Headlines

ஐ.நா பிரதிநிதிகள் இலங்கை விஜயம்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இரண்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். நீதவான்கள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனத்தன்மை குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி மொனிகா பின்டோ மற்றும் சித்திரவதைகள் மற்றும் கொடூர நடவடிக்கைகள், பொருத்தமில்லா தண்டனை விதித்தல் தொடர்பிலான விசேட ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ஜூவான் மென்டோஸ் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். எதிர்வரும் 29ம் திகதி முதல் 6ம் திகதி வரையில் அவர்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பொரு­ளா­தாரத் தடை விதிக்கும் பட்­டி­யலில் இலங்கை

மனித வியா­பாரம் கார­ண­மாக பொரு­ளா­தாரத் தடை­வி­திக்கும் பட்­டி­யலில் இலங்கை இடம் பெற்­றுள்­ளது. கடந்த அர­சாங்கம் இது தொடர்­பாக எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­காமல் இருந்­துள்­ளது என வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார். மனித வியா­பா­ரத்­துக்கு எதி­ராக செயற்­படும் மத்­திய நிலையம் ஒன்றை நேற்று முன்­தினம் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில், வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு வியா­பாரம் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் என்­ப­துடன் சட்­ட­வி­ரோத செய­லாகும் என…

Read More

வாக்குறுதிகளை அமுல்படுத்துங்கள் – மன்னிப்புச் சபை

இலங்கை அளித்த வாக்குறுதிகளை அமுல்படுத்த வேண்டுமென அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. பொறுப்பு கூறுதல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் செயற்படுத்தப்பட வேண்டியத அவசியமானது என தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்த அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கியுள்ளது. எனினும், பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப இதுவரையில் சொற்பளவிலான நடவடிக்கைகளே இலங்கையில் எடுக்கப்பட்டுள்ளன….

Read More

ஜெனீவாத் தீர்மானம், இறையாண்மைக்குள் மூக்கை நுழைக்காது

– முருகவேல் சண்முகன் – ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக, பல்வேறுபட்ட தவறான எண்ணக்கருக்கள் காணப்படுவதாகத் தெரிவித்த மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கையின் இறையாண்மையிலும் சுதந்திரத்திலும் தலையிடும் முயற்சி அதுவல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அந்தத் தீர்மானம், இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் மனித உரிமைகளையும் ஊக்குவிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு…

Read More

ஹுஸைன்-ரணில் சந்தித்துப்பேச்சு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று(9)  இடம்பெற்ற சந்திப்பின் பொது எடுக்கப் பட்ட படங்கள்.

Read More

ஜனா­தி­பதி, பிர­தமரை இன்று சந்­திக்­கிறார் செயிட் அல் ஹுசைன்

இலங்­கைக்கு நான்கு நாள் உத்­தி­யோகபூர்வ விஜயம் மேற்­கொண்டு வரு­கை­தந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆகி­யோரை இன்­றைய தினம் (9) சந்­திக்­க­வுள்ளார். இவ்­வி­டயம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசை­னு­டைய இலங்­கை விஜ­யத்தின் இறுதி நாள் இன்­றாகும். இந்­நி­லையில் ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் இன்று காலை 8 மணிக்கு எதிர்க்­கட்­சி­யான தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை கொழும்­பி­லுள்ள உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் சந்­திக்­க­வுள்ளார்….

Read More

கடந்த அரசிற்கு ஐ.நா நன்றி தெரிவிக்க வேண்டும்

கடந்த அரசாங்கம் பயங்கரவாதத்தை  தோற்கடித்தமைக்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழு  நன்றி தெரிவிக்கவேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய  ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹொரணையிலுள்ள விஹாரை ஒன்றில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவானது புலம்பெயர்ந்தவர்களின் தேவைக்கு ஏற்பவே செயற்பட்டு வருவதாக அவர்  குற்றம்  சுமத்தியுள்ளார். எனினும் நாட்டினதும் நாட்டு மக்களினதும் நன்மைக்காக சிறைக்குச் செல்லவும் தயாரென அவர்…

Read More

வந்தடைந்தார் செயிட் அல் ஹூசைன்

ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைகள் ஆணை­யாளர் நாயகம் செயிட் அல் ஹூசைன் உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இன்று காலை 8.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். டுபாயிலிருந்து வந்த ஈகே650 என்ற விமானத்தில் வந்த செய்ட் அல் ஹூசைனுடன் 6 பிரதிநிதிகளும் வருகை தந்தனர்.  நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள செயிட் அல் ஹூசைன் எதிர்­வரும் 9 ஆம்­தி­கதி வரை நாட்டில் தங்­கி­யி­ருப்­ப­துடன் அரச தரப்பு, எதிர்த்­த­ரப்பு, சிவில் சமூ­கப்­பி­ர­தி­நி­திகள் உள்­ளிட்­டோரை…

Read More

பெப்.6இல் வருகிறார் ஹுஸைன்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்  ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், எதிர்வரும் சனிக்கிழமை (06) இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

டென்மார்க்கின் அகதிகள் சட்டத்துக்கு ஐ.நா. கண்டனம்

டென்­மார்க்­கிற்குச் செல்லும் அக­தி­களின் எண்­ணிக்­கையைக் குறைக்கும் நோக்கில், அந்­நாட்டு நாடா­ளு­மன்றம் சர்ச்­சைக்­கு­ரிய சட்டம் ஒன்றை ஏற்­றுக்­கொள்ள எடுத்த முடி­வுக்கு, ஐ.நா. கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது. அக­தி­களின் சில உடை­மை­களைக் கைப்­பற்ற அதி­கா­ரி­க­ளுக்கு அந்தச் சட்­டத்தின் கீழ் அதி­காரம் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அக­தி­களின் 1,500 டொலர்­க­ளுக்கு மேற்­பட்ட சொத்­துக்­களை பறி­முதல் செய்ய வழி செய்யும் இந்தச் சட்டம், அக­தி­களின் உற­வி­னர்கள் டென்மார்க் வரு­வ­தையும் கடி­ன­மாக்­க­வுள்­ளது. அக­தி­களால் நாட்­டிற்கு ஏற்­படும் செலவை ஈடு­கட்ட, அந்த நட­வ­டிக்கை உதவும் என்று டென்மார்க் கூறு­கி­றது. இத­னி­டையே ஐ.நா….

Read More

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்தே, பலஸ்தீனர்கள் தாக்குகின்றனர் – பான் கி மூன்

“இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே பலஸ்தீனர்கள் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்” என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் அண்மையில் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்தானது தீவிர வாத இஸ்ரேலுக்கு பெரும் இடியாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

ஐ.நா. அதிகாரிக்கு முன், துணிச்சலை வெளிப்படுத்திய றிஷாத்

இலங்கை முஸ்லிம்கள் என்றுமே ஜனநாயகத்தில் நாட்டம் கொண்டவர்கள் என்றும், தென்னிலங்கையிலும், வடக்கிலும் ஆயுதப் போராட்டம் தலைதூக்கி நாட்டை சீரழித்த காலத்தில் கூட அவர்கள் எந்தப் பக்கமும் சாராது, ஜனநாயக விழுமியங்களை பேணிப்  பாதுகாத்தவர்கள் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மனிதாபிமான விவகாரங்களுக்கான இலங்கையின் ஐ.நா வதிவிட இணைப்பாளர் சுபினே நந்தி தனது பதவிக்  காலத்தை முடித்துவிட்டு, ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுச் செல்வதை…

Read More