Headlines

பல்கலை புதிய கல்வி வருடத்திற்கான விண்ணப்பங்கள் கோரல்

பல்கலைக்கழகங்களில் புதிய கல்வி வருடத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. பல்கலைக்கழகத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிய கல்வி வருடத்திற்காக மாணவர்களை இணைத்து கொள்வதற்கான அனுமதி கையேடுகள் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இம்முறை வழங்கப்படவுள்ள கையேடானது மிகவும் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமான விடயங்கள் நாளை முதல் பத்திரிகைகள் ஊடாக விளப்பரப்படுத்தப்படும் என பல்கலைக்கழகங்கள் ஆணைக்குழு…

Read More

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் பேரணி

பல்கலைக்கழகத்திற்குள் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நாளை நடாத்தவுள்ளனர். பல்கலைக்கழகத்தினுள் காணப்படும் பல குறைப்பாடுகள் இதுவரை நிவர்த்தி செய்யப்படாமை,கல்வி தனியார் மயப்படுத்தல் மற்றும் பல்கலைக்கழக்திற்குள் பணம் வசூலித்தலை தடுத்தல் போன்ற பிரச்சினைகளை மையப்படுத்தி இந்தப் பேரணி நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கம் இதுவரை தீர்வினை பெற்றுக் கொடுக்காததாலேயே அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் ஒன்று திரட்டி இந்த பேரணியை ஏற்பாடு செய்திருப்பதாக அனைத்து பல்கலைக்கழக…

Read More

கொழும்பு நகரமண்டப பகுதியில் வாகன நெரிசல்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தால் கொழும்பு நகரமண்டப பகுதியில் வாகன நெரிசல்.

Read More

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் இன்று வரை திறக்கப்படவில்லை

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் எவ்வித காரணங்களுமின்றி மூடப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும், பல்கலைக்கழகம் இன்று வரை திறக்கப்படவில்லை என பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 15000 திற்கும் அதிகமான மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் அமில சந்தரூவன் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் கடமையாற்றவில்லை என தெரிவித்து ஜனவரி மாதம் 22ஆம் திகதி இந்த பல்கலைக்கழகம் மூடப்பட்டதாகவும், எனினும், ஊழியர்கள் சாதாரண பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் அனைத்து…

Read More

பல்கலைக்கழகங்களுக்கு மேலும் 2500 மாணவர்களை இணைக்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில்  இம்முறை பல்கலைகழகங்களுக்கு 2000 முதல்  2,500 வரையான மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழகக் கல்வி மற்றும், நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 2,000 மாணவர்கள் தொழில்நுட்பவியல் கற்கைநெறிக்கு ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டீ.சீ. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 5 பல்கலைகழகங்களில் தொழில்நுட்பவியல் கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

மாணவர்கள் தாக்குதல் விவகாரம்: பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

 கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்களின் தாக்குதலுடன் தொடர்புடைய  கடைநிலை பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு அறிவித்துள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நேற்று தெரிவித்தது. மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரிக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக, நேற்று வியாழக்கிழமை(26) நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் என்.ஆரியதாஸ தெரிவித்தார். இறுதி முடிவு, நேற்று வியாழக்கிழமை(26) இடம்பெற்ற விஷேட கூட்டத்தில்…

Read More

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நடைபயணம் தொடர்கிறது

இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்தி விற்பனை செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள நடைபயணம் நிட்டம்புவ நகரிலிருந்து இன்று தொடர்கின்றது. இந்த நடைபயணம் கண்டியில் ஆரம்பமாகியதோடு, தொடர்ச்சியாக 5 நாட்களாக கொழும்பு நோக்கி  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழக மாணவர்களின் அனுமதி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், பாடசாலைகளில் மாணவர்களிடம் நிதிதிரட்டும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும், மாலபே SAITM என்ற பட்டத்தை விற்பனை செய்யக்கூடாது போன்ற 6 கோரிக்கைகள் மாணவர்களால் முன்வைக்கப்பட்டு இந்த நடைபயணம்…

Read More

மாணவர்கள் மீதான தாக்குதல்: இன்று தீர்ப்பு!

தேசிய உயர் கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்ப்பு இன்றைய தினம் வெளியிடப்பட உள்ளது. தேசிய உயர் கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது. கடந்த 5ம் திகதி மாணவர்களினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் குறித்து மூவர் அடங்கிய ஆணைக்குழு விசாரணை நடத்தி செய்யப்பட்ட பரிந்துரைகள் தெடர்பில் இன்றைய தினம் தேசிய…

Read More

களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

களனி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 21 கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கும் அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை

பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு அரசுக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் அரசு மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளுவதாக எமது செய்தி சேவைக்கு இன்று வழங்கிய விசேட செவ்வியின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. எமது ஆட்சியின் கீழ் கடமையாற்றி வருகின்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு எமது…

Read More

மாணவர்கள் மீதான தாக்குதல்: இன்று விசாரணை!

உயர்தர தேசிய தொழில்நுட்ப கணக்காய்வாளர் டிப்ளோமா மாணவர்களின் போராட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக அந்த மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பித்த முறைப்பாட்டின் மீதான விசாரணை இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரியவருகின்றது. இந்த விசாரணை நேற்று முன்தினம் காலை எடுக்கப்படவிருந்த போதிலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸார் சிலர் விசேட கடமையொன்றுக்கு செல்லவேண்டியிருந்ததால், வேறொரு தினத்துக்கு அந்த விசாரணையை ஒத்திவைக்குமாறு விடுத்த வேண்டுகோளுக்கமைய விசாரணை இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று…

Read More

தூண்டிவிட்டு கொலை செய்ய முயற்சிக்கின்றீர்களா? பிரதமர் கேள்வி

மாணவர்களை தூண்டிவிட்டு அவர்களை கொலை செய்ய திட்டமிடுகின்றீர்களா? கடந்த காலங்களில் உங்கள் ஆட்சியில் கண்ட “இரத்த வெள்ளம்” போதாதா? என மஹிந்த ஆதரவு அணியினரை நோக்கி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் பொலிஸாரால் தாக்குதலுக்குள்ளானது தொடர்பில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன்போது சபைக்குள் மஹிந்த ராஜபக்ச ஆதரவு அணியின் எதிர்ப்பு கோஷங்களுடன் பதாதைகளை ஏந்தியவண்ணம் சபையில் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இச் சந்தர்ப்பத்தின்…

Read More