய்யப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்படாமை மற்றும் மாணவர்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாமை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இவ்ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Read More

மாணவர் வருகை வழமைக்குத் திரும்பியது!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் வருகை இயல்பு நிலையை அடைந்துள்ளதாக, உயர் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அப் பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில், யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக, அப் பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. எதுஎவ்வாறு இருப்பினும் சில நாட்களுக்கு பின்னர் கல்வி நடவடிக்கைகள் மீளவும் வழமைக்குத் திரும்பின என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

யார் சொன்னாலும் போராட்டங்களை நிறுத்தமாட்டோம்

மாலபே சய்டம் தனியார் பல்கலைக்கழகம் பொய்களால் கல்வியை விற்பதற்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. பதிவு செய்த பெயர் முதலாக அனைத்துமே பொய்கள் தான் எனும் குற்றச்சாட்டினை பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் லகிரு முன்வைத்துள்ளார். அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இதனைத் தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், மாலபே சய்டம் தனியார் பல்கலைக்கழகம் அரச பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும், பிரதமர் ரணிலும் தற்போது தெரிவித்துள்ளனர்….

Read More