Headlines

ஆக்கிரமித்த நிலங்களை இஸ்ரேல் திருப்பி தர வேண்டும் – அப்பாஸ்

ஐ.நா. பொது சபை கூட்டத் தொடரில் பேசிய பாலஸ்தீனம் அதிபர் அப்பாஸ், போரின் போது தங்களிடம் இருந்து ஆக்கிரமித்த நிலங்களை இஸ்ரேல் திருப்பி தர வேண்டும் என்று வலியுறுத்தினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். அந்த வகையில் இன்று கூட்டத் தொடரில் பேசிய பாலஸ்தீனம் அதிபர் மஹ்மவுத் அப்பாஸ், போரின் போதுதங்களிடம் இருந்து எடுத்துக் கொண்ட நிலங்களை இஸ்ரேல்…

Read More

‘இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படாது’

“இலங்கையின் தேசிய நல்லிணக்கத்தை வலுவடையச் செய்யும் போதுஇ சுமார் 30 ஆண்டுகள் நிலவிய கொடூர யுத்தத்தை எதிர்கொண்ட ஒரு நாடு என்ற ரீதியில் எமக்கு கிடைத்த அனுபவங்களினூடாக மீண்டும் ஒரு முறை எச்சந்தர்ப்பத்திலும் யுத்தம் உருவாவதைத் தடுத்தல்இ நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிசெய்தல், தேசிய நல்லிணக்கத்தினூடாக இனங்களுக்கிடையே பலமான ஒற்றுமையை ஏற்படுத்தல் ஆகியவற்றினூடாக முன்னிலை வகிக்கும் ஒரு நாடாக இலங்கையை மாற்றுவதற்கு முன்னுரிமையளிக்கிறோம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் 71ஆவது பொதுச்சபைக்…

Read More

அஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி    

ஆயுபோவன், வணக்கம், அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வார்த்தைகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா கூட்ட தொடரில் தனது உரையினை ஆரம்பித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 71வது கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா சென்றிருந்தார். இந்நிலையில், சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா கூட்ட தொடரில் தனது உரையினை நிகழ்த்தியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை 2017ஆம் ஆண்டு ஏழ்மையில் இருந்து விடுதலை அடையும் ஆண்டாக பெயரிடப்பட்டுள்ளது. புதிய…

Read More

முக்கியத்துவம் வாய்ந்த ஐ.நா பொதுச் சபைக் கூட்டம்!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டம் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நியூயோர்க்கிலிருந்து கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ம் பொதுச்சபைக் கூட்டம் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கைக்கு முக்கியத்துவம் மிக்கதாக அமைந்துள்ளது. இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்பது சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் முன்வைக்கப்படும் மற்றுமொரு நகர்வாகும்….

Read More

மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 33ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இலங்கை விவகாரம் இம்முறை விவாதத்துக்கு உட்படுத்தப்படாதபோதும், எதிர்வரும் வியாழக்கிழமை பலவந்தமாக காணாமல் போதல்கள் தொடர்பான ஐ.நா.செயற்குழுவின் அறிக்கையில் இலங்கை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போதல்கள் இலங்கையில் நீண்டகாலமாக இழுபட்டுவரும் விடயமாக காணப்படும் சூழ்நிலையில், 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பலவந்த காணாமல் போதல்கள் தொடர்பான செயற்குழுவினர் தமது விஜயத்தின் அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர். எனினும், ஐ.நா மனித…

Read More

இலங்கையின் கடல் வலயம் 2020 அதிகரிக்கும்!

இலங்கைக்கு சொந்தமான கடல் வலயம் 2020ம் ஆண்டளவில் மேலும் அதிகரிக்கப்படும் என கடற்றொழில் அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சர்வதேச கடற்பரப்பிற்கு சொந்தமான கடல் பகுதி இலங்கைக்கு சொந்தமாகவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையை போன்று 60 மடங்கு வரையான கடற்பரப்பு தற்போது இலங்கைக்குச் சொந்தமாக உள்ளது எனவும், எதிர்காலத்தில் மேலும் இலங்கையைப் போன்று 23 மடங்கு கடற்பரப்பு சொந்தமாகும் எனவும் அமைச்சு கூறியுள்ளது. இந்த விடயம் குறித்து அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாகவும்,…

Read More

இலங்கை குழுந்தைகள் தொடர்பில் யுனிசெப் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் 2 இலட்சம் சிறுவர்கள் உயரம் குறைந்தவர்களாக உள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 3 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள்மெல்லிய தோற்றத்துடன் காணப்படுவதாகவும் யுனிசெப் நிறுவனத்தின் ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 4 மில்லியனுக்கு அதிகமான இலங்கை சிறுவர்கள் இரத்த சோகை நோயிற்கு உள்ளாகியிருப்பதாகவும் யுனிசெப் நிறுவனத்தின் வைத்தியர் காமினி ஜயக்கொடி தெரிவித்துள்ளார். காலி மாவட்ட பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் பாடசாலை சிறுவர்களின் விளையாட்டு…

Read More

இலங்கை குறித்­த வாய்மூல அறிக்­கையை எதிர்­பார்த்­தி­ருக்­கி­றோம்

இலங்கை விவ­காரம் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைனின் வாய்­மூல அறிக்­கையை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம். அதன் பின்னர் ஐரோப்­பிய ஒன்­றியம் இலங்கை தொடர்­பான விப­ர­மான அறிக்­கையை முன்­வைக்கும் என்று ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜெனி­வா­வுக்­கான பிர­தி­நிதி ரொடரிக் ச்ரிவேன் தெரி­வித்தார். ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 32 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனீவாவில்  ஆரம்­ப­மா­னது. அதில் உரை நிகழ்த்­து­கை­யி­லேயே ஐரோப்­பிய ஒன்றியத்தின் ஜெனி­வா­வுக்­கான பிர­தி­நிதி ரொடரிக் ச்ரிவேன் மேற்­கண்­ட­வாறு குறிப்பிட்டார். ஐரோப்­பிய…

Read More

மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் 32வது அமர்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பமாகும் குறித்த அமர்வுகளானது ஜுலை மாதம் முதலாம் திகதி வரை நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பாக இங்கு ஆராயப்படவுள்ளதோடு, இலங்கை தொடர்பிலும் மிகுந்த அவதானம் செலுத்தப்படும் என நம்பப்படுகின்றது. இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை…

Read More

’11 மாவட்டங்களில் ஐ.நா கூட்டு கணிப்பீடு’

‘அடிமட்டக் களத் தேவைகள் பற்றிய மேலும் தகவல் பெறுவதற்காக, சர்வதேச தொண்டு நிறுவனங்கள்,  இலங்கையிலுள்ள 11 மாவட்டங்களிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து, விரைந்த கூட்டு கணிப்பீடுகளை ஒழுங்கு செய்திருக்கின்றன’ என ஐ.நா விளக்கமளிப்புக் கூட்டத்தின் போது  தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்ரீபன் துஜாரி, ‘கூட்டு மூலவள இணைப்பு முயற்சிகளில், உள்நாட்டு ஐ.நா ஒத்திசைவு மற்றும் உதவி நிறுவனங்களைப் பலப்படுத்த மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகமும் (OCHA) உதவிசெய்தது’ என்றார். …

Read More

ஐ.நா பொதுசபை விஷேட அமர்வு ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஜக்கிய மற்றும் நல்லிணக்க தலைவர்களின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐ.நா பொதுச்சபை விஷேட அமர்வில் உரையாற்றவுள்ளார். இந்த விஷேட அமர்வு இன்றும் (10) நாளையும் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ளது. இதன் தொனிப்பொருள் சர்வதேச பாதுகாப்பும் சமாதானமும் என்பதாகும். இதன்போது இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லிணக்க நடைமுறை பற்றி அவர் உரையாற்றவுள்ளார். புதிய தொடர்புகள் மற்றும் பதிலளிப்புக்களுக்கூடாக முன்னோடியான தலைமைத்துவம் என்பது இந்த விசேட அமர்வின் தொனிப்பொருளாகும். ஐ.நா பொதுச்சபையின் தலைவர் விஷேட அமர்வை ஏற்பாடு…

Read More

சுற்றுலாத்துறைக்கான சர்வதேச மாநாடு!

ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்துடன் இணைந்து சுற்றுலாத்துறை தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றினை எதிர்வரும் ஜுலை மாதம் 11 முதல் 14 ஆம் திகதி வரையான நான்கு நாட்கள் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ‘அபிவிருத்தி, சாமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு சுற்றுலாத்துறை ஓர் ஊக்கியாக’ என்ற தலைப்பின் கீழ் சர்வதேச மாநாட்டினை நடாத்துவதற்கு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சும் அதன் கீழ் இயங்கும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் ஒழுங்குகளை மேற்கொண்டு…

Read More